Author: லதா

அலையாட்டங்களின் விசித்திரங்கள்

செந்தில்குமார் நடராஜன் இலக்கிய ஆர்வலர். தேர்ந்த வாசகர். கும்பகோணத்தைச் சேர்ந்த செந்தில்குமார் பல ஆண்டுகளாக சிங்கப்பூர்வாசி. சிங்கப்பூரின் தங்கமுனை சிறுகதைப் போட்டியில் 2019ஆம் ஆண்டு முதல் பரிசும், 2017ஆம் ஆண்டு மூன்றாம் பரிசும் வென்றவர். ‘நீர்முள்’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஸீரோ டிகிரி, எழுத்து பதிப்பக வெளியீடு. பத்துச் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது.…

லதா கவிதைகள்

புத்தகங்கள் எதையோ மறைக்கின்றன நூலக நகரம் என்றொரு பெயரும் இந்நாட்டுக்கு உண்டு வட்டாரத்துக்கு ஒரு வசதியான நூலகம் வண்ணப் படங்களும் காட்சிகளும் விளையாட்டுமாக புத்தகங்களோடு பிள்ளைகள் “இங்கு யாரும் இலக்கியம் வாசிப்பதில்லை” என்றார்  எழுத்தாளர் கினோக்குனியா புத்தகக்கடை மூன்றாவது கிளையைத் திறந்தது. “இந்நாட்டு மக்கள்  புதிதாக வரும் எதையும் வாங்குவார்கள்” என்றார் அவர். அவருக்கும் நூல்களை…

உணர்வு இடைவெளிகளில் உறைந்துள்ள பாதை

மலேசிய சீன, மலாய், தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆழமான அறிதலையும் இந்த இலக்கியங்களுக்கிடையே அணுக்கமான உறவையும் வளர்க்கும் விதமாக தற்போது முழு வேகத்துடன் வல்லினம் செயல்படுகிறது. வல்லினம் தொடங்கப்பட்ட 2009 முதலே, மலேசியாவி்ன் மலாய், சீனம், ஆங்கில இலக்கியங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்துள்ளது பன்மொழி இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள், இலக்கிய மொழிபெயர்ப்புகள், மற்ற மொழி எழுத்தாளர்களின்…

வல்லினம் இலக்கிய முகாம் – நாவல் அமர்வு

இலக்கிய வாசிப்பைக் கூர்தீட்டிக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது 2024 டிசம்பர் மாதம் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த வல்லினம் இருநாள் இலக்கிய முகாம். முகாமை வழிநடத்திய திரு ஜா. ராஜகோபாலன் சங்கப் பாடல் முதல் நாவல் வரையில் தமிழ் இலக்கியத்தை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையாக அறிமுகப்படுத்தி, பொருள் புரிந்து வாசிக்கும் வித்தையை விளக்கினார். அதன்வழி,  மொழி, பிரதி, தத்துவார்த்தப்…

சிண்டாய்: நிலத்தை மென்று வளர்ந்த தளிர்

மலேசியாவில் வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளில் முதன்மையானவர் என்று அரவின் குமாரைச் சொல்லலாம். இவ்வாண்டின் வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது அவருக்கு வழங்கப்படுவது அதற்கான அங்கீகாரம்.  இவ்விருதை ஒட்டி வெளிவரும் ‘சிண்டாய்’ எனும் சிறுகதை தொகுப்பின் வழியாக அவரை மீள் வாசிப்பு செய்தபோது அரவின் குமாரின் புனைவுலகை மேலும் நெருங்கிச் செல்ல முடிந்தது.    தோட்டப்புற…

சிகரி மார்க்கம்- நம்பிக்கைகளுக்குள் உறையும் தொன்மங்கள்

தலைசிறந்த உலக எழுத்தாளர்கள் எழுதி எழுதி கூர்மையான இலக்கிய வடிமாகச் சிறுகதையை வளர்த்தெடுத்துள்ளனர். கவிதையின் சொல்லாப் பொருளும் கட்டுரையின் தகவல் செறிவும் நாவலின் காட்சிப்படுத்தலும் கூடிய மிக நுட்பமான இலக்கிய வெளிப்பாடாக இன்று சிறுகதை உள்ளது. ஒரு நல்ல சிறுகதை உருவாக இவையெல்லாம் கட்டாயம் இருக்கவேண்டும் என யாரும் கட்டளையிடமுடியாது. காற்றில் மிதக்கும் இலை, வெளியின்…

சிவானந்தமும் சிங்கப்பூர் இலக்கியமும்

சிங்கப்பூரில் தமிழில் தொடர்ந்து அசராது எழுதுவதற்கான உயிராற்றலைக் கண்டடைந்துள்ள மிகச் சிலரில் சிவானந்தம் நீலகண்டமும் ஒருவர். எழுதப்படும் படைப்புகளை ஒட்டி விரிவான உரையாடல்கள் வாசக சூழலில் எழாவிட்டாலும் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக வாரம் தவறாமல் எழுதி வருபவர். சிங்கப்பூருக்கு அப்பாலும் பரந்த தமிழ் எழுத்துலகில் அறிமுகங்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர். பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்கள் சிராங்கூன் டைம்ஸ்…

