நீயின்றி அமையாது உலகு – 3

துர்க்கனவு போல அவள் முகம் வந்துபோனது. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அவள் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்………… எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. விடுமுறையைச் சம்பளமாக்கிட தற்காலிகமான வேலையை தேடிக்கொண்டிருந்தேன். அச்சமயம் தோட்டங்களை துண்டாடிய பின் அங்கு தொழிற்சாலைகளைக் கட்டியிருந்தார்கள். இதற்கு முன் அங்கு வாழந்தவர்களுக்குத்தான் முதல் வேலை வாய்ப்பு…

மண்டை ஓடி: ஒரு நாவலின் சில அத்தியாயங்கள்

சில முன் குறிப்புகள் நான் சிறுகதைகள் படிப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. உள்நாட்டு படைப்புகளைப் படித்து நீண்டகாலம் ஆகிறது. அப்படியே விமர்சனங்களும் திறனாய்வுகளும். இந்த புத்தகத்தில் எழுத்தாளர் இமையத்தின் உரையைப் படிப்பதைத் தவிர்த்தேன். சிறுகதைகள்- பொதுப்பார்வை தொடக்கம், உள்ளடக்கம், முடிவு, கரு, உத்தி என்பனவற்றிலிருந்து சிறுகதைகள் பல வகையான மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. சிறுகதை அதற்கான வடிவத்தையும், சொல்லும்…

ஏக்நாத்தின் ஆங்காரம் நாவல்

ஏக்நாத் எழுதியிருக்கிற ஆங்காரம் நாவல் ஒரு தனிமனிதனுடைய கதையோ, ஒரு குடும்பத்தினுடைய கதையோ அல்ல. ஒரு ஊரைப் பற்றிய, குறிப்பிட்ட ஊரில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களைப்பற்றிய கதை என்று சொல்லலாம். கதை நடக்கிற ஊரிலுள்ள மனிதர்களைக் காப்பதற்காக ஊருக்கு வெளியேயும், ஊரைச் சுற்றியும் இருக்கிற மந்திரமூர்த்தி, பூதத்தார், சொரி முத்தையன், சொரி முத்து அய்யனார், வடக்குவா…

ஒளி புகா இடங்களின் ஒலி: எளிமையில் உள்ள உண்மை!

எழுத்தென்னும் பெரும்பசிக்குத் தன்னையே தின்னக் கொடுப்பதும் கலையின் வெளிப்பாடுதான் என்பதை நானே புரிந்து கொள்வதாகத்தான் இத்தொகுப்பைக் கண்டு சிரிக்கிறேன் என்று கூறி இருக்கும் எழுத்தாளர் தயாஜி, அவர் தொகுத்திருக்கும் ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் கட்டுரை தொகுப்பின் வழி வெளிப்படுத்தி உள்ளார். எழுத்துலகில் புதிய அறிமுகம் என்றாலும் எழுத்து இவருக்குப் பழைய நண்பன் என்பதை அவருடைய…

கேலிச்சித்திரத்துக்கான உச்சம் அதிகாரத்தை நோக்கிப் பாய்வது!

மொத்தம் பதினைந்து தலைப்புகளைக் கொண்டு ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் பத்திகளடங்கிய தொகுப்பு தயாஜியின் முதல் நூலாக வெளிவந்திருக்கிறது. நல்லதொரு ஆரம்பம்தான். இந்த ஆரம்பத்திலேயே படைப்பின் பலத்தையும் பலவீனத்தையும் சார்பற்ற நிலையில் விமர்சிப்பது தொடரும் வெளியீடுகளில் நன்மையைக் கொண்டு வருமென நம்புகிறேன். இத்தொகுப்பில் கவன ஈர்ப்பும் முக்கியத்துவமும் கொண்டவையாக ‘கேலிச்சித்திரமெனும் ஆயுதம்’ மற்றும் ‘ஒளி புகா…

வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 1

கடந்த ஒன்பது ஆண்டுகளாக கலை, இலக்கியம், அரசியல் என பல்வேறு தளங்களில் உற்சாகமாய் இயங்கிவரும் வல்லினம் இவ்வாண்டு ‘வல்லினம் விமர்சன அரங்கு 2016’ எனும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், இலக்கிய வாசகர்களுக்கு மத்தியில் நடைபெறும் பொதுவான இலக்கிய அரங்காக இல்லாமல் மலேசியத்தமிழ் இலக்கியச்சூழலில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கவேண்டும் எனும் அழுத்தமான நம்பிக்கையில் இவ்விமர்சன…

தன்நெஞ்சறிவது…

அனுபவம் 1   “அன்று என்னைப் பார்க்க ஒரு இந்தியப் பெண் என் அலுவலகத்திற்கு வந்தார்.அவர் மிகவும் அழகாக இருந்தார். என் எதிரில் அமர்ந்தவர் சில புகார்களைக் கூறினார். பின்னர் பேசிக் கொண்டிருக்கும்போது அவர், “நான் நல்ல சாதிக்காரி, துவான். எங்க குடும்பமே உயர்ந்த ஜாதிக்காரங்கதான். ஆனா இங்க சுற்றுவட்டாரத்துல, அந்த பிளாட்டுல இருக்குறவுங்க முக்காவாசி…

அபோதத்தின் ருசி

பத்திரிகைகளில் என் படைப்புகளை இடம்பெறவைக்கக் கொண்டிருந்த தீவிரம் அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுண்டு. இன்றுபோல அத்தனை இலகுவான சூழல் அப்போது இல்லை. அப்போது என்பது 97-98 ஐக்கூறலாம். இருந்ததே இரு தினசரிகள். அதில் ‘மலேசிய நண்பன்’ அதிகம் விற்பனை ஆனது. ‘தமிழ் நேசனு’க்கு இப்போது போலவே அப்போதும் பெரிய விற்பனை இல்லை. எழுதத்தொடங்கிய புதிதில் மலேசிய நண்பனில்…

நரன் கவிதைகள்

                தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் வீட்டைச் சுத்தப்படுத்தி குப்பைகளைத் தெருவில் வீசுகிறான் . பின் தலையைச் சொரிந்தபடி தன்னிடமே காசு வாங்கிக் கொள்கிறான் .   தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் தெருவைச் சுத்தப்படுத்தி குப்பைகளை . நகரத்தின் வெளியே கொண்டுபோய் வீசுகிறான் நகரத்தில்…

என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான்

என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான். சரியாக இன்றோடு அவன் என்னைக் குடையால் அடிக்க ஆரம்பித்து ஐந்து வருடம் ஆகிறது. முதலில் என்னால் அதைப் பொறுக்க முடியவில்லை; ஆனால் இப்போது பழகிவிட்டது. எனக்கு அவன் பெயர் தெரியாது. நடுத்தரமான உடல்வாகு உடையவன் என்பது தெரியும், சாம்பல்நிற சூட் அணிந்திருப்பான், நெற்றிப்பொட்டில் கருமை படர…

சாவதும் ஒரு கலைதான் : சில்வியா பிளாத் கவிதைகள்

“மரணித்தல் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்.” –  சில்வியா பிளாத் சில்வியா பிளாத் (Sylvia Plath, அக்டோபர் 27, 1932 – பிப்ரவரி 11, 1963), அமெரிக்கப் பெண் கவிஞர்; நாவல், சிறுகதை எழுத்தாளர். அவரின் கவிதைகள் பரவலாக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நுண் உணர்வுகளை அதற்கே…

நீயின்றி அமையாது உலகு

இந்த எழுத்துகள் மூலம் உங்கள் வாழ்வின் சில பக்கங்களை புரட்டிக்கொடுத்தவர்களை நீங்கள் நினைவுகூர்ந்தால் அதுவே தற்போதைய நமது இருப்புக்கான அர்த்தத்தை கொடுக்கும். ஒருவகையில் அது என் நினைவுகளில் சுற்றித்திரியும் பெண்களுக்கு நான் செய்யும் நன்றியும் கூட. பெண்கள் இல்லாமல் வாழ்வில் உச்சம் என்பதன் தரிசனம் கிடைக்காது என்றே நம்புகிறேன். அப்படிக் கொடுப்பவர்கள் நம்முடனேயே வாழ்கின்றவர்களாக இருக்கவேண்டிய…

