Category: நேர்காணல்

“யதார்த்தவாதப் புனைகதைகளுமே மாற்று மெய்ம்மைகள்தாம்!” யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர் தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளி. இன்னும் அதிகமாகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடம் சென்று சேர வேண்டிய முதன்மையான படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், குறுங்கதைகள், மொழிப்பெயர்ப்பு என இடையறாது இயங்கும் யுவன் சந்திரசேகர் அவர்கள், நவம்பர் மாதம் மலேசியாவில் நடக்கும் GTLF (ஜார்ட் டவுன் இலக்கிய விழா) நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை…

“கடவுளாக வாழ்வது சுலபம்!” சனிரா

அண்மையில் மேற்கொண்ட நேபாளப் பயணத்தில் சனிரா பஜ்ராச்சார்யா (chanira bajracharya) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனிரா முன்னாள் குமாரி தேவி. ஏப்ரல் 2001இல் பதான் தர்பார் சதுக்கத்தின் வாழும் தெய்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்போது அவருக்குப் பத்து வயது. 2011ல் தன் பதினைந்து வயதில் பருவமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் எளிய பெண்ணாகத் தன் வாழ்வைத் தொடர்ந்து…

“விளம்பர வெளிச்சம் பட்டவர்களை மட்டுமே எழுத்தாளர்களாகவும் அறிஞர்களாகவும் தமிழகத்தில் கொண்டாடும் போக்கு உள்ளது!” மு. இளங்கோவன்

முனைவர் மு. இளங்கோவன் தமிழியக்கம் சார்ந்த அணுகுமுறை கொண்டவர். இளம் வயதிலேயே பெருஞ்சித்திரனாரின் தமிழ்ச்சிட்டு, தென்மொழி போன்ற தனித்தமிழ் அறிஞர்களின் ஏடுகள் அறிமுகம் ஆனதால், தமிழ் மொழியின் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆழ்ந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன்வழி பன்முக ஆய்வாளராக உருமாறி நாட்டுப்புறவியல், நாட்டுப்புறப் பாடல்கள், தமிழிசை, மறந்துபோன தமிழறிஞர்களின் வரலாறு, ஆவணப்படம்,…

“படைப்பாற்றலின் முதிர்ச்சி ஒரே நாளில் வந்துவிடாது”

‘S.E.A Write Award’ எனும் தென்கிழக்காசிய எழுத்தாளர்கள் விருது 1979-ஆம் ஆண்டுத் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இது தென்கிழக்காசிய நாடுகளின் ஆசியான் (ASEAN) கூட்டமைப்பை உள்ளடக்கிய எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படும் இலக்கிய விருதாகும். தாய்லாந்தில் தொடங்கப்பட்ட இவ்விருது தென்கிழக்காசிய எழுத்தாளர்களின் படைப்பாற்றலை அங்கீகரிப்பதோடு, சமகால இலக்கியம் குறித்த பரந்த விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதையும், பல்வேறு…

“நான் ஒரு திரிபுவாதி” – அக்கினி சுகுமார்

மலேசிய இலக்கியச் சூழலில் அக்கினியின் எழுத்துகள் தனித்துவமானவை. மலேசியப் புதுக்கவிதை வரலாற்றின் தொடக்கக் காலத்தில் அதன் போக்கை தீர்மானிக்கும் சக்திகளில் ஒருவராக இயங்கியவர் பின்னாட்களில் அறிவியல் கட்டுரையாளராக வெகுமக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டார். நகைச்சுவையான பாணியில் சிக்கலான தகவல்களையும் எளிய மக்களிடம் சேர்க்கும் வல்லமை உள்ள எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் இவர். கவிதை, நாவல் என இவர்…

“பசியென்பது இனம், மதம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று” – மா.ஜானகிராமன்

2021ஆம் ஆண்டுக்கான வல்லினம் விருதும் வரலாற்றுத் தொகுப்பாளரான ஜானகிராமன் மாணிக்கம் அவர்களுக்கு வழங்குவதில் வல்லினம் பெருமைகொள்கிறது. மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணப்படுத்தலில் திரு ஜானகிராமன் பங்களிப்பு முதன்மையானது. தோட்டப் பின்னணியில் வறுமைச் சூழலில் வளர்ந்த இவர், மலேசிய இந்தியர்களின் வரலாற்றை ஒட்டிப் பல கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். மலேசியாவில் இந்தியர்களின் வரலாறு ரீதியான மாற்றங்களை ‘மலேசிய…

“முதன்முதல்ல எழுதுறவனுக்கு கச்சாப்பொருள் அவன் புழங்கின வாழ்க்கைதான்”

கடந்த ஏப்ரல் மாதம் அருண்மொழிநங்கையின் ‘மரபிசையும் காவிரியும்‘ கட்டுரையை படித்தபோது அந்தக்கட்டுரை ஒரு பெரிய நாவலின் தொடக்கம்போல எனக்குத் தோன்றியது. அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்று முதல், ஒவ்வொரு வாரமும், அவர் தொடங்கிய வலைத்தளத்தில் (https://arunmozhinangaij.wordpress.com/blog/) கட்டுரைகள் எழுத எழுத, தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்திருக்கிறேன். குட்டி அருணாவும் ஆலத்தூரும் அதன் மனிதர்களும்…

“மின்னூல்கள் என்ற பெயரில் ஏராளமான குப்பைகளும் குவிந்துகொண்டிருக்கின்றன!” – ஶ்ரீநிவாச கோபாலன்

