மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் அடையாளம் ம. நவீன். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து என இடையறாது எழுதிக்கொண்டிருக்கும் நவீன் ‘வல்லினம்’ (vallinam.com.my) இணைய இதழின் ஆசிரியராகவும் ‘முகவரி’ எனும் மாதத்திற்கு இரு முறை வெளிவரும் இதழின் ஆசிரியராகவுமிருக்கிறார். ‘வல்லினம்’ பதிப்பகத்தின் மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சிலாங்கூர் மாநில அரசால் வழங்கப்பட்ட தமிழ் மொழிக்கான ‘இளம் கவிஞர் விருது’ நவீனுக்குக் கிடைத்தது. ‘தாமான் மெலாவாத்தி’ தமிழ்ப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிசெய்யும் நவீனுடனான இந் நேர்காணல் மின்னஞ்சலூடாகவும் தொலைபேசி வழியேயும் நிகழ்த்தப்பட்டது.
– ஷோபாசக்தி
18.07.2010 Continue reading