Author: அரவின் குமார்

அ. ரெங்கசாமியும் மூன்று கதைகளும்

எழுத்தாளர் அ.ரெங்கசாமி காலமாகியச் செய்தியை எழுத்தாளர் ம.நவீன் புலனத்தில் இட்டிருந்த அறிவிப்பின் வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன். அன்றிரவே அவருக்கு அஞ்சலி செலுத்த அவருடைய வீட்டுக்கு நானும் சண்முகாவும் சென்றோம். சவப்பேழையில் கன்னமெல்லாம் ஒடுங்கிப் போய் ரெங்கசாமி கிடத்தப்பட்டிருந்தார். கைக்கூப்பி வணங்கிவிட்டு வெளியில் வந்தேன். பொதுவாகவே, எழுத்தாளர்களையோ ஆளுமைகளையோ நேரில் சந்திப்பதில் எனக்குச் கூச்சம் அதிகம். அப்படி…

நுண்மைகளின் கலைஞன்

தமிழாசியாவின் ஏற்பாட்டில் மாதந்தோறும் நடந்து வரும் சிறுகதை கலந்துரையாடலில் கடந்த ஜனவரி மாதம் எழுத்தாளர் வண்ணதாசனின் ‘தனுமை’, ‘சமவெளி’, ‘நிலை’, ‘தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள்’ ஆகிய நான்கு சிறுகதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வண்ணதாசனின் படைப்புலகத்தைப் பற்றிய எழுத்தாளர் ம. நவீனின் அறிமுகத்துடன் கலந்துரையாடல் தொடங்கப்பட்டது. வண்ணதாசன் படைப்புகளின் வாசிப்பனுபவம் சங்கப்பாடல்களை வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கு…

என்றுமுள்ள உண்மையும் தொடரும் வாழ்வும்

‘மண்ணும் மனிதரும்’ நாவலை வாசித்து முடித்த பின்னர் தமிழ்விக்கி தளத்துக்குச் சென்று எழுத்தாளர் சிவராம் காரந்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் பதிவை வாசித்தேன். கலைக்களஞ்சியத் தொகுப்புகள், சூழியல் செயற்பாடுகள், யக்ஷ கான கலை மீட்டுருவாக்கம் எனப் பிரமிக்கத்தக்க அறிவு பங்களிப்பைக் கன்னட அறிவுலகத்துக்கு விட்டுச் சென்றிருக்கிறார். கட்டுரையின் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருந்த சுட்டியைச் சொடுக்கி காரந்த் யக்ஷ கானக்…

“இந்த விருதினால் எனது வாழ்வில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை” ஹான் காங்

இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்று, உலக அரங்கில் கொரிய எழுத்தாளர்களின் வளமான கதைகளின் மீது கவனத்தை ஏற்படுத்தியுள்ளார் 54 வயது தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் (Han Kang). இலக்கிய உலகம் மிகப் பரந்தது. நோபல் விருது போன்ற அனைத்துலக அங்கீகாரங்கள் உலகின் எல்லா மூலைகளுக்கும் இலக்கிய ஆளுமைகளை அறிமுகப்படுத்துகின்றன.   இவ்வாண்டு…

வருடல்

சிரம்பானில் ‘முருகம்மா’ என்ற பெயரில் ஒருவரைத் தேடுவதென்பது சிரமமான காரியமாக இருக்காது என்றுதான் நினைத்திருந்தேன். முருகம்மா என்ற பெயர் உள்ளவர்கள் நிச்சயம் மிகக் குறைவானவர்கள்தான். அதுவும், என் தலைமுறையிலோ அதற்கடுத்த தலைமுறைகளிலோ பிறந்தவர்களுக்கு நிச்சயமாக முருகம்மா எனப் பெயர் இடப்பட்டிருக்க வாய்ப்பிருக்காது என்பதால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், யாரிடம் சொல்லித் தேடுவது என்பதில் தொடங்கி எதையெல்லாம்…

அலை வீழ்த்திய வாழ்வு- மண்புழுக்கள் நாவல்

மலேசியத் தமிழர்களின் வாழ்வை மலேசியப் புனைவிலக்கியம் காட்டும் சித்திரிப்புகளிலிருந்து நான்கு காலக்கட்டங்களாக வகைப்படுத்தலாம். முதலாவதாக, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து பஞ்சம், பசி காரணமாகவும் வாழ்வாதாரத்தைத் தேடியும் ரப்பர் தோட்டங்களில் சஞ்சிக்கூலிகளாகப் பணியாற்ற புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையின் சித்தரிப்பவையாகும். அதற்கடுத்த காலக்கட்டத்தில், தோட்டங்களில் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலக்கட்டம்,…

லா.ச.ராமமிருதத்தின் சிறுகதைகள்

தமிழ்ப் புனைவிலக்கியத்தில் தன்னுடைய தனித்துவமான நடைக்காகவும் மீபொருண்மை சித்திரிப்புக்காகவும் முக்கியமான எழுத்தாளராக லா.ச.ராமமிருதம் கருதப்படுகிறார். மலேசியச் சூழலில் லா.ச.ராமமிருதத்தின் மனமொழியும் சிந்தனையும் முயங்கும் எழுத்துநடை சார்ந்த பாதிப்பை எழுத்தாளர் சீ.முத்துசாமியின் எழுத்துகளில் காணலாம். அதைத் தவிர, லா.ச.ராமமிருதத்தின் எழுத்துகள் குறித்த வாசிப்பும், கலந்துரையாடலும் மலேசிய வாசகச்சூழலில் அதிகமும் இடம்பெறவில்லை. தமிழாசியா மாதந்தோறும் நடத்தி வரும் சிறுகதை…

