
அரை மணி நேரத்திற்கு முன்புதான், அண்ணா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அரை மணி நேரம் என்பது மிக துல்லியமாக எனக்குத் தெரிந்திருந்தது. அம்மா வீட்டிற்குள் நுழைந்தவுடன் நான் என் அறைக்கு மிகச் சாதாரணமாக நடந்து சென்று கதவை மூடிக் கொண்டேன். உள்ளே எத்தனை நேரம் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதைச் செல்பேசியைத் திறந்து பார்ப்பதிலும், சுவரில்…