கோ.புண்ணியவான்

கையறு: இல்லாத கடலின் இடையறாத இருள்

இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட ஒரு புகைவண்டித் தடம், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையில் அழுத்தமாகப் பதிந்துபோன ஒரு கறுப்பு வரலாறு. 415 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி முழுக்கவும், மனித அழிவுகளையும் அவர்களின் அழுகுரல்களையும் தாங்கியவை. இந்தப் பேரழிவின் குரூரங்கள் குறித்து ஜப்பான் மொழியில் புனைவுகள் எதுவும் உருவாகவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் வசிக்கும் நண்பர், எழுத்தாளர் செந்தில்குமாரிடம் இதுகுறித்துப் பேசியபோது சில ஆவணங்கள் ஜப்பானிய தேசிய நூலகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பதாகவும் நூலக அனுமதி பெற்றே அவற்றைப் பெற முடியும் என்றும் சொன்னார். ஆனால் ஒருபோதும் ஒரு ஜப்பானியன் இந்த வரலாற்றை தனது இளம் தலைமுறைக்குக் கடத்துவதில்லை; வரலாற்றில் தங்களுக்கு இருக்கும் கோர முகத்தை அவர்கள் வெளிப்படுத்த விரும்புவதில்லை என அவர் வழியே அறிந்தேன்.

Continue reading

செலாஞ்சார் அம்பாட் : புனைவின் துர்க்கனவு

நாவல் எனும் கலைவடிவம் குறித்து விரிவாகவே தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்பட்டுவிட்டது. நாவல் என்பது கயிறு திரிப்பதுபோல முறுக்கிச் செல்வதல்ல; அது கூடை முடைவது போன்ற பின்னல் என்ற ஜெயமோகனின் உவமை நாவலின் கலைவடிவம் குறித்து எளிமையாகப் புரிந்துகொள்ளும் சித்திரம். இது நாவலின் வடிவம் குறித்த சட்டகமல்ல. நாவலின் சாத்தியம் குறித்தது. எளிமைப்படுத்தியும் குறுக்கியும் வாழ்வின் சிக்கலை நாவலில் காட்டுவதென்பது நாவல் கலை கொடுத்துள்ள சலுகைகளை ஓர் எழுத்தாளன் எவ்வகையிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே. சிறுகதைகளுக்கே உரிய ஒருமையும்  நாவலில் இருக்க வேண்டிய உள்இழைகளும் கொண்ட குறுநாவல்கள் மலேசியாவில் நாவல்களாக பல காலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ‘செலாஞ்சார் அம்பாட்’ அதில் ஒன்று.

Continue reading