Category: பதிவு

வல்லினம் இளம் எழுத்தாளர் விருது விழா : சில நினைவுகள் (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன)

எழுத்தாளர் அரவின் குமாருக்கு இளம் எழுத்தாளர் விருது வழங்குவது குறித்து நண்பர்களிடையே எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. 2020க்குப் பின்னர் எழுத வந்தவர்களில் அரவின் குமார் தனித்துவமானவர். புனைவு, அ-புனைவு என இரண்டிலும் இடைவிடாது இயங்குபவர். அவரை ஊக்குவிப்பதும் அடையாளப்படுத்துவதும் வல்லினம் குழுவின் பொறுப்பு என்பதை அனைவருமே அறிந்திருந்தோம். விருது வழங்குதல் என்பது பணத்தையும் பரிசையும்…

வல்லினம் இலக்கிய முகாம் (2024) அனுபவம்

நவம்பர் 29ஆம் திகதி வெள்ளி மதியம், நான், லதா, பாரதி மூவரும் சிங்கையிலிருந்து கோலாலம்பூர் வந்து இறங்கினோம். சிங்கையில் காலையில் இருந்தே அடை மழை பிடித்துக் கொண்டது. வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு டாக்சி கிடைத்ததே அதிர்ஷ்டம்தான். விமானமும் அரை மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. சுபாங் விமான நிலையம் வந்திறங்கி அங்கிருந்து முகாம் நடைபெறவிருந்த…

வல்லினம் இலக்கிய முகாம் – சிறுகதை அமர்வு

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் திகதிகளில் நிகழ்ந்த வல்லினம் இலக்கிய முகாமில் ஜா. ராஜகோபாலன் வழிநடத்த, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த வாசகர்களும் படைப்பாளிகளும் ஒன்றாக அமர்ந்து மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியப் படைப்புகளை வாசித்து விவாதித்தோம். இந்த நிகழ்வு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்,அமைந்துள்ள YMCA ஹோட்டலில் நடந்தேறியது. நவம்பர் முப்பதாம் திகதி…

சங்கப் பாடல் கற்றல் கற்பித்தலில் அபத்தமும் அதை நுகரும் ஆழமும்

பாட்டு என்பது மொழியின் உச்ச வடிவம். ஒரு மொழியானது வளப்பத்தையும் அதன் முதிர்ச்சியையும் நுட்பத்தையும் அடைவது பாட்டு வடிவத்தில்தான். தன்னைப் பற்றியும் தன்னைச் சார்ந்துள்ள சமூகத்தையும் இயற்கையையும் சொற்செறிவுடன் பண்தொடுத்து அணிப்பூட்டி மொழியில் அழகுப்பட தொடுப்பதே பாட்டு. சொல் நயம், பொருள் நயம், உணர்ச்சிச் செறிவு, சுதந்திரப் போக்கு, கற்க கற்க முடிவில்லா புதுச்சுவை தருதல்…

வல்லினம் முகாம் – பக்தி இலக்கியம் அமர்வு

கடந்த 30 நவம்பர் 2024 தொடங்கி 1 டிசம்பர் 2024 வரை கோலாலம்பூரில் அமைந்துள்ள YMCAவில் வல்லினம் இலக்கிய முகாம் நடந்தேறியது. இம்முகாமில் சங்கப்பாடல், நவீன கவிதை, சிறுகதை, பக்தி இலக்கியம், நாவல் போன்ற படைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. ஒவ்வொரு அமர்வையும் எழுத்தாளர் ஜா. ராஜகோபாலன் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வழிநடத்தினார். அவ்வகையில் டிசம்பர் 1 காலையில்…

வல்லினம் இலக்கிய முகாம் – நவீன கவிதைகள் அமர்வு

வல்லின இலக்கிய முகாமில் இரண்டாவது அமர்வாக அமைந்தது கவிதைகள் குறித்த உரையாடல். ‘பொருள்வயின் பிரிவு’, ‘பணி செய்து கிடத்தல்’, ‘எண்ணும் எழுத்தும்’, ‘காலத்தின் இலை’ மற்றும் ‘மெய்மையின் சுவை’ என முறையே கவிஞர் விக்ரமாதித்யன், கவிஞர் இசை, கவிஞர் மோகனரங்கன், கவிஞர் அர்ஜுன்ராச் மற்றும் கவிஞர் கார்த்திக் நேத்தாவின் கவிதைகள் அமர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. பிரதானமாகக்…

வல்லினத்தின் விமர்சன முகாம்: ஓர் அனுபவம்

வல்லினம் ஏற்பாட்டில் மார்ச் மாதம் 3 & 4-ஆம் திகதிகளில் களும்பாங்கில் உள்ள மை ஸ்கில் அறவாரிய வளாகத்தில் நடந்த ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையைச் சமர்ப்பிக்கும் நல்வாய்ப்பும் அமைந்தது.  நான், இது நாள் வரை எந்த இயக்கம் சார்ந்தும் இயங்காததால் இது எனக்கொரு புது அனுபவமாக இருந்தது. ஓர் இயக்கத்தின்…