பெருந்தேவியின் குறுங்கதைகள்: தமிழ்ப் புனைவின் புதிய நகர்வு

குறுங்கதை எனும் வடிவம் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பரவலாக எழுதப்பட்டபோது அது குறித்து தங்கள் புரிதலுக்குள் கட்டமைக்க பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. அவை குமுதம், விகடன் போன்ற இதழ்களின் ஒரு பக்கக் கதைகளின் வடிவம் என்றும், ஒரு வரிக் கதைகள், படக்கதைகள், துணுக்குகள் போன்றவற்றின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட பாவனை என்றும் சமூக ஊடகங்களுக்கென்றே எளிமையாக்கப்பட்ட கலை வடிவம்…

சிங்கப்பூரின் மூன்று நூல்கள்

ஏறக்குறைய 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தடத்தை இரு வழிகளில் பார்க்கலாம். ஒன்று இலக்கியங்களைப் படைத்தவர்கள். மற்றது இலக்கிய ஆக்கங்கள். சிங்கப்பூரின் முதல் தமிழ் நூலாகக் கருதப்படும் 1872ல் வெளிவந்த முகம்மது அப்துல்காதிறுப்புப் புலவர் எழுதிய முனாஜாத்து திரட்டு, 1887களில் யாழ்ப்பாணத்து சதாசிவ பண்டிதர் எழுதி வெளியிட்ட வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை…

ந. பாலபாஸ்கரன்: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான ஆய்வாளர்

ந. பாலபாஸ்கரன் உடல்நலக் குறைவினால் பிப்ரவரி 19 தமது 82 வயதில் காலமானார் என்ற தகவலை ஷாநவாஸ் தெரிவித்தபோது பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை. கடும் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மரண நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். மரணத்துடன் போராடுவதை மெல்ல மெல்ல நிறுத்திக்கொண்டே வந்தார். ஒருவகையில் அவர் தன் மௌனத்தால் அதை தன் அன்புக்குரியவர்களுக்கு முன்னமே அறிவிக்கவும் செய்தார். வானொலிக்…

புதுமைதாசன் : சிங்கப்பூர் கலை எழுச்சியின் அடையாளம்

மெலிந்த சிறிய உருவம். தன்னை வெளிப்படுத்தாத மிகுந்த உள் அடக்கம். பெரும் நிகழ்விலோ  சிறு கூடலிலோ கைகளைப் பின்னால் கட்டியபடி அமைதியாக நிற்கும் பி.கிருஷ்ணனைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் சராசரி முதியவர் என்று கடந்துவிடக்கூடும். ஆனால், பழுப்படைந்த விழிகளில் பொதிந்துள்ள அறிவின் ஒளியை எதிர்கொள்ளும்போதும் கணீரென கனத்து ஒலிக்கும் குரலைச் செவிமடுக்கும்போதும் அவர்பால் மரியாதை கலந்த…

புதுமைதாசன்: சிங்கப்பூர் கலை எழுச்சியின் அடையாளம்

மெலிந்த சிறிய உருவம். தன்னை வெளிப்படுத்தாத மிகுந்த உள் அடக்கம். பெரும் நிகழ்விலோ சிறு கூடலிலோ கைகளைப் பின்னால் கட்டியபடி அமைதியாக நிற்கும் பி.கிருஷ்ணனைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் சராசரி முதியவர் என்று கடந்துவிடக்கூடும். ஆனால், பழுப்படைந்த விழிகளில் பொதிந்துள்ள அறிவின் ஒளியை எதிர்கொள்ளும்போதும் கணீரென கனத்து ஒலிக்கும் குரலைச் செவிமடுக்கும்போதும் அவர்பால் மரியாதை கலந்த…

ஓயாத பணிகளால் உருவாகும் பண்பாட்டு பாதை

சிங்கப்பூரில் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரசாங்கம் அளிக்கும் ஆதரவை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி, பெருங்காரியங்களைச் செய்துவருபவர் பேராசிரியர் அருண் மகிழ்நன். வளங்கள் எங்கும் இருக்கலாம். அதனை நிறைவாக ஒழுங்கமைக்க அறிவாற்றல் அவசியமாக உள்ளது. அவ்வகையில், தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாடுகளில் தனியாத ஆர்வம் கொண்ட இவரின் திட்டங்கள், சிங்கப்பூர் தமிழ்ச்சூழலில் நீண்ட காலம்…

கெம்பித்தாய்களின் சப்பாத்துகளுக்கு கீழே

சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளிவந்த பல நூல்களில் பொன். சுந்தரராசுவின் சுண்ணாம்பு அரிசி, இந்திரஜித்தின் ரயில், ரமா சுரேஷின் அம்பரம் ஆகிய மூன்று நாவல்களும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைக் களமாகக்கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற இந்த மூன்று நாவல்களுமே நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் முதல் நாவல்கள். சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆதிக்க…

பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

இந்தத் தொகுப்பில் பூனையைப் பற்றிய ஒரு கதையும் இல்லையே என்று  ஷீயிங் சொன்னபோது, எதிரே அமர்ந்திருந்த அவள் முகத்தில் எங்காவது சிரிப்பு ஒளிந்திருக்கிறதாக என்று  கூர்ந்து பார்த்தாள் அனா. வழக்கத்திற்கு மாறாக அதிகாரியின் தோரணைதான் தெரிந்தது. “குழந்தைப் பிறப்பு குறைவாக இருக்கும் நாட்டில் பூனைகள் அதிகமாக இருக்கும் என்று  ஓர் ஆய்வில் படித்த நினைவுள்ளது. நாய்களைவிட…