16.3.2014ல் ‘புத்தகச் சிறகு’ நிறுவனம், இலக்கிய நிகழ்வொன்றை கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நிகழ்த்தியது. இணையம் எவ்வகையான விரிந்த வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை அறிய ‘புத்தகச் சிறகு’ இந்நிகழ்வுக்கான அறிவிப்புகள் அனைத்தையும் இணையம் மூலமே செய்தனர். வருகையாளர்களின் எண்ணிக்கை 100 பேரை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Author: வல்லினம்
வல்லினத்தின் குறும்படப் பட்டறை
குறும்பட இயக்கமும் அதன் வெளிபாடும் சமகால சமுதாயத்திற்குத் தேவையெனக் கருதி வல்லினம் ‘குறும்பட பட்டறை’யை இவ்வருடம் நடத்த திட்டமிட்டுள்ளது. மலேசிய இயக்குனர்களோடு தமிழக இயக்குனர்களின் பங்களிப்பும் இந்தப் பட்டறையில் இணையும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசிய இயக்குனர்கள் சஞ்சை குமார் பெருமாள், பிரகாஷ் ராஜாராம், செந்தில் குமரன் முனியாண்டி போன்றோரின் வழிக்காட்டலுடன் நடைபெறும் இப்பட்டறையின் இறுதியில்…
வல்லினத்தின் புதிய முயற்சிகள்…புதிய உற்சாகம்…

கடந்த டிசம்பர் முதல் ‘வல்லினம்’ மலேசிய நாளிதழ்களில் ஓர் அபத்தத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்பட்டதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘வல்லினம்’ ஆபாசத்தைத் திணிக்கிறது என்றும், ‘வல்லினம்’ மதத்தை அவமதிக்கிறது என்றும் , ‘வல்லினம்’ மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறதென்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள். வேடிக்கை என்னவென்றால், தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை மற்றும் ம.நவீனின் ‘கடவுளின் மலம்’…
முன்னுரை : கே.பாலமுருகன் கவிதை நூலிலிருந்து…
என் கவிதைக்குள்ளிருந்து எனக்கும் அரசியலுக்குமான தொடர்பு என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் அரசியல் உணர்வைத் தூண்டிவிடவே இந்தக் கவிதைகளைத் தொகுத்துள்ளேன். என் நோக்கம் மக்களின் சிந்தனையை அதிகார மையத்தை நோக்கி நகர்த்த வேண்டும் ; ஓர் அரசியல் உரையாடலைத் துவக்கி வைக்க வேண்டும் என்பது மட்டுமே. மற்றபடி கவிதைகள் என்பது அதற்கொரு சாக்குத்தான். குறிப்பிட்ட ஒரு…
2014-ன் முதல் வல்லினம் சந்திப்பு : ஒரு பதிவு

2014-ன் முதல் வல்லினம் சந்திப்பு ஜனவரியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வல்லினம் குடும்பத்தைச் சேர்ந்த 30 நண்பர்கள் கலந்துகொண்டனர். முதல் அங்கமாக மலாய் இலக்கியம் குறித்துத் தினேசுவரி விவரித்தார். அ.பாண்டியனும் மலாய் இலக்கியம் குறித்த தனது பார்வையைப் பகிர்ந்தார். தமிழ் இலக்கியத்தில் உள்ள சுதந்திரங்களையும் மலாய் படைப்பாளிக்கு உள்ள கட்டுப்பாடுகளும் இவ்வமர்வில் விரிவாகப்பேசப்பட்டன. தொடர்ந்து கங்காதுரை சீன…
அய்யா வே. ஆனைமுத்துவுடன் கலந்துரையாடல்

அண்மையில் ஆனைமுத்து அவர்கள் மலேசியா வந்திருந்தார். மலேசிய தன்மான இயக்கமும் வல்லினமும் இணைந்து 19/1/2014 அன்று அவருடனான ஓர் உரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. கோலாலும்பூர், தான் ஶ்ரீ சோமாவில் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு தரப்பினரும் வந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியைக் கொடுத்தது. மிகத் தெளிவாகப் பெரியார் குறித்தும் அவர் முன்னெடுப்புகள் குறித்தும்…
எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கருத்துகள்
இலக்கியம் புனிதங்களை உடைக்கலாமா? இருப்பதை மாற்றுவது (change the status quo) என்பதும் இலக்கியத்தின் நோக்கங்களில் ஒன்றுதான் என்பதால் விமர்சனமே தவறாகாது. ஆனால் இலக்கியம் என்பது கருத்து மட்டுமல்ல, மொழியும்தான். பண்பட்ட மொழியைப் புறக்கணிக்கும் எதுவும் இலக்கியமாகிவிடாது. இலக்கியம் என்பது வக்கரங்களுக்கான வடிகால் அல்ல. அது மாற்றத்திற்கான போர் வாள். மாலன் ———————– மதம், புனிதம்,…
சர்வதிகாரி ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த அதே காலப் பகுதியிலே (1940) சார்ளி சாப்ளினும் வாழ்ந்தார். ஹிட்லரைக் கண்டு முழு உலகமும் நடுங்கிய போதும் சார்ளி சாப்ளினோ (The Great Dictator) ‘சிறந்த சர்வாதிகாரி’ என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் ஹிட்லர் மனநோயாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுபவனே கலைஞன். இவ்விதழ் அந்தக் கலைஞனுக்குச் சமர்பணம்.
தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது

தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும். இம்முறை விருதுத்தொகையாக ரூபாய் ஒருலட்சமும் நினைவுச்சிற்பமும் வழங்கப்படும். தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி விருதை வழங்கி கௌரவிப்பார். மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை…
மலாயாப் பல்கலைக்கழக நூலக ஏற்பாட்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல் சேகரிப்புத் திட்டம் 2013 (22 – 24 நவம்பர் 2013)

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகம் தமிழ்மொழி சார்ந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னகத்தே கொண்டு இயங்கி வருகின்றது. குறிப்பாக இந்நூலகத்தில் மொழி, மொழியியல், கற்றல் கற்பித்தல், இலக்கணம், இலக்கியம், வரலாறு, அறிவியல், மருத்துவம், சோதிடம், சமயம், பண்பாடு, கலைகள், பல்துறைச் சார்ந்த மாநாட்டு ஆய்வடங்கல்கள், தொகுப்பு நூல்கள் என எண்ணிலடங்கா தலைப்புகளில் நூல்கள் உள்ளன. இவற்றோடு…
வல்லினம் ஜனவரி 2014 முதல் அச்சிலும் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மலேசியா முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில கடைகளுக்கு வல்லினம் விற்பனைக்குச் செல்கிறது. அதே சமயம் புலம்பெயர்ந்த நாடுகளில் வல்லினம் அச்சு இதழ் தேவைப்படுபவர்கள் சந்தா மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விரிவான தகவல்கள் அடுத்த இதழில்…
மை ஸ்கீல் அறவாரியம் (MySkills Foundation) மற்றும் வல்லினம் ஏற்பாட்டில் மலேசியாவில் முதல் நவீன வீதி நாடகம்!

எள்ளலும், பகடியும், தத்துவக் கூர்மையும், வர்க்கப்பிடிமானமும் கொண்ட பிரளயன், பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணை இயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தாலும் அவரது ஜீவன் நாடகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது. இவர் தமிழின் தொன்ம ஞானமும் நிகழ்வாழ்வின் மீதான கூரிய பார்வையும் ஆற்றல் மிக்க படைப்புச் செயல்பாடும் கொண்டவர். தமிழகத்தில் பல…
நேர்காணலும் நேர்மையின்மையும்

அண்மைய காலமாக வல்லினம் மற்றும் இளம் எழுத்தாளர்கள் பலர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றிவருவது மலேசிய இலக்கிய உலகம் அறிந்த ஒன்றாக உள்ளது. இதன் அடிப்படையில் அதன் தலைவர் பெ.ராஜேந்திரன் ‘நம்நாடு’ தினசரிக்கு உண்மைகளை மறைக்கும் வகையில் ஒரு நேர்காணல் வழங்கினார். அதற்கான எதிர்வினையாக வல்லினம் வழங்கிய மறுப்பு கட்டுரை. இயக்குநர் சேரனும் ஒரு லட்சம் ரூபாயும் (31.3.2012)…
கலை இலக்கிய விழாவை தொடர்ந்து செப்டம்பர் முழுக்க வல்லினத்தின் தொடர் இலக்கிய நிகழ்வுகள்

வல்லினம் குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ‘கலை இலக்கிய விழா’வின் உற்சாகம் இவ்வருடமும் தொடங்கிவிட்டது. வழக்கமான நூல் வெளியீடுகளோடு செப்டம்பர் மாதம் முழுக்கவே இலக்கிய கலந்துரையாடல்களாக நிகழ்த்த இவ்வருடம் வல்லினம் திட்டமிட்டுள்ளது. வல்லினம் பட்டறை ‘செம்பருத்தி’ இதழ் ஆதரவுடன் ‘வல்லினம்’ தொடர்ச்சியாக நடத்திவரும் பட்டறையுடன் இவ்வருட கலை இலக்கிய விழா தொடங்குகிறது. பேராசிரியர் அ. மார்க்ஸ்…
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கிய மோசடி!

கடந்த 15.08.2013 ஆம் நாள் மக்கள் ஓசையில் வெளிவந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அறியாமைகள், இயலாமைகள் குறித்த அதன் செயலாளர் ஆ. குணநாதனின் அறிக்கையைப் படித்தோம். இத்தனைநாள் எழுத்தாளர்களின் காப்பிரைட் சட்டத்திட்டங்கள் குறித்து அறியாமல் இருந்தது சங்கத்தின் மிகப்பெரிய குற்றமாகும். 5 ஆண்டுகளாக வருடாந்திர சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பு போடும் செயல்பாட்டில் தன்னை ஈடுப்படுத்தி வந்த…
