Author: சர்வின் செல்வா

கடுவெளி காந்தள்

“ஆன்மிகம் என்பது ஆதி தெய்வம் அல்லவோ, அது கோருவது மானுட பலி. ஒரு வண்டி நிறைய புல் கட்டுகளைத் தின்று, ஒரு செம்பு பால் மட்டும் கறக்கும் பசு போன்றது அது. இங்கே அறிவதை விட, அறிந்ததை விடுவதே அதிகம்.” சுவாமி பிரம்மானந்தரின் வரிகள். ‘வந்தவழி’ எனும் நூலில், முன்னுரையாக எழுதியது. அதை வாசித்த காலங்களில்…

அனல் மடி

சிலாவாடீ கடற்கரை ரிசார்ட்டிலிருந்து பார்க்கையில், ஒட்டு மொத்த தாய்லாந்து கடலும்  விழிகளுக்குள் அடங்கி விடுவதாகவே எண்ணிக் கொண்டேன். நோக்கு மறையும் தொலைவிற்கு வெறும் நீல திரை போன்ற நீர்தான். ‘என் ஊரிலும் இதே நீர்தான் இருக்கின்றது. ஏன் அங்குப் பார்த்த கடலை விட, இங்குப் பார்க்கும் கடல் வேறொரு உணர்வைத் தருகிறது’ என யோசித்தேன். அப்பொழுதுதான்…

இன்துயில் கொள்க

அரை மணி நேரத்திற்கு முன்புதான், அண்ணா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அரை மணி நேரம் என்பது மிக துல்லியமாக எனக்குத் தெரிந்திருந்தது. அம்மா வீட்டிற்குள் நுழைந்தவுடன் நான் என் அறைக்கு மிகச் சாதாரணமாக நடந்து சென்று கதவை மூடிக் கொண்டேன். உள்ளே எத்தனை நேரம் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதைச் செல்பேசியைத் திறந்து பார்ப்பதிலும், சுவரில்…

ஆடும் தேவி

துணுக்குற்று கண் விழித்த பொழுது, உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு. மிக உயரமான கட்டடத்திலிருந்து விழுந்ததால் அவ்வுணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். கனவுதான். ஆனால், உணர்ச்சி நிஜமானது. ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டது முதல் இப்படியான கனவுகள்தான் மூன்று மாதங்களாக வருகின்றன. ஆனால், மதிய நேரத்தின் இடைவெளி உறக்கத்திலும் இப்படியான கனவு வருவது வியப்புதான். உதட்டின் ஓரத்தில்…

கிருஷ்ணை

நான் தங்கியிருந்த ஹாஸ்டலின் வெளியே நீண்டிருந்த பச்சை மாமரத்தின் சிறு கிளையின் மேல் அமர்ந்து கொண்டு ஒரு கருங்குயில் கூவியது. அவ்வொலி மிக அருகில்தான் கேட்டது. முழு மாமரமும் தெரியும் ஜன்னலைக் கொண்ட அறை அது. நீண்டு வளர்ந்து பெருத்திருந்த மாமரக் கிளை மட்டும் என் அறையைத் தொடும் வரை வளர்ந்திருந்தது. அங்கே தான் அந்தக்…