
‘எம் நிலத்துக்கான, எம் வளத்துக்கான, எம் ஆநிரைகளுக்குத் தேவையான அரசியலில் இருந்து என் எழுத்துத் தொடங்குகிறது,’ என்று வெற்றிச்செல்வன் இராசேந்திரன் குறிப்பிட்டாலும், அவர் எழுத்துகள் அரசியல் சீற்றமற்றவை. கழிவிரக்கம் கொள்ளாதவை. காடு மேடுகளையும் வெய்யில் மழையையும் இலகுவாகக் கடந்து செல்லும் இடையர்களின் வாழ்க்கைபோலவே அவரது எழுத்தும் இலகுவானது. காட்டாற்றின் போக்கிலே ஓடிக்கொண்டிருந்தாலும் கரையொதுங்கும் தருணத்திற்காக அலட்டிக்கொள்ளாது…














