மலேசியாவில் சௌந்தரின் யோகப் பயிற்சி

சௌந்தர் அவர்கள் தமிழகத்தில் முதன்மையான யோகப்பயிற்சியாளர்களில் ஒருவர். மரபார்ந்த யோகப் பயிற்சிகளை தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார். 

1950ல்  சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் இந்திய மற்றும் இலங்கை பயணம் மேற்கொண்டு முழுமையான யோக கல்வியை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். சௌந்தர் அந்த குரு மரபில் வந்தவர். எனவே அதே அளவு தீவிரத்துடன் அவரின் நீட்சியாகவே மரபார்ந்த யோகப் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதில் பங்காற்றி வருகிறார்.அதன் தொடர்ச்சியாக மலேசியாவுக்கும் அவர் வருகை தர உள்ளார்.

மலேசியாவில் எளிய ஆசனங்கள, மூச்சுப்பயிற்சி, பிரத்யாஹாரம், அடிப்படை தியானம் என அவரால் அறிமுகம் செய்யப்படும். மற்றும் ‘யோக சிகிழ்ச்சை‘ முறைகளும் சிலவற்றை அறிமுகம் செய்து வைப்பார்.

சௌந்தர் ஓர் இலக்கிய வாசகர் என்பதும் இலக்கியக் கட்டுரைகள் எழுதிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயிற்சி நடக்கும் விபரங்கள்:

நாள்: 13.1.2024 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 5 – இரவு 7

இடம்: ரவாங் தமிழ்ப்பள்ளி

அனைத்துத் தொடர்புகளுக்கும்: ம.நவீன் 0163194522

இலங்கை தேசிய தொலைக்காட்சி பேட்டி

இலங்கை யோக முகாம் குறிப்பு

சௌந்தர் குறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

சௌந்தர் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா

சௌந்தர் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்


உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...