Category: பதிவு

வல்லினத்தின் விமர்சன முகாம்: ஓர் அனுபவம்

வல்லினம் ஏற்பாட்டில் மார்ச் மாதம் 3 & 4-ஆம் திகதிகளில் களும்பாங்கில் உள்ள மை ஸ்கில் அறவாரிய வளாகத்தில் நடந்த ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையைச் சமர்ப்பிக்கும் நல்வாய்ப்பும் அமைந்தது.  நான், இது நாள் வரை எந்த இயக்கம் சார்ந்தும் இயங்காததால் இது எனக்கொரு புது அனுபவமாக இருந்தது. ஓர் இயக்கத்தின்…

லா.ச.ராமமிருதத்தின் சிறுகதைகள்

தமிழ்ப் புனைவிலக்கியத்தில் தன்னுடைய தனித்துவமான நடைக்காகவும் மீபொருண்மை சித்திரிப்புக்காகவும் முக்கியமான எழுத்தாளராக லா.ச.ராமமிருதம் கருதப்படுகிறார். மலேசியச் சூழலில் லா.ச.ராமமிருதத்தின் மனமொழியும் சிந்தனையும் முயங்கும் எழுத்துநடை சார்ந்த பாதிப்பை எழுத்தாளர் சீ.முத்துசாமியின் எழுத்துகளில் காணலாம். அதைத் தவிர, லா.ச.ராமமிருதத்தின் எழுத்துகள் குறித்த வாசிப்பும், கலந்துரையாடலும் மலேசிய வாசகச்சூழலில் அதிகமும் இடம்பெறவில்லை. தமிழாசியா மாதந்தோறும் நடத்தி வரும் சிறுகதை…

ஆழம்: தட்டையான புனைவு

மலேசியாவில் எழுதப்படும் புனைவுகளைப் பரந்த வாசிப்புக்குக் கொண்டு செல்லவும் அவை குறித்து அரோக்கியமான திறனாய்வு போக்கை உண்டாக்கவும் மார்ச் 2 முதல் மார்ச் 3 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய முகாம் உற்சாகமாக நடந்து முடிந்தது. இம்முகாமின் நான்காவது அங்கத்தில் சீ. முத்துசாமி எழுதிய ‘ஆழம்’ நாவல் குறித்து விமர்சன…

கரிப்புத் துளிகள்: நிகழ மறுக்கும் அற்புதம்

கடந்த மார்ச் 2,3 ஆகிய தினங்களிள் வல்லினத்தின் ஏற்பாட்டில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடந்து முடிந்த விமர்சன முகாமில்   எழுத்தாளர் அ. பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவல் குறித்த விமர்சன அரங்கும் இடம்பெற்றது. முகாமின் ஐந்தாவது அமர்வில் மூவர் அந்நாவல் தொடர்பான விமர்சனத்தை முன்வைத்ததோடு அதையொட்டிய கேள்விகளும் விவாதங்களும் என இரண்டு மணி நேரம் அவ்வமர்வு…

தாரா: நிபந்தனையற்று மன்னித்தலின் தரிசனம்

மார்ச் 2,3 ஆகிய நாட்களில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்த வாசிப்பு – விமர்சன முகாமில் 3 மார்ச் அன்று ஆறாவது அமர்வில் ‘தாரா’ நாவல் குறித்து ரேவின், புஷ்பவள்ளி, சுதாகர் ஆகியோர் உரையாற்றினர். மூவருமே வெவ்வேறு கோணத்தில் நாவலை அணுகினர். முதலாவதாக ரேவின் பேசினார். “ஒரு புனைவை வாசிக்கும்போது அதில் உள்ள…

இளந்தமிழன் சிறுகதைகள்: பொது உண்மைகளின் பெட்டகம்

கடந்த 2 மார்ச் 2024 முதல் 3 மார்ச் 2024 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நிகழ்ந்த வல்லினம் முகாமின் இரண்டாவது அமர்வில் எழுத்தாளர் இளந்தமிழன் எழுதிய ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்நூலில் மொத்தம் 45 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ‘இளந்தமிழன் சிறுகதை’ நூலைக் குறித்து எழுத்தாளர்கள் கோ. புண்ணியவான்,…

தேவதைகளைத் தேடும் சிறுகதைகள்

மார்ச் 2,3 ஆகிய இரண்டு நாட்கள் ‘வல்லினம் விமர்சன முகாம் – 4’ மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடைபெற்றது. மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த புத்தகங்கள் குறித்த வாசக கலந்துரையாடல் அது. இந்த முகாமின் கலந்துரையாடலுக்காக மூன்று நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 20 பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபெற்றனர். ஒவ்வொரு…

முரண்: பழமைவாதத்தின் பரண்

வல்லினத்தின் முன்னெடுப்பில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் 2 மார்ச் முதல் 3 மார்ச் 2024ஆம் ஆண்டு நடந்த இலக்கிய வாசிப்பு முகாமில்2022ஆம் ஆண்டு வெளிவந்த எழுத்தாளர் ந. பச்சைபாலனின் ‘முரண்’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதல் அமர்வில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 20 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பையொட்டி எழுத்தாளர்கள் ஆதித்தன், சாலினி, குமரன் ஆகியோர்…

சுந்தர ராமசாமி சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்

தமிழாசியாவின் சிறுகதை வாசிப்புப் பகிர்வு 2023 ஏப்ரல் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் முதன்மையான ஆளுமைகளும் அவர்களின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளும் இந்தக் கலந்துரையாடல்களில் விரிவாக ஆராயப்படுகிறது. அவ்வகையில் கடந்த முறை (20.1.2024) எட்டாவது சந்திப்பில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம், விகாசம் ஆகிய சிறுகதைகள் உரையாட எடுத்துக்கொள்ளப்பட்டன.…

ஜெயகாந்தன் சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்

தமிழ் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்ட மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனை அறியாத இலக்கிய வாசகர்கள் மிக அரிது. என் நவீன இலக்கிய வாசிப்பைக்கூட ஜெயகாந்தனின் எழுத்துகளின் மூலமே தொடங்கினேன். தமிழாசியாவில் தொடர்ந்து நடத்தப்படும் சிறுகதை கலந்துரையாடலில் இம்முறை(17.2.2024) ஜெயகாந்தனின் சிறுகதைகள் கலந்துரையாடப்பட்டது மிகுந்த மன நெருக்கத்தைக் கொடுத்தது. ‘நான் இருக்கிறேன்’, ‘முன்…

விஷ்ணுபுரம் அரங்கில் எஸ். எம். ஷாகீருடன் உரையாடல்

தமிழ்ச்சூழலில் பிறமொழி இலக்கியங்கள் குறிப்பாகக் கிழக்கத்திய மொழி இலக்கியங்கள் குறித்த அறிமுகங்களும் விவாதங்களும் மிகக் குறைவாகவே நடைபெற்றிருக்கின்றன. தென்கிழக்காசிய மொழிகளில் ஒன்றான மலாய் மொழியின் இலக்கியமும் அவ்விதமே ஒப்பு நோக்க தமிழ்ச்சூழலில் குறைவாகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மலாயை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்த போதிலும் மலாய் மொழி இலக்கியங்கள்…

கு. அழகிரிசாமியை வாசிக்கும் முறை

‘தமிழாசியா’ மாதம் ஓர் எழுத்தாளரை அறிமுகம் செய்துவைக்கும் வண்ணம் தொடர்ச்சியாகச் சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெவ்வேறு நிலையிலான இலக்கிய வாசிப்புப் பயிற்சி கொண்ட எட்டுப் பேர் பங்குகொண்டு வருகிறோம். ஆகஸ்ட் 19ஆம் திகதி நான்காவது சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், இருவர்…

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா 2023

வல்லினம் மற்றும் யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ் சிறுகதை போட்டி ஆகியவற்றுக்கான பரிசளிப்பு விழாவாக அது அமைந்தது. இவ்விரு பதிப்பகங்களின் நிர்வாகி எழுத்தாளர் ம.நவீனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. எழுத்தாளர் கி.…

வல்லினம் & GTLF: மூன்று நாள் இலக்கியப் பெருவிழா

நான் கடைசி நேரத்து பணிக்குவியல்களை விரும்பாதவன். அரக்கபரக்க பூர்த்தியாகும் செயல்பாடுகள், நேர்த்தியற்ற விளைபயன்களையே கொடுக்கும் என உறுதியாக நம்புபவன். இவ்வருட இலக்கிய விழா, பிரம்மாண்டமானது என்றும் அதை ஒட்டிய பணிகள் வலுவானவை என்பதையும் நான் அப்பேச்சு தொடங்கப்பட்ட காலத்திலேயே அறிவேன். எனவே, மே மாதமே அதன் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கத் தொடங்கியிருந்தோம். என்னளவில் விழா என்பது…

வல்லினம் & GTLF இலக்கிய விழா காணொளிகள்

தமிழ் விக்கி அறிமுக விழா காணொளிகள் வரவேற்புரை ம.நவீன்தலைமை உரை அருண் மகிழ்நன் தமிழ் விக்கி கலந்துரையாடல் எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புரை தமிழ் விக்கி பங்களிப்பாளர்களுக்கு நினைவு பரிசு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஹேம்லட் ரோமியோ ஜூலியட் ஒத்தெல்லோ வழக்கறிஞர் சி. பசுபதி உரை பி. கிருஷ்ணன் உரை நாடக இயக்குனர் விஸ்வநாதன் உரை பி. கிருஷ்ணன்…