இன்னிக்குதான் கொக்குக்கும் நரிக்கும் கல்யாணம் போல. ஒரு மாதிரியா வானம் இருட்டிக்கிட்டு, மழை வந்தும் வராமலும் வெயிலடிச்சா அம்மா அப்படித்தான் சொல்லுவா.
அது உண்மையா இல்லையானெல்லாம் தெரியல… ஆனா இந்த மாதிரி நடக்குறதுக்கு சாத்தியப்படாத இல்ல நம்ம கண்ணுக்குதெரியப்படாம, நடந்துருக்குமோங்குற சந்தேகத்த தாங்கி நிக்கிற சங்கதியெல்லாம் கேட்டா என்னவோ சந்தோசமாதான் இருக்கு. அத சந்தோஷமுன்னு கூட சொல்லிட முடியல. ஏதோ ஒரு ஆராய்ச்சியோட தொடக்கமோன்னு மனசு பரபரங்குது .
கொக்கு…நரி… கல்யாணம்.