அவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை : வாசிப்பனுபவம்

“ஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன்வழி, அம்மொழியில் புழங்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாட்டு அறிவுத்தளத்தையும் அறியமுடியும் என்பதால் மலாய் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் குறித்து அறிந்திருக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதுவே ‘அவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ எழுதப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.” முன்னுரையில் அ.பாண்டியன்

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தேவையா?

மலேசியாவில் தமிழ்ப்பள்ளியின் இருப்பு குறித்து பேசுவதன் நீட்சி எப்போதுமே சர்ச்சையான ஒரு மையத்தில்தான் சென்று முடியும். சிறுபான்மை இனமான மலேசிய தமிழர்களுக்கென்று இருக்கும் அடையாளங்களில் ஒன்று கோவில் என்றால் மற்றது தமிழ்ப்பள்ளியாகவே எப்போதுமே பொதுபுத்தியால் நம்பப்பட்டு வருகிறது. இவை இரண்டுமே தொடக்கம் முதலே மொழியை வளர்க்கவும் சமுதாய போராட்டங்களை முன்னெடுக்கவும் ஒரு தளமாகவே இருந்துவந்துள்ளன. அதேபோல…

தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்

“வாழ்வின் துயரங்கள் வாழச் சொல்கின்றன” போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தக்கட்டுரை புலம்பெயர்தலுக்கான காரணங்களையோ, புலம்பெயர்ந்தவர்கள், புகலிடத்தில் சந்தித்த கொடூரங்களையோ ஆராயாது. புலம்பெயர்ந்தவர்கள் – புகலிடத்திலிருந்து எழுதிய சிறுகதைகளில் – பன்னாட்டு வாழ்வை, பண்பாட்டை, கலாச்சாரத்தை,…

எல்லைகளைக் கடந்த மொழியும் கவிதையும்: மொழிபெயர்ப்புக் கவிதைகள்

தமிழ்க்கவிதை இயக்கத்தில் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வரவு புதிய பாணியிலான கவிதை உருவாக்கத்திற்கு வழி வகுத்தது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் மொழிபெயர்ப்புகளோடு தமிழோடு தொடர்பற்ற சீன, ஆப்பிரிக்க, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கக் கவிதைகள் தமிழில் பரவலாக மொழிபெயர்க்கப்படுவதன் வழி புதிய வாழ்பவனுங்களைத் தமிழ்க் கவிதை உள்வாங்கிக் கொள்வதோடு, பாசாங்கற்ற அக்கவிதை மொழியினைத் தமிழ்க்கவிதைகளும் தன்னுள்…

சலமண்டர்

[ஜப்பானிய நவீன எழுத்தாளர்களின் முன்னோடி, மசுஜி ஈபுசே 1919ல் – எழுதி மிகவும் புகழ்பெற்ற கதை ‘சலமண்டர்’. உலகின் பல மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனிதர்களற்ற கதாபாத்திரங்களின் வழியும் சூழல்களின் வழியும் மனித வாழ்வின் அழுத்தங்களையும் உணர்வு போராட்டங்களையும் ‘சலமண்டர்’ எள்ளலோடு வெளிப்படுத்துகிறது.]   சலமண்டர் கடுஞ் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. அது தன் வசிப்பிடத்தில் இருந்து வெளியேர…

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். சிறையிலிருந்தபோது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார். அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டுசெல்லப் போதுமான பணம் கூட…

இடாலோ கால்வினோ கதைகள்

செய்யச்செய்தல் எல்லாவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்ட நகரம் ஒன்று இருந்தது. இப்போது, அங்கே தடை செய்யப்படாதது கிட்டிப்புள் விளையாட்டு மட்டுமே என்பதால், மக்கள் அந்நகரத்தின் பின்னாலிருந்த புல்வெளியில் ஒன்றுகூடி, கிட்டிப்புள் விளையாடி நாளைக் கழித்தனர்.

நீயின்றி அமையாது உலகு

அந்தப் பெண்ணை நினைவில் வைத்துக்கொள்ள அவளின் முகமோ அவளின் பெயரோ என்னிடம் இல்லை. காலியாய் கிடக்கும் வீடொன்றே போதுமானதாக இருந்தது. உண்மையில் எனக்கும் பெண்களுக்குமான மனத்தொடர்பும் அவர்கள் மீதான ஈர்ப்பும் ஏற்பட அந்த பெண் காரணமாக இருக்கலாம். இத்தனைக்கும் அவள் குறித்து நான் அறிந்தது உண்மைதானா என்கிற சந்தேகம் கொள்ளக்கூடிய வயதெல்லாம் அப்போது இல்லை. இன்றும்…

தி சர்க்கிள்: மனக் காடுகளும் மதக் கோடுகளும்

கிடக்கும் காடுகளைப் போல் மனிதனின் மனங்களுக்குள் அடர்ந்து கிடக்கும்  ஆசைகளும் கனவுகளும் மதக் கோடுகளால்  எல்லைப்படுத்தப்படும்  போது அதனால் விளையும் எதிர்வினைகள்  மதக் குற்றங்களாக விசாரணைக்குள் கைதாகிறது. இந்த மனக்காடுகளைச் சுமந்து கொண்டு சமூகத்தில் நடமாடும் மனிதனின் உணர்வுகள் மதக் கோடுகளால் பரிசீலனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மதத்தின் பேரில் பெண்களின் மேல் பாய்ச்சப்படும் பரிசீலனைகள் ஆண்…