முரண்: பழமைவாதத்தின் பரண்

வல்லினத்தின் முன்னெடுப்பில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் 2 மார்ச் முதல் 3 மார்ச் 2024ஆம் ஆண்டு நடந்த இலக்கிய வாசிப்பு முகாமில்2022ஆம் ஆண்டு வெளிவந்த எழுத்தாளர் ந. பச்சைபாலனின் ‘முரண்’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதல் அமர்வில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 20 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பையொட்டி எழுத்தாளர்கள் ஆதித்தன், சாலினி, குமரன் ஆகியோர்…

விஷ்ணுபுரம் அரங்கில் எஸ். எம். ஷாகீருடன் உரையாடல்

தமிழ்ச்சூழலில் பிறமொழி இலக்கியங்கள் குறிப்பாகக் கிழக்கத்திய மொழி இலக்கியங்கள் குறித்த அறிமுகங்களும் விவாதங்களும் மிகக் குறைவாகவே நடைபெற்றிருக்கின்றன. தென்கிழக்காசிய மொழிகளில் ஒன்றான மலாய் மொழியின் இலக்கியமும் அவ்விதமே ஒப்பு நோக்க தமிழ்ச்சூழலில் குறைவாகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மலாயை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்த போதிலும் மலாய் மொழி இலக்கியங்கள்…

ஸலாம் அலைக் : ஒரு கிளைக்கதை

2009 இல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நிகழ்ந்த உச்சக்கட்டப் போர் காட்சிகளை நாள்தோறும் காலையில் ஒளிப்பரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதை போல, செய்தித்தாள்களிலும் போர் குறித்த செய்திகளை வாசித்துக் கொண்டிருப்பேன். இனம்புரியாத சோகமும், பீறிட்டு வரும் சினமும் எனக் கொஞ்ச நேரத்துக்கு மாறி வரும் உணர்வலைகளிலிருந்து மீண்டிருக்கிறேன். அந்த நேரத்து…

கோணம்

இரண்டு நாளில் வெவ்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்ட இருவரைப் புகைப்படம் எடுக்கலாம் எனும் திட்டத்தைக் கவின்தான் சொன்னான். கோலாலம்பூரின் மையத்தில் இருந்த மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டி நிலையத்தின் முன்னிருந்த சிமெண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டோம். சுளீரென்று அடிக்கும் வெய்யிலுக்கு மொத்த உடலையும் பரப்பி மல்லாந்து படுத்திருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், மனம் பிறழ்ந்தவர்கள் என எல்லாக் காட்சிகளுமே எங்கோ…

கேளாத ஒலி

(வல்லினம் நடத்திய அக்கினி அறிவியல் சிறுகதை போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை) பத்து நிமிடங்களைத் தாண்டியும் ஜானுடனான உரையாடல் நீண்டு கொண்டிருந்தது. கிஷன் பேசுவான் என்று ஜான் சொன்னப் பின்பும் மெளனமே நீடித்தது. ஜான் என்பது அவரின் உண்மையான பெயர்தானா என்பது கூட தெரியாது. பவுல் ,மோரீசன், என்று ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில்…

சந்தூரியின் மீட்டலும் முரண் பயணமும்

வாழும்நெறி, தத்துவம், உளவியல், எனப் பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கும் குறுங்குறிப்புகள் தினமும் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் அவற்றின் ஆக்கிரமிப்பு அதிகம். சில நிமிட காணொளிகளாகவும் குரல் பதிவுகளாகவும் அவை நம் கைக்குள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரே நேரத்தில் வாழ்க்கை பற்றிய அறிவுரைகளாகவும், நமது அன்றாட வாழ்வை விமர்சித்து அதிலிருந்து கடந்துவிட…

பி. கிருஷ்ணனின் நாடக வெளியில் உலக இலக்கியம்

அறிமுகம் எழுத்தாளர் பி. கிருஷ்ணனின் ‘சருகு’ நாடகத் தொகுப்பின் முன்னுரையில் சிங்கப்பூர் வானொலி கடந்து வந்திருக்கும் மாற்றங்களையும் கால அடிப்படையில்  இந்தியப்பகுதியில் பணியாற்றிய அறிவிப்பாளர்களையும் தலைவர்களையும் குறிப்பிட்டு மிக நீண்ட விரிவான வரலாற்றுக் குறிப்பொன்றை அளிக்கின்றார். இந்த வரலாற்றுக் குறிப்பு அளிக்கும் சில அவதானிப்புகள் மிக முக்கியமானவை. தொடக்கக்காலத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் வானொலியின் இடமென்பது…

தமிழ்மாறன்: ஆளுமைகளை உருவாக்கும் ஆசான்

(தமிழ் மாறன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை ) மெய்யான கற்றல் என்பது அது வரையில் கற்று வந்த தடத்தைக் கேள்வியெழுப்பச் செய்து, அதை மறுத்தும் விவாதித்தும் வந்தடையும் ஒரு புள்ளி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதலாண்டில் விரிவுரைஞர் தமிழ்மாறனின் வகுப்புகளில் அத்தகைய…