Author: இளம்பூரணன் கிராமணி

தாராவின் அரசியல்

பொதுவாகவே எனக்கு தமிழ்நாட்டு நாவல்களை வாசிப்பதைக் காட்டிலும் மலேசிய நாவல்கள் வாசிப்பது மிகப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நாவல்களில் காட்டப்படுகின்ற வாழ்க்கைக்கு நெருக்கமான அல்லது பழகிவிட்ட மலேசியச் சூழல்கள், மலேசிய எழுத்தாளர்களின் எளிய வாசிப்புக்கு உகந்த எழுத்து நடை, பலத்தரப்படாத வாசிப்பு நிலை, வெகுஜன இரசனையை எதிர்பார்க்கும் வாசிப்பு மனம் என எதை…

அசோகமித்திரனை அறிதல்

கலை என்பது குறியீடுகளின்வழி உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்புப்படுத்தும் முறை என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். ஒலிக் குறியீடுகள் இசைக் கலை ஆகின்றன, உடல் அசைவின் குறியீடுகள் கூத்துக் கலையாகின்றன, காட்சிகளின் குறியீடுகள் ஓவியக் கலையாகின்றன. அதுபோலவே சொற்களின்/ மொழியின் குறியீடுகள் இலக்கியக் கலையாகின்றன. இப்படிச் சொற்கள் உணர்த்தும் குறியீடுகளைப் புரிந்து கொள்ளும்போது இலக்கியம் நம் வசப்படுகிறது. இலக்கியக்…

சிகண்டி: கலை உருவாக்கும் வாழ்வின் புதிய மதிப்பீடுகள்

‘பேய்ச்சி’க்குப்பின் நவீனின் இரண்டாவது நாவல் ‘சிகண்டி’. ‘பேய்ச்சி’ நாவல் தடை ஏற்படுத்திய இலக்கிய அதிர்வே ஓயாத நிலையில் நவீனின் இந்நாவல் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளைச் சுமந்து வெளிவந்துள்ளது. ம. நவீனின் படைப்புகளைச் சார்ந்து எதிரும் புதிருமாக ஓர் இலக்கிய வட்டம் காத்திருக்கிறது என்றாலும் அப்புனைவை ஒட்டிய ஆக்ககரமான கட்டுரைகள், விமர்சனங்கள் தொடர்ந்து பிரசுரமாவது ஆரோக்கியமான இலக்கியச்…

இந்துஜா சிறுகதைகள்: தெப்பக்குளத்தில் தேங்கிய நீர்

இந்துஜா ஜெயராமன் மலேசிய தமிழ்ப் புனைவுலகத்தின் அண்மைய வரவு. மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நாவல் ஒன்றையும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுத் தனக்கென இலக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் என ஒரு சிலரால் புகழ் மாலைகள் சூட்டப்பட்டும் வருகிறார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஜெ.இந்துஜா ஜெயராமன் சிறுகதைத்…

அடுத்த அறுவடைக்கான உரமிட்ட மண்

‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்: வரலாறும் புனைவும்’ என்ற கட்டுரைத் தொகுதி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சிவானந்தம் நீலகண்டனால் படைக்கப்பட்டுள்ளது. முதலாவது சிங்கைநேசன் தமிழ் வார இதழின் தரவுகளின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டில் சிங்கைத் தமிழர்களின் வாழ்வியல் பதிவு. அடுத்தது சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவின் பதிவு.  

உச்சை: தருணங்களை வியப்பாக்கும் கதைகள்

இன்று மலேசியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக இலக்கியப் புனைவுகளின்வழி தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் ம.நவீன். கவிதை, கட்டுரை, நாவல், விமர்சனம், பயண இலக்கியம், நேர்காணல்கள் என நீளும் படைப்புகளின் வரிசையில் அவரின் சிறுகதைகள் அதன் தனித்தன்மைகளால் சிறப்பிடம் பெறுகின்றன.  நவீனின் 90 விழுக்காடு சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவரின் முதல் சிறுகதை தொகுப்பு மண்டை ஓடி 2015இல் வெளியீடு…

பேய்ச்சி: தமிழர் மானுடவியல் ஓர் அலசல்

யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம்.  அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில்…

கைதிகள் கண்ட கண்டம்

பயண இலக்கியங்கள் என்பது பயணித்தவரின் பட்டறிவு பதிவுகள். பயண நகர்வுகளில் காட்சிவழி பெற்ற புற அனுபவங்களையும் அதனூடே அமைதியாக சில கணங்கள், ஆர்ப்பரிபோடு சில பொழுதுகள், அழுத்தமாகச் சில தருணங்கள் போன்ற மிக நுட்பமான அக வெளிபாடுகளையும் சேர்த்து சுவைப்படத் தருவதே பயண இலக்கியங்களின் இயல்பு. “பிறரது வாழ்க்கை அனுபவங்களை நாம் நம் வாழ்க்கைக்கு எடுத்துப்…

எதையும் மிச்சம் வைக்காதவர்கள்

மனித இனத்தின் வாழ்வியல் இருத்தல் தடங்கள்தான் வரலாறு ஆகிறது. அவ்வரலாறுகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்தும் செயல்பாடுளில் மிக முக்கியமானது வரலாற்று இலக்கியப் புனைவுகள். எல்லாப் புனைவுகளும் ஏதோ ஒருவகையில் ஏதாவதொன்றின் வாழ்வியலைப் பதிவு செய்துகொண்டுதான் வருகின்றன. அவை கலைநுட்பமாகக் காட்சிப்படுத்தப்படும்போது இலக்கியம் எனும் தகுதியைப் பெற்று மிளிர்வதைக் காணமுடிகிறது. 1970கள் தொட்டே கவிதை, நாவல், சிறுகதைகள்…

அழகியும் அப்பா சொன்ன கதையும்

யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று அப்பா சொல்லிக் கொண்டிருந்த கதைக்கு ‘ஊங்’ கொட்டியவாறே கீழே சிதறிக் கிடந்த விளையாட்டுப் பொருள்களுக்கு உயிர் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள் அழகி. அவளின் கைகால்கள் தன்னைச் சுற்றி இருந்த விளையாட்டுப் பொருள்களில் பரபரத்துக் கொண்டிருந்தாலும் அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் கதையைக் காதுகள் மட்டும்…

வல்லினம் 100 ஆய்வுக்கட்டுரைகள் – ஒரு பார்வை

‘சொல் புதிது சுவை புதிது’ வல்லினம் 100-இல் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும்சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய கூறுகள். எங்கும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடியே உணர்ச்சி மிகையில்லாமல் பதிவாக்கப்பட்டிருப்பது கட்டுரைகளின் பலம். மொழி, இனம், இலக்கியம், இதழியல், கல்வி, அரசியல் என பல்துறை சார்ந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே…