Category: நூல் முன்னுரை

மொபைல் வைத்திருப்போருக்கு மோட்சம் இல்லை

நவீனின் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு மூன்று வகையான கவிதைகளைப் பிரதானமாகப் பேசுகின்றன. பிரிவு குறித்தான ஏக்கம், மாயா என்ற சிறு குழந்தையின் உலகம், அலைக்கழிக்கப்படும் சமகால வாழ்வு. பொதுவாகக் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் அந்தத் தொகுப்பிலிருந்து கவிதைகளை மேற்கோள் எடுத்துக்காட்டி எழுதுவது உ.வே.சா காலத்தில் தொடங்கிய வழக்கம். நான் அவற்றிலிருந்து விடுபடலாம் எனக் கருதுகிறேன்.…

வென்று நிலைத்தவை

தமிழ் நவீன இலக்கியம் நிலைபெற்றுள்ள நாடுகளில் மலேசியா தனித்த போக்கைக் கொண்டது. பல்வேறு குழுக்களாக தமிழர்கள் இங்கு புலம்பெயர்ந்திருந்தாலும், ரப்பர் தோட்டங்களில் பால்மரம் சீவுவதற்காக வந்தவர்களே இங்கு இலக்கியத்தை அதிகம் முன்னெடுத்தனர். இவர்கள், தங்களிடம் இருந்த அடிப்படைத் தமிழறிவையும் கலையுணர்வையும் கொண்டு இலக்கியத்தை வெளிப்படுத்தினர். தமிழ் மொழியின்மீது இருந்த தீராக் காதலால் இவர்களின் படைப்பு முயற்சிகள்…

மா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் இடம் 1980களின் இறுதியில் வலுவாக உருவானது. 1950களில் மலேசியா வந்த கு.அழகிரிசாமி இந்நாட்டில் அதுவரை இருந்த சிறுகதைப் போக்கின் உரத்த குரலையும் கருத்துப் பிரதிநிதிகளின் உரையாடல்களையும் விமர்சித்ததிலிருந்து மொழியின் கலை வடிவத்துக்கான முதல் விமர்சனக் குரலை இம்மண்ணில் பதிவு செய்தார் என எடுத்துக்கொண்டால் அதன் நீட்சியாக 1980களில்…

முன்னுரை: விமர்சனம் என்பது வாசக உரிமை

இலக்கிய படைப்புகள் இருவழி தொடர்புள்ளவை. எழுத்தாளனின் உள்ளத்தில் இருந்து விரியும் கற்பனையும் அனுபவமும் வாசகனுக்கு மெய்நிகர் வாழ்க்கை அனுபவமாகிறது. இலக்கிய பிரதியின் வழியே படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் அந்தரங்க உரையாடல் நிகழ்கிறது. அந்த உரையாடலின் வழி வாசகன், எழுத்தாளன் காட்டும் அனுபங்களை மென்மேலும் விரித்துக் கொள்ள முடிகிறது. படைப்பிலிருந்து பெரும் அனுபவங்களும் திறப்புகளும் வாசகனின் வாழ்க்கை…

முன்னுரை: கலையின் ஒளிக்குரல்

வல்லினத்தில் தொடர்ந்து வெளிவந்த உலக சினிமா பற்றிய கட்டுரைகள் ‘ஊதா நிறத் தேவதைகள்’ எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. இவை சினிமாவை விமர்சித்துப் பேசும் கட்டுரைகள் அல்ல. சினிமாவின் நுட்பம் பற்றியோ கலைவடிவம் பற்றியோ அதன் ஒளிமொழி குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. நான் திரைக்கதைக்குள் ஒளிந்துள்ள மானுடத்தைக் கவனிப்பவன். அவ்வகையில் இந்தக் கட்டுரைகள்…

வாளாக மாறும் அளவுகோல்

மலேசியாவில் பன்னெடுங்காலமாக இலக்கியத்தில் இயங்கிகொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களிடையே சுயத்தணிக்கை மனப்பான்மை அதிகம் இருப்பதை நூலகராக நான் பல தருணங்களில் அவதானித்ததுண்டு. பெரும்பாலும் குடும்பம், தோட்டம், பாலியம், காமம் என மிகச்சுருங்கிய களங்களில் அவர்கள் சிறுகதைகள் உருவாவதைப் பார்த்துள்ளேன். அதிகாரத்துக்கு எதிராகவோ அரசியல் ஒடுக்குமுறைகளின் எதிர்ப்புக்குரலாகவோ இனரீதியான பாராபட்சங்களுக்கு எதிர்வினையாகவோ இல்லாமல் தங்கள் மனதுக்குள் இருக்கும் ஒரு…

முன்னுரை: காற்றில் அலையும் ஓசை

மலேசியாவில் வெளிவரும்  ‘மன்னன்’ மாத இதழுக்கு நேர்காணல்கள் செய்யத் தொடங்கியது 1999களில். அது வெகுசன இதழ். எனவே நேர்காணல்களின் நோக்கம் வாசகர்களை உற்சாகப்படுத்துவதாய் இருந்தது. எனவே சமகாலத்தைய நிகழ்வுகளின், சலசலப்புகளின் அடிப்படையில் நேர்காணல்களில் கேள்விகளை அமைத்திருப்பேன். ‘காதல்’ இலக்கிய இதழ் தொடங்கப்பட்டபோது அதில் மாதம் ஓர் எழுத்தாளரின் நேர்காணலைப் பிரசுரிப்பதென முடிவானதும், அப்பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன்.…