மாய யதார்த்தத்தின் வலிமை

(சிறுகதை குறித்த திறனாய்வுக் கட்டுரை) வாசிப்பிலும் படைப்பிலும் சிறுகதையின் இடமே முதன்மையானது. இருப்பினும் படைப்பாளிகளால் சிறுகதை என்னும் உருவம், உள்ளடக்கத்தை ஒட்டியே தேர்ந்தெடுக்கப் படுகிறது. நவீனத்துவத்தில் சிறுகதையின் வீச்சு மேம்பட்டு, ஆகச்சிறந்த வடிவம் இதுதானோ என்று அதிசயிக்க வைக்கிறது. ஆனால் சிறுகதை வடிவத்துக்கு வரம்புகள் உண்டா? என்ன வரம்புகள்? படைப்பாளிக்கு மட்டும் சில இடத்தில் முட்டி…

இரை

இரண்டாவது தடவை அந்தத் தண்ணீரை எடுத்துக் குடித்திருக்கக் கூடாது. அதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாகி விட்டது. முதல் தடவை எந்தப் பிரச்சினையும் இல்லை. தாகம் அடங்கவில்லை போலிருந்தது. இரண்டாவது தடவை படுத்துக் கொண்டே, இருட்டில் போத்தலை வாயில் சரித்தபோது அளவுக்கதிகமான தண்ணீர் வாய்க்குள் புகுந்து உடனடியாக விழுங்கிக் கொள்ளமுடியாமல் புரையேறி விட்டது. தொண்டை வழியே உள்ளே…

மண்டை ஓடி: மண்ணின் மணத்தை நிறைத்திருக்கும் கதைகள்

ஓர் எழுத்தாளனாகப் பிறர் நூலை விமர்சனம் செய்யும் அளவுக்குத் தகுதி கொண்டிருக்கவில்லையென்றே நம்புகின்றேன். இதுவரையிலும் சிறுகதை இலக்கியம் என் கைக்கு அடங்காதொரு கலையாக இருக்கும் பட்சத்தில் ம.நவீனின் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பை ஒரு வாசகனின் பார்வையிலிருந்து விமர்சனம் செய்வது சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.

துணைக்கால் : ஒரு பார்வை

தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்தில் துணைக்கால் என்று சொல்லப்படும் துணையெழுத்து பிற எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும் இயல்பு கொண்டதாயினும் சொற்களின் பொருள் வேறுபாட்டுக்கும், பொருள் புலப்பாட்டுக்கும் மிகவும் இன்றியமையாதது. தன்னடக்கத்தின் காரணமாகத் தன் கட்டுரைகள் துணைக்கால் தன்மை கொண்டவை என நூலாசிரியர் விஜயலட்சுமி கூறினாலும் இந்நூல் மலேசியச் சூழலில் மட்டுமின்றித் தமிழ் புழங்கும் எழுத்துச் சூழலில் விழிப்புணர்வை…

துணைக்கால்: படைப்பாளிகளுக்குத் துணைநூல்

இந்நூலைப் பல கோணங்களில் படைப்பாளிகளுக்குத் தேவையான தகவல்களைச் சொல்லும் கையடக்க விதிமுறை நூலாக நான் பார்க்கிறேன். ஒரு நூல் எழுதத் தொடங்கும் முதல் எழுத்திலிருந்து அந்நூலால் கிடைக்கப்பெறும் வருமானம் வரை ஒவ்வொரு படைப்பாளரும் கட்டாயம் கருத்தில் வைத்திருக்கவேண்டிய செய்திகளை எளிமையாகவும் தேவைக்கு ஏற்ப ஆங்கிலக் குறியீடுகள் மூலமாகவும் வழங்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலிலிருக்கும் நூறு பக்கங்கள் இனி…