
நவம்பர் 29ஆம் திகதி வெள்ளி மதியம், நான், லதா, பாரதி மூவரும் சிங்கையிலிருந்து கோலாலம்பூர் வந்து இறங்கினோம். சிங்கையில் காலையில் இருந்தே அடை மழை பிடித்துக் கொண்டது. வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு டாக்சி கிடைத்ததே அதிர்ஷ்டம்தான். விமானமும் அரை மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. சுபாங் விமான நிலையம் வந்திறங்கி அங்கிருந்து முகாம் நடைபெறவிருந்த…