யோகம்

யோகமும் சௌந்தரும்

சௌந்தர்

சௌந்தரை எனக்கு இலக்கிய வாசகராகவே அறிமுகம். ‘அசடன்’ நாவல் குறித்து ஜெயமோகன் தளத்தில் கட்டுரை எழுதியுள்ளார். நானும் அப்போதுதான் அசடனை வாசித்து முடித்திருந்ததால் அக்கட்டுரையை உடனடியாக வாசித்தேன். ஆழமான வாசிப்பு. தான் அதை புரிந்துகொண்ட வகையில் எளிமையாக எழுதியிருந்தார். எளிமையின் மேல் எனக்கு எப்போதும் ஈர்ப்புண்டு. ஒன்றை ஆழமாகப் புரிந்துகொண்டவரால் மட்டுமே எவ்வளவு சிரமமானதையும் எளிமையாகச் சொல்லிவிட முடியும் என நம்புபவன் நான். அதேசமயம் அவர்களால் மட்டுமே தேவையானபோது அதன் உச்சமான சாத்தியங்களுக்கும் சென்றுதொட இயலும்.

Continue reading