2021க்கான ‘முகம்’ விருது ஶ்ரீநிவாச கோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பின் மூலம் வழங்கப்படும் இவ்விருது, தமிழில் அச்சில் இல்லாத பல அரிய நூல்களை, தொழில்நுட்பத்தின் உதவியால் மின்-நூல்களாக இணையத்தில் தரவேற்றிப் பதிப்பிக்கும் ஶ்ரீநிவாச கோபாலனின் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. ஶ்ரீநிவாச கோபாலன், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர்.…

“விருதுகளையும் பாராட்டுகளையும் துறந்த ஆளுமையால் மட்டுமே சிங்கை இலக்கியத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும்!” – லதா

கனகலதா (லதா) ‘தீவெளி’ (2003), ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ (2004), யாருக்கும் இல்லாத பாலை (2016) ஆகிய மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அவரின் ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது. அவரின் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் The Goddess in the Living…

“புற வேற்றுமைகளால் மகிழ்வித்து; அக பேதங்களை அகற்றுவது பயணம்” – சுரேஷ் நாராயணன்

சுரேஷ் நாராயணன் பெரும் பயணி. இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணித்திருக்கும் இவர் அகன்று விரிந்த உலகின் பெரு நிலப்பரப்புகளில் தன்னைத் தொலைத்து மீண்டும் தேடிக்கண்டு பிடிப்பதை பல ஆண்டுகளாகச் செய்து வரும் பயணி. உலகின் பார்வையாளனாக மாறி, அவ்வனுபவம்  விதைக்கும் தெளிவின் நீட்சியோடு அடுத்தடுத்த பயணத்தைத் தொடர்கிறார். sureshexplorer.com என்ற அகப்பக்கத்திலும் Suresh Explorer…

எழுத்தாளர்கள்தான் நிதர்சன உலகின் சாட்சியங்கள்- கே.எஸ்.மணியம்

கடந்த ஆண்டு (2019) தன்னுடைய நூல் வெளியீடு, பொதுவெளி கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என பல ஆண்டுகள் நீடித்திருந்த மௌனவெளியிலிருந்து திடுமென கிளம்பி வந்திருந்தார் எழுத்தாளர் கே.எஸ். மணியம். கல்வியாளர்களுக்கே உரிய நடையுடை பாவனைகள் இல்லாமல் நிழற்படங்களில் முழுவதும் கலைஞனாய் தோற்றமளித்தார்.  அதன் இடைப்பட்ட கணங்களின் பதிவுதான் இந்த நேர்காணல். ஜூன் 2019 ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில்…

“எழுத்தென்பது பொழுதுபோக்கு அல்ல” – சை.பீர்முகம்மது

மலேசிய நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளில் பலராலும் அறியப்பட்ட பெயர் சை.பீர்முகம்மது. 1961இல் சிங்கப்பூரில் வெளிவந்த ‘மாணவன்’ இதழில் முதல் சிறுகதையை எழுதினார். அப்போது தொடங்கி இன்றுவரை சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை, விமர்சனம், நாவல் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார். மலேசிய இலக்கியத்தை தமிழ் பேசும் நிலங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனியாத தாகம் கொண்ட…

“இலக்கியத்திற்கும் கல்வியாளர்களுக்கும் தொடர்பில்லை” – ஶ்ரீதர்ரங்கராஜ்

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஶ்ரீதர்ரங்கராஜ். மலேசியப்பெண்ணைத் திருமணம் செய்து கடந்த 5 வருடங்களாக மலேசியாவில் கிள்ளான் எனும் நகரில் வாழ்ந்து வருகிறார். தமிழகத்தின் வலசை, கல்குதிரை போன்ற சிற்றிதழ்களில் இயங்கியுள்ளதோடு வல்லினம் இதழிலும் சுமார் ஓர் ஆண்டுகள் பொறுப்பாசிரியாகப் பங்காற்றியுள்ளார். பயணம் (கட்டுரை), ஹருகி முரகாமியின் சிறுகதைகளின் இரு மொழிப்பெயர்ப்புத் தொகுப்புகள் (கினோ, நீர்க்கோழி) போன்ற…

ஒரு சொல்லை, ஒரே ஒரு வாக்கியத்தைக் கண்டுப்பிடிக்கவே எழுதுகிறேன்

தனது புனைவுகளில் வாழ்க்கையை அதன் இயல்பில் பதிவு செய்யும் எழுத்தாளர் இமையம். அவர் எழுத்துகளில் கோட்பாடுகளின் தாக்கம் இருப்பதில்லை. அசலான வாழ்க்கை அதன் அத்தனை முரண்களுடனும் பதிவாகியிருக்கும். தமிழ் இலக்கியப் பரப்பில் தனக்கான தனிபோக்கை உருவாக்கிக் கொண்டவர் இமையம். ‘கோவேறு கழுதைகள்’ தொடங்கி ‘செடல்’, ‘ஆறுமுகம்’, ‘எங் கதெ’, ‘செல்லாத பணம்’ என நாவல்களும் பல…

“அடிப்படையில் எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை”

மருத்துவர் மா.சண்முகசிவா மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர். மலேசியாவில் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி. 1987 – இல் ‘அகம்’ எனும் இயக்கத்தைத் தோற்றுவித்து அதன் மூலமாக படைப்பிலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். மலேசிய இலக்கியத்தின் தரமும் படைப்பாளர்கள் தரமும் உயர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இவரிடத்தில் மேலோங்கி இருந்தது. இவருடைய தொடர் முயற்சி இன்றைய…