அனைவருக்கும் வணக்கம்,
2025ஆம் ஆண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில், சமகால கவிதை குறித்த இந்த அமர்வில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இதன் ஏற்பாட்டாளர் ஆயிலிஷா, கடந்த 25 ஆண்டு காலமாக மலேசியத் தமிழ்க் கவிதை சூழலில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து பேசும்படி கேட்டுக்கொண்டார். மலேசிய நவீன கவிதை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் 2006இல் நடைபெற்றது. இந்த மாற்றத்தை அறிய, அதற்கு முன்னர் மலேசியக் கவிதை உலகில் என்ன நிகழ்ந்தது என்பதை ஒரு குறுக்குவெட்டாகவேணும் அறியத்தருவது அவசியம் எனக் கருதுகிறேன். அது பலருக்கும் சில தெளிவுகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
Continue reading