பாட்டாளிகளின் சூதாட்டம்

            பாட்டாளிகளின் சூதாட்டம்   ஏக வல்லமை பொருந்திய கன்வேயர் பெல்ட்டுகளின் பிதாக்களே பௌர்ணமியைக் கண்டு வருடங்களாகின்றன அமைதியாகக் கொஞ்சம் தூங்கவும் வேண்டும் கூர் பற்சக்கரங்களை இணைத்தபடி நீண்டுகொண்டே போகும் இக் கன்வேயர் பெல்ட்டை எப்போதுதான் நிறுத்துவீர்கள் காணாமல் போவது போலும் கனவு காண்பதுபோலவும் நான் தொழிற்சாலையின் வாயிற்…

கலை இலக்கிய விழா 7 : ஒரு பார்வை

வல்லினம் கலை இலக்கிய விழா 7, இம்முறை மலாயா பல்கலைக்கழகத்தில் நவம்பர் முதல் நாள் நடைபெற்றது.  இவ்வாண்டு கலை இலக்கிய விழாவில் நான்கு இளம் படைப்பாளர்களின் நூல்கள் வெளியீடு கண்டன. அவை முறையே ம.நவீனின் சிறுகதை தொகுப்பான ‘மண்டை ஓடி’, அ.பாண்டியன் எழுதிய ‘அவர்கள் பேனாவின் இருந்து கொஞ்சம் மை’ எனும் மலாய் இலக்கியம் குறித்த கட்டுரைத்தொகுப்பு,…

“என்னையடுத்து வேறோரு வாசகனுக்காக சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.” – தயாஜி

கேள்வி : சிறுகதை, கவிதை, தொடர்கதை என எழுதிக்கொண்டிருந்த நீங்கள், உங்களின் முதல் நூலாகப் பத்திகளின் தொகுப்பை வெளியிடக்காரணம் என்ன? தயாஜி : மிகச்சரியாக நான் சொல்லவந்ததை எந்த வடிவத்தில் சொல்ல முடியுமோ, என் சக வாசகனுடன் என்னால் சுலபமாக பேச முடியுமோ அந்த வடிவில்தான் என் முதல் நூல் வரவேண்டும் என நினைக்கிறேன். பத்திகள்…

“மலாய் இலக்கியத்தின் ஆணி வேரே அரசியல் விழிப்புணர்வுதான்” அ.பாண்டியன்

கேள்வி : உங்களின் இலக்கிய ஆர்வம் எப்போதிருந்து தொடங்கியது? அ.பாண்டியன் : தனித்து, இலக்கிய ஆர்வம் என்று கூற முடியாது. ஆனால் வாசிக்கும் ஆர்வம் பதின்ம வயதில் துளிர்த்தது. அந்த வயதில் கிடைக்கும் எல்லாவகைக்  கதைகள் கட்டுரைகள்  போன்றவற்றை வாசிக்கத் துவங்கினேன். என்  தந்தை அப்போது திராவிடக் கழக அபிமானியாக இருந்தார். வீட்டில் நிறைய திராவிடக்…

“தமிழ் எழுத்தாளர்களுக்குப் பெருமளவு ISBN குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.”- விஜயலட்சுமி

சரவணதீர்த்தா: தொடக்கத்தில் வெகுஜன இலக்கிய ரசனை கொண்ட உங்களுக்கு, தீவிர இலக்கியம் குறித்த ஆர்வம் எவ்வாறு தொடங்கியது? விஜயலட்சுமி: எனக்கு எப்போதுமே அதன் பேதம் புரிந்ததில்லை. எனது வாசிப்பும் பொதுவாக ஆய்வுகள் தொடர்பானதுதான். வல்லினம் நண்பர்கள் மூலமாகவே வெகுஜன மற்றும் தீவிர இலக்கியத்தின் பேதம் புரிந்தது. ‘கடக்க முடியாத காலம்’ எனும் ம.நவீனின் நூல் மூலமாக…

“எனது பெருங்கோபமும் பேரழுகையும் எனக்குள் இருக்கும் கவிஞனிடமிருந்துதான் எழுகின்றன.” – ம.நவீன்

கேள்வி : சிறுகதையில் இருந்துதான் உங்கள் இலக்கியப் பயணம் தொடங்கியதாக அறிகிறேன். ஆனால் உங்களின் ஆறாவது நூலாகத்தான் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருகிறது, காரணம் என்ன? ம.நவீன் : எனது சிறுகதைகள் குறித்த எவ்வித உயர்ந்த மதிப்பீடும் எனக்கு இல்லாதது ஒரு காரணம் என்றால் அவ்வுணர்வு ஏற்பட நான் தேடித்தேடி வாசித்த நல்ல சிறுகதைகள் மற்றுமொரு…

பத்தி எழுத்துகள்

கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை இந்தப்பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும், உங்களோடு எழுத்து குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மகிழ்ச்சி. வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர் தயாஜி அவர்கள் எழுதிய ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ – கவித்துவமான தலைப்பு – வல்லினம் இணைய இதழில் அவர் தொடர்ந்து எழுதிவந்த பத்திகளில் சிறந்தவற்றைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார்கள்.…

அஞ்சலி : தந்தையைப் போன்ற வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு

ஆயுதபூஜை என்று கூறப்படும் சரஸ்வதி பூஜை அன்று திறனாய்வின் பிதாமகர் என்று பலரால் போற்றப்படும் திரு வெங்கட் சாமிநாதன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது எண்பத்திரண்டு. தம் வாழ்வின் இறுதி மூச்சு வரை கலை, இலக்கிய விமர்சகராக அற்புதமான பணி ஆற்றினார். தமிழகத்தில் பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பல இணையப்பக்கங்களில் எழுதிவருகின்றனர். சிங்கப்பூர்த்…