Author: வல்லினம்

சென்னையில் வல்லினம் நூல்கள் அறிமுகம்

‘யாவரும்’  தொடர்ந்து நவீன இலக்கியச் சூழலில் கவனம் பெற்றுவரும் பதிப்பகம். தூயனின் இருமுனை, சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை, எம்.கே.குமாரின் 5.12 P.M என இப்பதிப்பகம் வெளியிட்ட சிறுகதை நூல்கள் விருதுகள் மூலமும் விமர்சகர்கள் மூலமும் பரந்த கவனத்தைப் பெற்றன. வல்லினம் இவ்வருடம் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து 10 நூல்களைப் பதிப்பிக்கிறது. இவ்விரு பதிப்பகங்களும் இணைந்து வெளியிடும்…

இலக்கிய விழாவில் சு.வேணுகோபால்.

வழக்கம் போலவே இவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கும் தமிழகத்தில் இருந்து முக்கியப் படைப்பாளிகள் இருவர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சு.வேணுகோபால். நுண்வெளி கிரகணங்கள், கூந்தப்பனை, ஆட்டம்,  நிலம் எனும் நல்லாள், பால்கனிகள், வலசை போன்ற நாவல்கள் – வெண்ணிலை, ஒரு துளி துயரம், களவு போகும் புரவிகள், பூமிக்குள் ஓடுகிறது நதி எனும் சிறுகதை தொகுப்புகள் –…

“முகநூல் புகழை அதை விரும்புபவர்களே வைத்துக்கொள்ளட்டும்” – சு.வேணுகோபால்

இணையம் வழி பெறப்பட்ட இந்த நேர்காணல் சு.வேணுகோபாலின் வாசகர் கேள்வி பதிலின் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. நான்கு மாதங்கள் தொடர்ந்து வல்லினம் வாசகர்களுக்கு அவர் வழங்கிய பதில்களைத் தொடர்ந்து இந்த நேர்காணல் அவர் ஆளுமை குறித்த விரிவான அறிமுகத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நம்புகிறோம். நவீனத் தமிழ் இலக்கிய உலகில்  வலுவான படைப்புகள் மூலம் கவனம் பெற்றுள்ள…

யாழ் பதிப்பகத்தின் மலேசிய ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதை போட்டி – 2018

மலேசிய கல்வி பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களை பதிப்பித்து வருவதோடு அரசாங்க  தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்பு திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசிய தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில்  தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சி…

“மனைவியின் தாலியை அடகுவைத்து புராதனப் பொருட்கள் சேகரித்தேன்” பிரகாஷ்

பினாங்கு இந்திய மரபியல் அருங்காட்சியகத்தின்  நிர்வாகி பிரகாஷ்,  ஜெகதீசன் – ராஜகுமாரி தம்பதியரின் இரண்டாவது மகன் . இவர் பிறந்து வளர்ந்தது பேராக் மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் நகரில். தந்தையார் முடித்திருத்தும் கடைகள் வைத்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த இவர் தன் சொந்த முயற்சியில் பினாங்கு தீவில் இந்திய மரபியல் அருங்காட்சியகம்…

“தற்காலிக மன விலகல்கள் வரலாற்றுக்கு அவசியமற்றது.” – மா.செ.மாயதேவன்

1950களில் மலேசியாவில் ஏற்பட்ட புதிய இலக்கிய அலையில் உருவானவர் மா.செ.மாயதேவன். இரு நாராயணன்களும் நடத்திய கதை வகுப்பு, கு.அழகிரிசாமி உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’, கோ.சாரங்கபாணியின் தமிழர் திருநாள் என பல்வேறு கலை இலக்கிய முன்னெடுப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு, சிறிது சிறிதாகத் தன்னைச் செதுக்கிக்கொண்டவர். 85 வயதான அவரை நேர்காணலுக்காக தைப்பிங் நகரில் சந்தித்தோம். பலவற்றை அவர்…

“எழுத்தாளனை உருவாக்க முடியாது” – மா.இராமையா

‘இலக்கிய குரிசில்’ முனைவர் மா.இராமையா, 1946ஆம் ஆண்டு ‘காதல் பரிசு’ என்ற முதல் கதையை எழுதியதன் வழி மலேசியத் தமிழ்ச் சிறுகதை உலகின் அடியெடுத்து வைத்தவர். இதுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 1000திற்கும் மேற்பட்ட கட்டுரைகளும் 50க்கும் மேற்பட்ட கவிதைகளும் 12 நாவல்களும் எழுதியுள்ளார். இவர்பெற்ற பரிசுகளின் பட்டியல் மிக நீண்டது. ‘மலேசிய இலக்கிய வரலாறு’…

