இமயத்தியாகம்

அ.ரெங்கசாமி நாவல்கள்

‘சிவகங்கை தொடங்கி சிசங்காங்’ வரை என்ற தனது சுயவரலாற்று நூலில், நாவல் எழுதுவதற்கான உந்துதலை மலேசியத் தமிழர்களின் இக்கட்டான வாழ்வை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து பெற்றதாகச் சொல்கிறார் எழுத்தாளர் அ.ரெங்கசாமி. இயல்பிலேயே இருந்த கலையார்வம் அவரை புனைவை நோக்கி தள்ளியது. தனது இளமைக் காலத்தில் தொடர்கதைகள், சிறுகதைகள் எழுதியதோடு வில்லுப்பாட்டு, மேடை நாடகம் என ஆர்வமாக இயங்கினார். கலை என்பது மனிதனுக்குப் படிப்பினையைக் கொடுக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ரெங்கசாமி. ‘பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகனும்’ என இமயத் தியாகம் நாவல் முன்னுரையில் ரெங்கசாமி எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.

Continue reading