Category: புத்தகப்பார்வை

மாற்றமற்ற மாற்றங்களைப் பேசும் ‘மாறுதல்கள்’ நாவல்.

இலங்கையில் ஆங்கிலேயரால் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபட சுதேசி மக்கள் ஆர்வம் காட்டாததன் பின்னணியில் ஆள்கட்டிகள் என்று சொல்லப்படுகின்ற பெரியகங்காணிகளினால் கூலிகளாக தென்னிந்தியாவில் இருந்து கொத்து கொத்தாக கொண்டுவரப்பட்ட தமிழர்களை மலையகமெங்கும் குடியமர்த்தி இருநூறு வருடங்களை தொட்டிருக்கிறது. அதன் ஞாபகார்த்தமாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புக்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் தனிமனித…

யாத்வஷேம்: மானுட வதையின் உச்சம்

நான் ரப்பர் தோட்டத்தில் வாழ்ந்தபோது, என் அக்காள் வேலை செய்யும் ரப்பர் ஆலைக்குப் போவது வழக்கமாக இருந்தது. அக்காள் அங்கு ரப்பர் பாலை உறைய வைக்கும் பகுதியில் பணியில் இருப்பாள். ரப்பர் பாலில் போர்மிக் திராவகம் கலந்தால்தான் அது பதமாக உறையும். என் பால்ய வயதில் நான் தெரிந்துகொண்ட முதல் ரசாயனப் பொருள் போர்மிக் அமிலம்தான்.…

தாராவின் அரசியல்

பொதுவாகவே எனக்கு தமிழ்நாட்டு நாவல்களை வாசிப்பதைக் காட்டிலும் மலேசிய நாவல்கள் வாசிப்பது மிகப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நாவல்களில் காட்டப்படுகின்ற வாழ்க்கைக்கு நெருக்கமான அல்லது பழகிவிட்ட மலேசியச் சூழல்கள், மலேசிய எழுத்தாளர்களின் எளிய வாசிப்புக்கு உகந்த எழுத்து நடை, பலத்தரப்படாத வாசிப்பு நிலை, வெகுஜன இரசனையை எதிர்பார்க்கும் வாசிப்பு மனம் என எதை…

கரிப்புத் துளிகள் : கட்டுமானங்களுக்கு அடியில் கொதிக்கும் உப்பு

பலமுறை பினாங்கு பாலத்தைக் கடந்திருக்கிறேன். அதன் கட்டுமானமும் அழகும் பெரிதும் வசீகரிக்கக்கூடியதுதான். ஆனால் இம்முறை ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவிற்குச் செல்கையில், பினாங்கு பாலத்தைக் கடக்கும்போது இனம்புரியாததொரு படபடப்பும் சேர்ந்து கொண்டது. கடலலையில் கிருஷ்ணன், துரைசாமியின் நினைவுகளும் டானு விழுந்த ஐம்பத்தாறாவது தூணும் துரத்திக் கொண்டிருந்தன. ஓரிரு தினங்களுக்கு முன் படித்து முடித்த அ. பாண்டியனின்…

தாரா: ஓர் அறச்சீற்றம்

ம.நவீனுடைய ‘தாரா’ நாவலை வாசித்து முடித்தபின் எனக்கு முதலில் தோன்றியது இந்த உணர்வுதான். ‘தாரா ஓர் அறச்சீற்றம்’ நாவலில் வரும் பழங்குடிகளின் தலைவனின் கூற்றான,“தலைவனிடம் அறம் இல்லாததில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஒரு குலத்தில் உள்ள பெண்களிடம் அறம் பிறழும்போது அதுவே அக்குலத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் என்பதை மறவாதே. உன் குலப்…

கரிப்புத் துளிகள்: மானுட அகம்பாவமும் அகூபாராவும்

மனிதனுக்குத் தனிச்சொத்துகள் மீது ஆர்வம் எழுந்தபோது, அது பேராசையாக வளர்ந்து லாபத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் எதையும் செய்யலாம் எனும் நிலை எழுந்தது. இயற்கை வளங்கள் அப்படித்தான் தனி மனிதர்களின் உடமைகளாகப்பட்டு சுரண்டப்பட்டன. சுயத் தேவை, பேராசை, பொருளாதாரம், அதிகாரம் போன்றவற்றை நிலைநாட்டிக்கொள்ளவதற்காக அழிக்கப்பட்டு வருகின்ற இயற்கை வளங்களோடு எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நந்தைச் சுவடுகளாக தத்தம் தடயங்களை…

யாதனின் யாதனின் நீங்கினோர் காதை

புதிதாக வந்திருக்கும் சினிமாப் பாடல் வரிகளுக்கான தனியிடத்தை உருவாக்குவதற்காக அனுமதி பெறாமலே பள்ளிக்கூடத்தில் படித்த பாடங்களை அழித்துவிடும் தானியங்கி நினைவாற்றல் தான் என்னுடையது என்றாலும், சில ஆங்கில/தமிழ் செய்யுள்களும் பாடங்களும் எப்படியோ அந்த நினைவாற்றலுக்குத் தப்பி கொஞ்சம் மீதமிருக்கவே செய்கின்றன. அப்படி என் நினைவாற்றலில் தப்பிப் பிழைத்த செய்யுள்களுள் ஒன்று ஷேக்ஸ்பியரின் ‘As You Like…

பேரருளாளனின் கருணை எனும் கிஸா

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முன் நானும், எழுத்தாளர் அஜிதனும் மத்திய ஆந்திரா நிலத்தில் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டோம். அப்போது எங்கள் பயணத்தை முடித்து பேருந்துக்காகக் காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் எத்தேச்சையாகக் கடப்பா அமீன் பீர் தர்காவிற்கு சென்றோம். அன்று அஜிதனின் அடைந்த மனநிலை ஒரு புனைவு எழுச்சிக்கானது. அன்று என்னிடம் சூஃபி மெய்…

இருள் நிரப்பி மிரட்டும் புனைவு

ம.நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவலில் ஒரு பகுதி அதிகம் என்னை ஈர்த்தது. அந்நாவலின் நாயகன் தீபன் அவசரத்தில் இன்னும் தயாராகாத கரிபாப்பை கடையிலிருந்து எடுத்து ருசித்துக் கொண்டே செல்கிறான். அதே நாளில் கரி மீ , நாசி ஆயாம், சென்டோல் என்று வயிற்று பசிக்கேற்பத் தின்றுக் கொண்டே மனதில் திட்டம் ஒன்றை சுமந்து நடக்கிறான். யோசித்துப்…

தாயே! வாழ்வு இத்தனை அற்பமானது ஏனோ?

ஜெயமோகன் சாருடன் மலை வாசஸ்தலத்தில் தங்கியிருந்த போது ஒரு மாலையில் கவி நாவலைப் பற்றிச் சொன்னார். வங்க எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாய் எழுதிய முதல் நாவல் கவி. 1941ல் வெளிவந்தது. இருநூற்றைம்பது பக்கம் கொண்ட சிறிய நாவல். ஜெயமோகன் அந்நாவல் பற்றி எழுதிய ‘உமாகாளி’ கட்டுரை பற்றியும் குறிப்பிட்டார். அன்றிரவு உமாகாளி கட்டுரையைப் படித்ததும் உடனே…

‘மிளகு’ நாவல் : கனவுவெளியும் காலடி நிழலும்

[1] தல்ஸ்தோய் பற்றிய கூற்று ஒன்றுண்டு. ‘அவரின் படைப்புலகம் ஏன் அத்தனை யதார்த்தமாக இருக்கிறதென்றால் அது முழுவதும் அவரது கற்பனையால் கட்டமைக்கப்பட்டது.’ சிந்திக்க வைக்கும் வரி இது. ஒரு படைப்பை எப்போது நாம் நிஜ உலகிற்கு இணையாக நம்புகிறோம்? அதில் வரும் மனிதர்களை எந்தக் கணம் நாம் நெருங்கிக் கண்டவர்களாக உணர்கிறோம். உதாரணமாகப் போரும் அமைதியும்…

எண்கோண மனிதன்: மனமெனும் கலிடியோஸ்கோப்பின் சித்திரங்கள்

நவீனத்துவ தமிழ் இலக்கியத்தில் புனைவாக்கச் செயல்பாடு என்பது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. நவீனத்துவ புனைவுகள் நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அதன்வழியே வாசகனுக்குப் புனைவின் நிகர் வாழ்க்கை அனுபவத்தை அளிக்கின்றன. சிறுகதைகள் குறைந்த அளவு சம்பவங்களைக் கொண்டு வாசகனுக்கு அவ்வனுபவத்தைச் சாத்தியப்படுத்த முயலுகையில், நாவல்களோ பல்வேறு சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்து உருவாக்கும் விரிவான…

கபடவேடதாரி: நீல நகரமும் நல்லா இருந்த நாடும்

கேட்பதற்குச் சற்று விசித்திரமாகக் கூடத் தோன்றலாம், ஆனால் இணை தேடும் நவீன செயலிகள் அத்தனையிலும் இந்திய நாட்டு பெண்கள் தங்கள் எதிர்பார்ப்பாகக் பொதுவாகக் குறிப்பிடுவது, தன் இணை ஒரு ‘சங்கி’யாக இருக்கக்கூடாது என்பது. இது அவ்வளவு பொருட்படுத்தத்தக்க ஒரு சமூகக் கவலையா என்ற கேள்வி எழலாம். ஆனால் இதற்குப் பின்னால் பிரதிபலிக்கும், கடந்த பத்தாண்டுகளில் உருவாகி…

கெம்பித்தாய்களின் சப்பாத்துகளுக்கு கீழே

சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளிவந்த பல நூல்களில் பொன். சுந்தரராசுவின் சுண்ணாம்பு அரிசி, இந்திரஜித்தின் ரயில், ரமா சுரேஷின் அம்பரம் ஆகிய மூன்று நாவல்களும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைக் களமாகக்கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற இந்த மூன்று நாவல்களுமே நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் முதல் நாவல்கள். சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆதிக்க…

பீஷ்மரின் மகன் – ஹரிலால் நாவலை முன்வைத்து

1 காந்தி – கடந்த 125 ஆண்டுகளில் உலகை வெவ்வேறு விதங்களில் பாதித்த பெயர்களில் முக்கியமான பெயர். மிக அதிகமான எண்ணிக்கையில் நூல்கள் எழுதப்பட்ட பெயர்களில் முதன்மையான பெயர். ஒருவரது பெயர் ஒரு விழுமியத்தின், சிந்தனைமுறையின், லட்சியத்தின் சொற்பொருளாக மாறும் அதிசயத்தை உலகுக்கு இன்று வரை காட்டிக் கொண்டிருக்கும் பெயர். இந்தியா உட்பட உலகின் ஒவ்வொரு…