Author: விஜயலட்சுமி

நீராலானது

“அம்மா மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா அப்பா செத்திருக்க மாட்டாரு!” என்றான் அரசு.  அப்பாவின் படையலுக்கு வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டு சென்றபின்னர் வீடு மீண்டும் வெறுமையைப் போர்த்தத் தொடங்கியிருந்தபோது எழுந்த அவன் குரல் மாலதியைத் திடுக்கிட வைத்தது. அண்ணன் என்ன சொல்லவருகிறான் என்பதையும் தன் காதில் விழுந்த சொற்களை நம்பலாமா என்றும் யோசித்து குழம்பிவிட்டாள்.

The Platform: மானுடத்தின் இறுதி நம்பிக்கை

சமூக வாழ்வியல் சிக்கல்களைப் பேசுமிடமெல்லாம் பொதுவாகவே உயரடுக்கு சமூகம், அதனுடன் நெருங்கியத் தொடர்புடைய முதலாளியத்துவம் சார்ந்தும் அச்சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டப் பிரிதொரு சமூகத்தைச் சார்ந்தும் கவனம் குவிமயமாவது இயல்பு. முதலாளியத்துவத்தை எதிர்த்துச் செயல்பாட்டு ரீதியிலும் கருத்தியல் பதிவாகவும் அழுத்தமான எதிர்ப்பை முன்வைத்த கார்ல் மார்ஸ் தொடங்கி இன்று அதன் நீட்சியில் முழுக்கவே சமூகவியல் சிக்கலாக உருமாற்றம் பெற்று…

பட்டுத்துணி

மணி அடித்தும் வீட்டுக்குப் போகும் அவசரமோ வழக்கம்போல் பேருந்து வரும்வரை பையன்களுடன் ‘தூஜோ காசுட்’ விளையாடும் எண்ணமோ வரவில்லை. ஒரு பட்டுத்துணி வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அம்முவின் நினைவு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. கடைசி ஆளாக வகுப்பிலிருந்து வெளியில் வந்தாள். தோளில் புத்தகப் பை. காலையில் அம்மா கொதிக்கவைத்து ஊற்றிய தண்ணீர் கொக்கோகோலா நெகிலி புட்டியில்…

ஆதியோசை

என்னை நிரப்ப முயன்ற இருளுக்குள் மங்கலாக ஊடுருவியிருந்தது சிறிது வெளிச்சம். வடிவற்ற தேங்கிய குட்டையின் முகப்பில் ஊடுருவிய அந்த வெளிச்சம் இருளின் ஒரு கோணத்திலிருந்து மட்டும் என்னை மீட்டெடுத்துக் கொண்டிருந்தது. நான் குட்டையின் அடியாழத்தில் இருந்தேன் என்பதையன்றி வேறெந்த நினைவும் இல்லை; நான் நீந்தவுமில்லை மிதக்கவுமில்லை; திணறிக்கொண்டு மேலே வரும் முனைப்பேதும் என்னிடம் இருக்கவுமில்லை. அது…

எனவே அந்தப் புத்தகத்தைத் தடை செய்வீர்

நீங்கள் என் வாயை மூடலாம் என் மனதையல்ல  நீங்கள் என் கண்களை வெட்டி எறியலாம் ஆனால் நான் குருடனாக மறுக்கிறேன்  நீங்கள் என் உடலைக் கொல்லலாம் என் ஆற்றல் உங்கள் முடிவற்ற பொய்களுள் ஊடுருவி உங்களைப் பேயாய் துரத்தும் (மொழிபெயர்ப்பு கவிதை) ஒவ்வொரு கருத்தாக்கத்தையும் கலைவடிவத்தையும் மனிதன் தனது அனுபவம், கல்வி, சிந்தனை, சமூக மதிப்பீடுகளின்…

கே.எஸ் மணியம்: மரணமிலா பெருவாழ்வு

சொற்ப காலம் கொள்ளும் இம்மானுட வாழ்வில் மனிதன் தன் இறுதி கணம்வரை எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் தேடி அடைய முடியாததை அவன் சந்ததி தேடுகிறது. முற்றிலும் புறவயமான இத்தேடலின் பின்னால் அவனது அகம் சார்ந்த வலிகளும் வடுக்களும் ஆயிரம் கதைகளைத் தேக்கி வைக்கின்றன. மூதாதையர்களின் இருத்தலை கேள்வி எழுப்புவதும் தன் இருப்பை மீள்பார்வை…

எழுத்தாளர்கள்தான் நிதர்சன உலகின் சாட்சியங்கள்- கே.எஸ்.மணியம்

கடந்த ஆண்டு (2019) தன்னுடைய நூல் வெளியீடு, பொதுவெளி கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என பல ஆண்டுகள் நீடித்திருந்த மௌனவெளியிலிருந்து திடுமென கிளம்பி வந்திருந்தார் எழுத்தாளர் கே.எஸ். மணியம். கல்வியாளர்களுக்கே உரிய நடையுடை பாவனைகள் இல்லாமல் நிழற்படங்களில் முழுவதும் கலைஞனாய் தோற்றமளித்தார்.  அதன் இடைப்பட்ட கணங்களின் பதிவுதான் இந்த நேர்காணல். ஜூன் 2019 ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில்…

