சயாம் மரண ரயில்

ஆர்.சண்முகம், ஆ.ரெங்கசாமி மற்றும் மரண ரயில்

ஆர்.சண்முகம்

அண்மையில் ஒரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் என்னைச் சந்தித்தார். வரலாற்றில் ஆர்வம் உள்ளவர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். வரலாற்றை ஒட்டியே தனது ஆய்வு இருக்கப்போவதாகக் கூறிய அவர், மலேசிய வரலாற்று நாவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார். என்னுடைய ‘பேய்ச்சி’ நாவல் வேண்டுமெனக் கேட்டார். நான் ‘பேய்ச்சி’ வரலாற்று நாவல் இல்லை எனச்சொன்னேன். தான் அந்நாவல் குறித்த விமர்சனங்களை வாசித்ததாகவும் அதில் லுனாஸில் நடந்த சாராய மரணங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறினார். இருக்கலாம், ஆனால் அந்த நாவல் அதன் பொருட்டு எழுதப்பட்டதல்ல. அதற்குள் வரலாற்றின் சில தருணங்கள் உள்ளன; ஆனால் அது வரலாற்று நாவலல்ல என விளக்கினேன். இருந்தாலும் வாங்கிக்கொண்டு சென்றார். என்ன ஆகுமோ என பயமாகத்தான் இருக்கிறது.

Continue reading