நடமாடும் பள்ளிக்கூடம்

13.5.2017- மலாயா பல்கலைக்கழகத்தில் வெளியீடுகாணும் ம.நவீனின் ‘மாணவர் சிறுகதை’ எனும் நூலுக்கு மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம்.மூர்த்தி அவர்கள் எழுதிய அணிந்துரை. யூ.பி.எஸ்.ஆர் பயிற்சிப்பட்டறையுடன் நடைபெறும் இந்த வெளியீட்டில் கலந்துகொள்ள மாணவர்களின் முன் பதிவு அவசியம். தொடர்புக்கு: தயாஜி 0164734794 / 0149005447 சிறுகதை என்கிற நவீன இலக்கியவடிவம் தமிழில் தோன்றிய நாள் முதலே…

வகுப்பறையின் கடைசி நாற்காலி

‘வல்லினம்’ இணைய இதழின் ஆசிரியர், ‘பறை’ எனும் ஆய்விதழின் ஆசிரியர், ‘யாழ்’ எனும் மாணவர் இதழின் ஆசிரியர், கவிஞர்,சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர்,திறனாய்வாளர், சினிமா வசனகர்த்தா, பதிப்பாளர் என பன்முகம் கொண்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் நவீன், தனது பள்ளி மற்றும் வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிற…

வாசனைபூசிய வாழ்வு

இந்தக் கட்டுரைத்தொகுப்பில் என்னை மட்டுமன்றி எவரையும் முதலில் ஈர்க்கக் கூடியது அதன் பாசாங்கற்ற குரல்தான். வலிந்து சொற்களைத் தேடி அலங்காரமாக எந்த விஷயத்தையும் சொல்வதில்லை. தனக்கு நடந்த சம்பவங்களை, தனக்குள் எழுந்த கேள்விகளை, நிகழ்ந்த புரிதல்களை அதிகம் மெனக்கெடாமல் செய்தபதிவு இக்கட்டுரைகள். குறிப்பாக, ‘ஊர்க்காரர்கள்’, ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’, ‘பொம்மைகளின் வன்முறை’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.…

கேள்விகளிலிருந்து பதிலுக்கு

என் முதல் புத்தகம் இது. ஐந்தாண்டுகள் வல்லினத்தில் நான் எழுதிய பத்திகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக்கப்பட்டுள்ளது. பெயருக்குத்தான் பல ஆண்டுகள் எழுதியதாகச் சொல்லிக்கொண்டாலும் அந்தந்த காலக்கட்டத்தோடு சில படைப்புகள் காலாவதியாகிவிடுவதை இந்த நூலுக்காகக் கட்டுரைகளைத் தொகுக்கும் போது உணர்ந்தேன். இது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. எழுத்தென்பது கருத்து ரீதியில் முரண்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் காலம் கடந்தும் நிற்கவேண்டும். அப்படியான…

துணைக்கால் தன்மை கொண்ட கட்டுரைகள்

தமிழ் எழுத்துகளில் துணைக்காலுக்கென தனித்த மரியாதை இருப்பதில்லை. அவ்வெழுத்து இன்னொரு எழுத்தைச் சார்ந்தது. ஆனால் அது இல்லாமல் போகுமானால் மொழியைக் குறில் நெடிலுடன் எழுதுவது சாத்தியமே இல்லாமல் தவிக்கும். ஒருவகையில் நான் எழுதியுள்ள கட்டுரைகள் அணைத்தும் துணைக்கால் தன்மை கொண்டவைதான். இத்தலைப்புகளைக் குறித்து அறிமுகமும் புரிதலும் இல்லாமல் அது தொடர்பான அனைத்து துறைகளும் இயங்கும். ஆனால்…

வாசகனின் உள்ளத்தை விசாலப்படுத்தும் எழுத்துகள்

இலக்கியம் வாசகனைப் புதிய அனுபவங்களை நோக்கி நகர்த்துகிறது. உயிரோட்டமும் அனுபவ எதார்த்தமும் கொண்ட எழுத்துகள், வாசகனின் உள்ளத்தை விசாலப்படுத்துகின்றன. உலகமொழி இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் இருக்கும் பொதுக் குணம் இது. அதேசமயம் ஒரு மொழியின் இலக்கியமானது, அந்த மொழிசார்ந்த இனத்தின் பண்பாடுகளின் அடையாளமாகவும், அரசியல் பதிவாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும் அமைந்துவிடுகிறது. சங்க இலக்கியங்கள் தமிழினத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும்…

சொற்களைச் சேமிப்பதும் செதுக்குவதும் கலை

ஆத்தா சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான். ஆத்தா அம்மாவின் அம்மா. அவர் கதைகள் சொல்லும் விதம் நூதனமானது. கதைகளில் வரும் கொடூர விலங்காக அவ்வப்போது அவரே மாறிவிடுவார். திடீரென முட்டிபோட்டு நடந்து பயங்காட்டுவார். ஆத்தா சொல்லும் கதைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். என் உணர்வு நிலைக்கு ஏற்ப ஆத்தா கதைகளின் முடிவையும்…

போதாமை

ஒரு சில வருடங்களுக்குப் பிறகு என்னுடைய எழுத்துக்களை மறுவாசிப்பு செய்தபோது இனம் புரியாத மன ஓட்டங்கள், அது இயலாமையா, போதாமையா என்று வழி தெரியாமல் தடம் புரண்டு ஓடியது. எழுத்து என்பது சமுதாயத்தை நோக்கிய வீர ஆவேச உபதேசங்கள் என்று நம்பியிருந்த எனக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் நவீன இலக்கியத்தில் காலடி எடுத்து வைத்ததும்…