Author: கணேஷ் பாபு

வல்லினம் இலக்கிய முகாம் (2024) அனுபவம்

நவம்பர் 29ஆம் திகதி வெள்ளி மதியம், நான், லதா, பாரதி மூவரும் சிங்கையிலிருந்து கோலாலம்பூர் வந்து இறங்கினோம். சிங்கையில் காலையில் இருந்தே அடை மழை பிடித்துக் கொண்டது. வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு டாக்சி கிடைத்ததே அதிர்ஷ்டம்தான். விமானமும் அரை மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. சுபாங் விமான நிலையம் வந்திறங்கி அங்கிருந்து முகாம் நடைபெறவிருந்த…

வல்லினம் இலக்கிய முகாம் – சிறுகதை அமர்வு

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் திகதிகளில் நிகழ்ந்த வல்லினம் இலக்கிய முகாமில் ஜா. ராஜகோபாலன் வழிநடத்த, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த வாசகர்களும் படைப்பாளிகளும் ஒன்றாக அமர்ந்து மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியப் படைப்புகளை வாசித்து விவாதித்தோம். இந்த நிகழ்வு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்,அமைந்துள்ள YMCA ஹோட்டலில் நடந்தேறியது. நவம்பர் முப்பதாம் திகதி…

எம்.யுவன் கவிதைகள்: தீராத ருசி

சொற்களும் அர்த்தங்களும் கிளியென்று சொன்னால் பறவையைக் குறிக்கலாம் பச்சையைக் குறிக்கலாம் மூக்கைக் குறிக்கலாம் பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச் சிறையைக் குறிக்கலாம். சமயத்தில் அது கிளியையும் குறிக்கலாம். இப்படித்தான் துவங்குகிறது ‘தீராப்பகல்’ என்ற எம். யுவனின் மொத்தக் கவிதைத் தொகுப்பு. ஆங்கிலத்தில் ‘Absolute’ என்ற சொல்லும் ‘Relative’ என்றவொரு சொல்லும் இருக்கின்றன. முன்னதற்கு ‘அறுதி’ அல்லது ‘துல்லியம்’…

அள்ளிய கைகள்: புதுமைதாசனின் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்பை முன்வைத்து

சிங்கை இலக்கியச் சூழலில் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஏதாவது ஓர் இலக்கிய அமைப்பில் அல்லது நண்பர் கூடுகையில், மொழிபெயர்ப்புப் படைப்புகளைக் குறித்த உரையாடல் நடைபெறுவது வழக்கம். படைப்புகளைப் பற்றிய உரையாடலில் ஒரு பகுதியாக மொழிபெயர்ப்பின் தரம் அல்லது மொழிபெயர்ப்பாளரின் வெற்றி, தோல்வி குறித்த விவாதம் நடைபெறும். அவ்வகை உரையாடல்களில் பங்குப் பெறும்போதெல்லாம் இரு வகையான உவமைகள் என்…

விடுதலை

நீண்ட மௌனத்திலேயே கரைந்தது பொழுது. எதிர் சோபாவில் அமர்ந்திருந்த கதிரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு சொல்லும் எழவில்லை. சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு ஓவியத்தையே நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியொரு அசாத்தியமான சூழ்நிலையில், ஏதாவது ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டேயிருப்பது அலையும் எண்ணங்களை ஒருமுகப்படுத்த உதவுகிறது. அந்த ஓவியம் பழைய பாணி ஓவியம்தான். அரிதானதும் அல்ல. அந்தியின் காவிநிற…

சு.வேணுகோபால்: கூழாங்கற்களின் நாயகன்

தொண்ணூறுகளுக்குப் பிறகான காலகட்டத்தில் பொதுவாக நவீன இலக்கியப் படைப்பின் வடிவம்,வெளிப்பாட்டு முறை சார்ந்து ஒரு தவறான புரிதல் சூழலில் உண்டாயிற்று. மொழியை அதன் இயல்புத்தன்மையினின்றும் வல்லந்தமாக திருகியும், செயற்கையான பூடகத்தன்மையை அதற்களித்தும் வெளிவரும் படைப்புகளே மிக நல்ல இலக்கியப் படைப்புகள் என்ற ஒரு தோற்றப்பிழை உண்டானது. பின்நவீனத்துவப் படைப்பை உருவாக்குவதாக எண்ணிக்கொண்டு நேர்க்கோடற்ற துண்டாடப்பட்ட விவரணையை…