டாக்டர் ஜெயபாரதியைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். “சித்தர் மார்க்கத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த தாங்கள் இப்போது பக்தி மார்க்கத்தைப் பின் பற்றுகிறீர்கள்… ஏன்?” என் கேள்விக்கு டாக்டர் ஜெயபாரதி எளிதான ஒரு பதிலைச் சொன்னார். “சித்தர் மார்க்கம் முடிவற்றது. அறிவின் தளத்தில் இயங்கும் அதில் எல்லைகள் இல்லை. பக்தி மார்க்கம் அப்படி அல்ல. ‘எல்லாம் சிவம்’ எனச்சொல்லி அமர்ந்துவிடலாம். அதுவே அதன் எல்லை.”
‘புயலிலே ஒரு தோணி’யில் மிக முக்கியமான பகுதி அதில் நடக்கும் விவாதங்கள். அதில், ப.சிங்காரம் பின்வருமாறு எழுதியிருப்பார். “கற்பனையின்றேல் வாழ்க்கையில்லை; கொள்கையில்லை; சமுதாயமில்லை. கற்பு என்ற கற்பனை இன்றேல் குடும்ப வாழ்க்கை – அதாவது லட்சியக் குடும்ப வாழ்க்கை ஏது? அடிப்படை அறிவின் வழி எது? அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு அறிவுக்கும் வெவ்வேறு உண்மை தென்படும். அவரவர் அறிவின் போக்கில் சென்றால் குழப்பமும் அதன் விளைவாக அழிவுமே கிட்டும். ஆகவேதான் கற்பனை முடிவு – அது அறிவுக்கு வரம்பு.”
Continue reading