Author: இறுதிச்சுற்றுக்குத் தேர்வான படைப்பு

சாம்ராஜ்யம்

மடங்கின வாக்கில் இருக்கும் பாட்டியின் கைகள் என்னை எட்டிப்பிடிக்கும் வேகத்தில் நீண்டன. நல்லவேளை. அம்மா எப்படி மெனக்கெட்டும் என் தலைமுடி நீண்ட சடை போடும் அளவுக்கு வளராமலேயே இருந்தது. இல்லையென்றால் மரக்கிளையில் மாட்டிக்கொண்ட கொம்புமான் போன்று என் சடை பாட்டியின் கையில் சிக்கியிருக்கும். பாட்டியைக் கொம்புமானைத் துரத்திவந்த சிறுத்தைப் புலியாக நினைத்துப் பார்த்தேன். அந்த வேளையிலும்…

நகர்வு

பிபிஆர் பிளட்சின் 15-வது மாடியில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் ஒரே சத்தமும் சண்டையுமாக இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து ஒருஆண் குரல் பலமாக கத்திக் கொண்டிருந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும் வாசற்படியை மலாய்கார குடும்பம் ஒன்று அமைதியாக கடந்து போனது. கீழ் மாடியில் குடியிருக்கும் சாந்தி சத்தம் கேட்டு வேகவேகமாக படியேறி மேலே வந்தாள்.…

புதிதாக ஒன்று

அம்மா மட்டுமல்ல, அம்மாவுடன் சென்ற நானும் அண்ணியும் பரிசோதனை முடிவு என்னவாக இருக்கும் என்பதில் நெஞ்சம் படபடக்க அந்தத் தனி அறையில் மருத்துவரின் முகத்தையே பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் அண்ணன் மகள் ரூபா முடிவு எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணித்திருந்தாலும், அப்படி ஒரு துரதிஷ்டமான நிலைமை தன் அப்பம்மாவுக்கு, வரக்…

ஆட்டம்

அது என் தலை தைப்பூசம். முதல் முறையாகச் சுங்கை பட்டாணியில் என் மனைவியின் குடும்பத்தோட தண்ணீர் பந்தலில் நின்றுக்கொண்டிருந்தேன். கல்யாணத்துக்கு முன் தைப்பூசம் வேறு மாதிரி இருக்கும். அப்போதெல்லாம் தைப்பூசம் என்றால் அது ஈப்போவில் தான். வருசா வருசம் தெரிந்த யாராவது ஒருவன் காவடியெடுப்பான். நானும் சிவாவும் முன் கூட்டியே ஒப்பந்தமாவோம். நாங்கள் இருவரும் பயங்கர…

பிரதி

அக்கா, ரமேஷ் அண்ணனோடு ஓடிப்போய் விட்டாள். நிரந்தரமான காலை ஷிப்ட் முடிந்து மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டிலிருப்பவள், ஆறரை மணிக்கு எஸ்டேட் ஜெனரேட்டர் ஸ்டார்ட் செய்யப்பட்டு கரண்டு வரும்வரை வீட்டுக்கு வராததை தம்பிதான் முதலில் கவனித்தான் போலிருக்கிறது . தீபாவளிக்கு அப்பாவுக்குக்கூட தெரியாமல் டவுன் முழுவதும் அலைந்து திரிந்து இறுதியாய் R. அப்பாராவ் சில்க் ஸ்டோரில்…

நம் வாழ்வில் சிறுத்து வரும் சிரிப்பு!

மனித வாழ்வின் அரிய பொக்கிஷம் அவனது இதழ் சிந்தும் சிரிப்பு என்பது பெரும்பாலானோருக்குப் புரியாமலே போகிறது.நித்தமும் வேகம் வேகமென்று ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று வாழ்க்கையெனும் பயணத்தை கடக்கையில், வழியில் சிதறிக்கிடக்கும் சிரிப்பை ரசிக்க மறந்துபோவது இன்றைய நிலையின் பரிதாபத்தின் உச்சம். இவர்கள் ஒருகட்டத்தில் சோர்ந்துபோய் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில், நிறைய இடங்கள் வெற்றிடங்களாகவே காட்சியளிக்கின்றன. வாழவேண்டும்!…

நிகழ்காலத்தில் வாழ்வோம்!

காலத்தை மூன்று வகையாகப் பிரித்தனர் நம் முன்னோர். நாம் வாழ்ந்து முடித்ததைக் கடந்தகாலமென்றும், வாழ்ந்துகொண்டிருப்பதை நிகழ்காலமாகவும் இனி  வாழப்போவதை எதிர்காலமென்றும் வகைபடுத்தினர். இதிலென்ன எனக்கு சந்தேகம் வந்ததென்று நீங்களும் கேட்கலாம். இன்றைய உலகில் நிகழ்காலத்தில்  ‘வாழ்பவர்களின்’ எண்ணிக்கை குறைந்து வருவதே என் ஆதங்கத்திற்குக்  காரணமாகிறது. கடந்த காலமென்பது காலத்தின் கட்டாயமானது. அது மனிதனின் கைமீறியச் செயல்,…

நுரை

சூரிய ஒளியிலிருந்து கருப்புநிற கண்ணாடிகளைக் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது அந்த இடம். பின்னணியில் காதுகளை எரிச்சல் செய்யும் டும் டும் ஓசை. சுற்றியும் மிதப்பில் இருக்கும் ஆட்கள். எல்லாமே அவளை என்னமோ பண்ணியது. நாளைவரை வீட்டுக்கு யாரும் வரப்போவதில்லை. அப்பாவின் கூட்டாளி செத்துப்போனதும் அவர் இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பதும் நல்ல சகுனமாக நினைத்துக்கொண்டாள். மேசைக்கு…

மன்னிப்பு

“இந்த மூணு பிள்ளைங்களுக்கும் கொஞ்சம் விபரம்  தெரிஞ்சதும், கண்காணாம தொலைச்சிட்டு போயிருனும். அப்பத்தான் நிம்மதி. நமக்குன்னு ஒரு வாழ்க்கை, நம்ம வழியில்…” அடுப்பறையில் பாலோடு சேர்ந்து பொங்கிக் கொண்டிருந்தாள் பாக்கியம். கடைக்குட்டி இந்திராணி மூன்றாவது முறையாக ஓடிவந்தாள். “அப்பா எப்ப வருவாரு?”  என்ற அதே கேள்வியுடன். “வருவாரு. போய் அக்காகூட   விளையாடு” எனச் சொல்லி, நேற்று…