லா.ச.ராமமிருதத்தின் சிறுகதைகள்

தமிழ்ப் புனைவிலக்கியத்தில் தன்னுடைய தனித்துவமான நடைக்காகவும் மீபொருண்மை சித்திரிப்புக்காகவும் முக்கியமான எழுத்தாளராக லா.ச.ராமமிருதம் கருதப்படுகிறார். மலேசியச் சூழலில் லா.ச.ராமமிருதத்தின் மனமொழியும் சிந்தனையும் முயங்கும் எழுத்துநடை சார்ந்த பாதிப்பை எழுத்தாளர் சீ.முத்துசாமியின் எழுத்துகளில் காணலாம். அதைத் தவிர, லா.ச.ராமமிருதத்தின் எழுத்துகள் குறித்த வாசிப்பும், கலந்துரையாடலும் மலேசிய வாசகச்சூழலில் அதிகமும் இடம்பெறவில்லை. தமிழாசியா மாதந்தோறும் நடத்தி வரும் சிறுகதை…

ஆழம்: தட்டையான புனைவு

மலேசியாவில் எழுதப்படும் புனைவுகளைப் பரந்த வாசிப்புக்குக் கொண்டு செல்லவும் அவை குறித்து அரோக்கியமான திறனாய்வு போக்கை உண்டாக்கவும் மார்ச் 2 முதல் மார்ச் 3 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய முகாம் உற்சாகமாக நடந்து முடிந்தது. இம்முகாமின் நான்காவது அங்கத்தில் சீ. முத்துசாமி எழுதிய ‘ஆழம்’ நாவல் குறித்து விமர்சன…

கரிப்புத் துளிகள்: நிகழ மறுக்கும் அற்புதம்

கடந்த மார்ச் 2,3 ஆகிய தினங்களிள் வல்லினத்தின் ஏற்பாட்டில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடந்து முடிந்த விமர்சன முகாமில்   எழுத்தாளர் அ. பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவல் குறித்த விமர்சன அரங்கும் இடம்பெற்றது. முகாமின் ஐந்தாவது அமர்வில் மூவர் அந்நாவல் தொடர்பான விமர்சனத்தை முன்வைத்ததோடு அதையொட்டிய கேள்விகளும் விவாதங்களும் என இரண்டு மணி நேரம் அவ்வமர்வு…

தாரா: நிபந்தனையற்று மன்னித்தலின் தரிசனம்

மார்ச் 2,3 ஆகிய நாட்களில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்த வாசிப்பு – விமர்சன முகாமில் 3 மார்ச் அன்று ஆறாவது அமர்வில் ‘தாரா’ நாவல் குறித்து ரேவின், புஷ்பவள்ளி, சுதாகர் ஆகியோர் உரையாற்றினர். மூவருமே வெவ்வேறு கோணத்தில் நாவலை அணுகினர். முதலாவதாக ரேவின் பேசினார். “ஒரு புனைவை வாசிக்கும்போது அதில் உள்ள…

இளந்தமிழன் சிறுகதைகள்: பொது உண்மைகளின் பெட்டகம்

கடந்த 2 மார்ச் 2024 முதல் 3 மார்ச் 2024 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நிகழ்ந்த வல்லினம் முகாமின் இரண்டாவது அமர்வில் எழுத்தாளர் இளந்தமிழன் எழுதிய ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்நூலில் மொத்தம் 45 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ‘இளந்தமிழன் சிறுகதை’ நூலைக் குறித்து எழுத்தாளர்கள் கோ. புண்ணியவான்,…

தேவதைகளைத் தேடும் சிறுகதைகள்

மார்ச் 2,3 ஆகிய இரண்டு நாட்கள் ‘வல்லினம் விமர்சன முகாம் – 4’ மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடைபெற்றது. மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த புத்தகங்கள் குறித்த வாசக கலந்துரையாடல் அது. இந்த முகாமின் கலந்துரையாடலுக்காக மூன்று நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 20 பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபெற்றனர். ஒவ்வொரு…

முரண்: பழமைவாதத்தின் பரண்

வல்லினத்தின் முன்னெடுப்பில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் 2 மார்ச் முதல் 3 மார்ச் 2024ஆம் ஆண்டு நடந்த இலக்கிய வாசிப்பு முகாமில்2022ஆம் ஆண்டு வெளிவந்த எழுத்தாளர் ந. பச்சைபாலனின் ‘முரண்’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதல் அமர்வில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 20 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பையொட்டி எழுத்தாளர்கள் ஆதித்தன், சாலினி, குமரன் ஆகியோர்…

சுந்தர ராமசாமி சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்

தமிழாசியாவின் சிறுகதை வாசிப்புப் பகிர்வு 2023 ஏப்ரல் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் முதன்மையான ஆளுமைகளும் அவர்களின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளும் இந்தக் கலந்துரையாடல்களில் விரிவாக ஆராயப்படுகிறது. அவ்வகையில் கடந்த முறை (20.1.2024) எட்டாவது சந்திப்பில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம், விகாசம் ஆகிய சிறுகதைகள் உரையாட எடுத்துக்கொள்ளப்பட்டன.…