வாளாக மாறும் அளவுகோல்

மலேசியாவில் பன்னெடுங்காலமாக இலக்கியத்தில் இயங்கிகொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களிடையே சுயத்தணிக்கை மனப்பான்மை அதிகம் இருப்பதை நூலகராக நான் பல தருணங்களில் அவதானித்ததுண்டு. பெரும்பாலும் குடும்பம், தோட்டம், பாலியம், காமம் என மிகச்சுருங்கிய களங்களில் அவர்கள் சிறுகதைகள் உருவாவதைப் பார்த்துள்ளேன். அதிகாரத்துக்கு எதிராகவோ அரசியல் ஒடுக்குமுறைகளின் எதிர்ப்புக்குரலாகவோ இனரீதியான பாராபட்சங்களுக்கு எதிர்வினையாகவோ இல்லாமல் தங்கள் மனதுக்குள் இருக்கும் ஒரு…

மலேசிய எழுத்தாளர்களின் வாழ்க்கை

[2006ஆம் ஆண்டு Nou Hach மாநாட்டில் எழுத்தாளர் கே.எஸ். மணியம்  வழங்கிய சொற்பொழிவு] வணக்கம்! சக எழுத்தாளர்களிடமும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களிடமும் பேசுவதற்கான இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நான் பேசப்போவதில் உங்களுக்குத் தேவையான சில கருத்துகள் இருக்கும் என்று நம்புகிறேன். தொடக்கமாக, மலேசியாவின் இலக்கியம் குறித்த காட்சியை உங்கள் முன் வைக்கிறேன். இந்த…

“அடையாளத் தேடலில் பல நேர்மறையான அம்சங்களும் சாத்தியமே.” – கே.எஸ்.மணியம்

90களில் கே.எஸ்.மணியம் அவர்களிடம் எடுக்கப்பட்ட இந்த நேர்காணல்  அவரது புனைவுலகம் மட்டுமல்லாது கருத்துலகையும் வாசகனின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சமூக, அரசியல் அவதானிப்புகளை அவரது சொற்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பதாக உள்ளது. தமிழ் வாசகர்களுக்காக மொழிப்பெயர்க்கப்பட்ட இந்த நேர்காணல் வழி அவரது புனைவுலகை மேலும் ஆழமாக உணர முடியும்…

ஒரு கற்பனையின் வழித்தடம் : கே.எஸ். மணியத்துடன் ஓர் உரையாடல்

கே.எஸ். மணியத்தின் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என அனைத்தும்  மலாயா/மலேசியாவின் புலம்பெயர் சமூகம் இதுவரை கடந்துவந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் அலுக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அனைத்து சமூக உறுப்பினர்களும் தங்களுடைய மரபுவழி அடையாளங்களையும் வாழும் நாட்டின் அடையாளங்களையும் ஒருங்கே அணைத்துக் கொள்வதன்வழி  பன்முகத் தன்மைகொண்ட ஒன்றைச் சமூகமாக உருவெடுக்க முடியும்…

புலி வேட்டை – கே.எஸ்.மணியம்

கிழவன் மரணத்தை எதிர்கொள்ள போராடிக் கொண்டிருந்தான். அவன் எதிர்ப்பார்த்த அமைதியைக் கனவுகள் வந்து தொல்லைபடுத்தி குலைத்தன. அவற்றுள் சில கொடுங்கனவுகளின் கூர்மையான எல்லைவரை கொண்டுபோய் தூக்கத்தை அவனிடமிருந்து பறித்துக் கொண்டிருந்தன. அவனது சிந்தனையைச் சிதைத்துகொண்டேயிருந்த கனவுகள் அவனை விரக்தியாலும் எரிச்சாலாலும் முணுமுணுக்க வைத்தன. “எதைப்பற்றியும் அக்கறையில்லாமல் இருந்தாதான் அதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும்.” அவன் அப்போது சன்னல்வழி…

ஏன் சடக்கு?

‘சடக்கு’ இணையத்தளம் மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் முகத்தை படங்கள், துண்டு பிரசுரங்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் வாயிலாக ஆவணப்படுத்தி பொது பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்பது ஒருவகை புரிதல். ஆவணப்படுத்துதல் எனும் பதத்தைவிட  காப்பகப்படுத்துதல் எனும் பதம்தான் இவ்விணையத்தள உருவாக்கத்திற்கு மிகப் பொருத்தமான பதமாக இருக்கும். ஆவணப்படுத்துதல் என்பது பயன்மதிப்புமிக்க…

இஸ்ரேலிய எழுத்தாளர் எட்கர் கரிட் (Etger Keret) சிறுகதைகள்

உன்னுடையவன் – Your Man என்னைவிட்டு பிரியப்போவதாக எபிகாயில் கூறியபோது நான் அதிர்ச்சியில் இருந்தேன். வாடகை வண்டி அவளுடைய இடத்தில் தான் வண்டியை நிறுத்திவிட்டிருந்தது. அவள் காரிலிருந்து இறங்கி அருகிலிருந்த நடைபாதையில் நின்றவாறு இதற்குமேல் என்னைத் தேடி வர வேண்டாம் என்றாள், இதைப்பற்றி தொடர்ந்து பேசவும் விரும்பவில்லை என்றாள். இதெல்லாம்விட மிக முக்கியமாக என்னிடமிருந்து எந்த…

Etger Keret: மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்

இஸ்ரேலிய எழுத்தாளர் Etger Keret (1967) சமகால உலக இலக்கியத்தில் முக்கியமான சிறுகதையாசிரியா்களில் ஒருவர். Pipelines (צינורות, Tzinorot, 1992), அவரது படைப்பில் வெளியான இம்முதல் சிறுகதை நூல் மிகக் கடுமையான புறக்கணிப்புக்கு உட்பட்டது. ராணுவத்தில் தன்னுடன் பணிபுரிந்த நண்பனின் மரணத்திற்குப் பிறகு எழுத வந்த அவரது இரண்டாவது நூல் Missing Kissinger  (געגועיי לקיסינג’ר, Ga’agu’ai…