Author: ஜெயமோகன்

தொலைவில் எங்கோ

தொலைதூரத்தில் இருந்த பூமி என்னும் கோளில் இருந்து வந்து சேர்ந்த மனிதனைப் பார்ப்பதற்காக ஆபா என்னும் கோளில் வாழ்ந்த மக்களான ஆபிகள் நகர்ச்சதுக்கத்தில் பெருந்திரளாகக் கூடினார்கள். அவர்கள் எதிர்பார்த்து வந்த ஒரு நிகழ்வு அது. ஆகவே, ஒவ்வொருவரும் கூச்சலிட்டுக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் ஓசை அலையலையாக எழுந்தது. நகர்ச்சதுக்கம் மிகப் பெரிய கல்பீடம்…

பெருங்கை

கேசவன் எப்போது வேண்டுமானாலும் ராத்திரியைக் கொண்டுவரக்கூடியவன். சிறிய அறைக்கு வடக்குப்பக்கமாகத் திறக்கும் ஒரே ஒரு ஜன்னல் தான். அதை மூடவும் முடியாது. இரு ஜன்னல் கதவுகளும் எப்போதோ விழுந்துவிட்டன. அதற்கு அப்பால் கேசவனின் கரிய விலாப்பக்கம் வந்து முழுமையாக மூடிவிட்டதென்றால் படுத்திருக்கும் இடத்திலிருந்து அவன் பார்க்கும்போது வெளியே கூரிருட்டு நிறைந்திருக்கும். பெரும்பாலும் அவனுக்குக் கேசவனுடன் இரவில்தான்…

வேதாளம்

“வேதாளச் சனியன வேற தூக்கவேண்டியிருக்கு” என்று சடாட்சரம் சொன்னார். இன்ஸ்பெக்டர் கோப்பில் இருந்து தலை தூக்காமலேயே “பின்ன வெறுங்கையோடையா போகப்போறீரு? சட்டம்னு ஒண்ணு இருக்குல்லா வே?” என்றார் “அது இருக்கு…” என்றார் சடாட்சரம் “எங்கிட்டு இருக்குன்னுதான் தெரியல்ல. இருந்து தாலியறுக்குது.” “இந்த நொரநாட்டியம்லாம் இங்க பேசப்பிடாது. மனுசன் இங்க தாடியிலே தீப்பிடிச்ச மாதிரி நின்னுட்டிருக்க நேரம்…போவும்…

எண்ணும்பொழுது

“தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான். அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது.

சர்வ ஃபூதேஷு

எல்லா ஆன்ஸெலை அவள் அறைக்குள் கொண்டுசென்று படுக்கவைத்துவிட்டு நான் திண்ணைக்கு வந்தபோது கொச்சு மாத்தன் அங்கே நின்றிருந்தான். எண்ணெய்பூச்சில் அவனுடைய பெரிய சிவந்த உடல் பளபளத்துக்கொண்டிருந்தது. நான் அவனை நோக்கி புன்னகைத்து “நடக்கக் கூடாது. பெஞ்சில் உட்கார்ந்திருக்கவேண்டும்” என்றேன். அவன் ‘ஆம், ஆனால் அந்த அறையில் எண்ணெய் மணம், என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்றான். “ஆவிக்குடுவையில்…

மீண்டு நிலைத்தவை

(2018இல், சென்னையில் மீண்டும் நிலைத்த நிழல்கள் நூலை வெளியிட்டு ஜெயமோகன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.) சுந்தரராமசாமியை நினைவுக்கூர்ந்து இந்த உரையை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் ஒரு பேராசிரியர் நவீன தமிழ் இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அப்பொழுது சுந்தரராமசாமி சொன்னார்:  “பந்திப்பாய் விரித்திருக்கிறார்” என்று. அது குமரி மாவட்டத்தில் உபயோகப்படுத்தக்கூடிய…

யானை – ஜெயமோகன்

பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்பதற்கு அனந்தன் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. அவள்  “என்ன?” என்றாள். அவன் தலையைக் கவிழ்த்து முனகலாக “எங்க ஸ்கூலிலே ஆனை இருக்கு” என்றான். “என்னது?” என்றாள். “ம்ம்ம்ம் ஆனை” அவள் அவனை ஒற்றைக்கையைப் பற்றி படுக்கையிலிருந்து தூக்கி எடுத்து “கெளம்பு” என்றாள். கால் தரையில் உரசியபடி இழுபட்டு வர “ஆனை முட்டிடும்……

இலக்கியத்தின் பல்லும் நகமும்

இரண்டாயிரத்தோடு சிற்றிதழ்களுக்கான வரலாற்றுத்தேவை முடிந்துவிட்டது என்பது என்னுடைய மனப்பதிவு. சிற்றிதழ்கள் என்பவை ஊடகம் மறுக்கப்பட்ட தரப்புகள் தங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் அச்சு ஊடகம். அச்சு என்பது செலவேறிய ஒன்று. விநியோகம் அதைவிடச் செலவானது. அந்த முதலீட்டை நிகழ்த்த வாய்ப்பு கொண்ட தரப்புகளுக்கே சிந்தனை, பண்பாட்டுச்சூழலில் குரல் இருந்தது. அது எப்போதும் அரசியல், வணிக அதிகாரத்திற்கு ஆதரவான குரல்தான்.…