மாயமான் – கே.எஸ்.மணியம்

சில வருடங்களுக்கு முன்,  பாசீர் பஞ்சாங்கின் புறநகர்ப்பகுதியில், தாமான் பஹாகியா புதிய வீடமைப்பு திட்டம் உருவானபின் அதுவரையிலும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழிடங்களைப் பெயர்த்தெடுக்க வேண்டியதாகியது. அத்திட்டத்தில் உருவான நவீன, தனித்த, ஆடம்பர இரட்டைமாடி வீட்டு வரிசைகளின் குடியிருப்பைக் கடந்து, காடும் அதை ஒட்டிய மலை முகடுகளுக்கும் நெருக்கமான, ஓர் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அவர்கள்…

சு.வேணுகோபால் பதில்கள்

உங்களின் தமிழ்ச்சிறுகதை பெருவெளி நூலுக்கு கே.என் செந்திலின் விமர்சனம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?  பூவேந்தன் அன்புடன் பூவேந்தனுக்கு, அறத்திற்குப் புறம்பான திட்டமிட்ட வக்கிற நாடகங்களை காலம் பொசுக்கி விடும். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை தங்களின் ஆன்மிகம் என்ன? மத நம்பிக்கை உண்டா உங்களுக்கு?…

“பெரும்மாற்றங்கள் நிகழ பிடிவாதமான கொள்கைகள் அவசியமாகவே உள்ளன” டாக்டர் ஜெயக்குமார்

காலஞ்சென்ற கிளந்தான் மாநில முதல்வர் நிக் அப்துல் அசிஸ் அவர்களுக்குப் பிறகு எளிமையான வாழ்க்கை மூலம் அரசியல் சூழலில் கவனத்தைப்பெற்றவர் டாக்டர் ஜெயகுமார். எளிய வீடு, வாகனம் என்பதோடு ஆண்டுதோறும் அவர் அறிவிக்கும் தனது சொத்துடமை பிரகடனம் மலேசிய அரசியல்வாதிகளில் யாரும் கடைப்பிடிக்காத கொள்கைகள். 2008 ஆம் ஆண்டு மலேசிய சோசலிசக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான…

“உலகுக்கு நான் விட்டுச்செல்வது எனது நூல்களைத்தான்” – பி.கிருஷ்ணன்

சிங்கப்பூரின் முன்னோடி மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான  பி. கிருஷ்ணன் இலக்கியப் பணிக்காக சிங்கப்பூரின் உயரிய விருதான கலாசார பதக்கம் முதல், தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருது எனப் பல விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர். 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1953ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆரம்பகால நிறுவனராகவும் துணைச் செயலாளராகவும் இருந்த…

சடக்கு அறிமுகமும் சீ.முத்துசாமி படைப்புலகமும்

வல்லினம் சம கால இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வது மட்டுமல்லாமல் வரலாறு மற்றும் ஆவணத் தொகுப்பிலும் ஊக்கத்துடன் செயல்பட்டு வரும் இயக்கம். தொடர்ந்து ஆவணப்படங்களை வெளியிடுவதுடன்  தகுந்த படைப்பாளிகளைக் கௌரவிக்கவும் அவர்களின் படைப்புகளை தீவிரமான வாசிப்புப்  பரப்புக்கு முன்னெடுத்துச் செல்லவும்  வல்லினம் முனைப்பு காட்டி வந்துள்ளதை மலேசிய இலக்கியத்தை ஊன்றி கவனித்து வரும் யாரும் மறுக்க முடியாது.…

வாசகர் கடிதம்

அன்புள்ள நவீனுக்கு, பேச்சி கதை வாசிப்பின் முடிவில்,  புதிதாக தீட்டப்பட்டு அதன் தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த  உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல…

“ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா

தமிழகத்தில் மிக நீண்ட காலம் விமர்சனத்திலும், ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் கௌதம சன்னாவைச் சந்திக்கும் வாய்ப்பு மலேசியாவில் கிடைத்தது. தமது ஆய்வுகளைக் களபணிகளின் மூலமே சரிபார்த்துக் கொள்ளும் நோக்கமுடைய அவரது ‘குறத்தியாறு’  இலக்கியச் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்த காப்பியம். மாணவர் பருவம் தொட்டு இடதுசாரி இயக்கத்தின் இணைத்துக் கொண்டு பணியாற்றியதுடன், சங்கம் என்னும்…