Category: அறிவிப்பு

வல்லினம் கலை இலக்கிய விழா 7

வல்லினம் ஒவ்வொரு வருடமும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் நடைப்பெறுகிறது. திகதி: 1.11.2015 (ஞாயிறு) நேரம்:  1.00pm இடம்: Asian Art Museum, Universiti of Malaya, Kuala Lumpur இந்நிகழ்வில் நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றின் விபரம் பின்வருமாறு: மண்டை ஓடி (சிறுகதை தொகுப்பு) – ம.நவீன் அவர்களின் பேனாவிலிருந்து…

நோவாவின் புதிய தொடர்…

‘உடைந்த கண்ணாடியை பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை வாங்க கூடாது’ கர்ப்ப காலத்தில் கூந்தல் வெட்டக்கூடாது’ இப்படி ‘கூடாது, கூடாது. கூடாது’ என நிறைய கூடாதுகளை நாம் யாவரும் கேட்டிருக்கலாம். ஏன் கூடாது என்று…

முக்கிய அறிவிப்புகள்

வல்லினம் வாசகர்களே… பறை 2015க்கான பறை இதழ் இப்போது குறிப்பிட்ட சில கடைகளில் கிடைக்கும். இம்முறை பறை ஈழ இலக்கியச் சிறப்பிதழாக மலந்துள்ளது. இதழ் வேண்டுபவர்கள் 0163194522 என்ற எண்ணில் ம.நவீனை தொடர்ப்பு கொள்ளலாம். யாழ் யாழ் இம்முறை 32 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 16 பக்கங்கள் ஆரம்பப்பள்ளி மற்றும் 16 பக்கங்கள் இடைநிலைப்பள்ளி என பகுக்கப்பட்டு…

வல்லினம் கலை, இலக்கிய விழா – 6

2.11.2014ல் வல்லினம் குழு கலை இலக்கிய விழாவினை ஆறாவது ஆண்டாக நடத்த உள்ளது. இந்நிகழ்வில் முதன் முறையாக ‘வல்லினம் விருது’ வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச்சொல்லும் நூலான ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ எனும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு…

கலை இலக்கிய விழா 9

வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…

லீனா மணிமேகலை மலேசிய வருகை

2.11.2014ல் நடைபெற உள்ள கலை இலக்கிய விழாவில் கவிஞர் / இயக்குனர் லீனா மணிமேகலை கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் கலை ஊடகச் செயற்பாட்டாளராகவும் இயக்குனராகவும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. மஹாராஜபுரம் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் தமிழாசிரியர்  இரகுபதி அவர்களுக்குப் பிறந்தவர்தான் லீனா. அவர் மிகச் சிறந்த  ஆவணப்படங்களையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழின் மிக முக்கியமான…

கலை இலக்கிய விழா 6 (2.11.2014)

வருடம்தோறும் வல்லினம் இலக்கியக்குழு முன்னெடுத்து நடத்தும் ‘கலை, இலக்கிய விழா’ ஆறாம் ஆண்டாக இவ்வருடம் 2.11.2014ல் நடைபெறுகிறது. பல புதிய அங்கங்களுடன் இவ்வருடம் கலை இலக்கிய விழாவின் வேலைகள் துவங்கியுள்ளது. வல்லினம் விருது வல்லினம் முதல் ஆண்டாக இவ்வருடம் ‘வல்லினம் விருதை’ ஏற்பாடு செய்துள்ளது. இம்முறை வல்லினம் விருது எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதளிப்பு…

வல்லினத்தின் குறும்படப் பட்டறை

குறும்பட இயக்கமும் அதன் வெளிபாடும் சமகால சமுதாயத்திற்குத் தேவையெனக் கருதி வல்லினம் ‘குறும்பட பட்டறை’யை இவ்வருடம் நடத்த திட்டமிட்டுள்ளது. மலேசிய இயக்குனர்களோடு தமிழக இயக்குனர்களின் பங்களிப்பும் இந்தப் பட்டறையில் இணையும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசிய இயக்குனர்கள் சஞ்சை குமார் பெருமாள், பிரகாஷ் ராஜாராம், செந்தில் குமரன் முனியாண்டி போன்றோரின் வழிக்காட்டலுடன் நடைபெறும் இப்பட்டறையின் இறுதியில்…

வல்லினத்தின் புதிய முயற்சிகள்…புதிய உற்சாகம்…

கடந்த டிசம்பர் முதல் ‘வல்லினம்’ மலேசிய நாளிதழ்களில் ஓர் அபத்தத்தின் குறியீடாக வெளிப்படுத்தப்பட்டதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘வல்லினம்’ ஆபாசத்தைத் திணிக்கிறது என்றும், ‘வல்லினம்’ மதத்தை அவமதிக்கிறது என்றும் , ‘வல்லினம்’ மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறதென்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள். வேடிக்கை என்னவென்றால், தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை மற்றும் ம.நவீனின் ‘கடவுளின் மலம்’…

சர்வதிகாரி ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த அதே காலப் பகுதியிலே (1940) சார்ளி சாப்ளினும் வாழ்ந்தார். ஹிட்லரைக் கண்டு முழு உலகமும் நடுங்கிய போதும் சார்ளி சாப்ளினோ (The Great Dictator) ‘சிறந்த சர்வாதிகாரி’ என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் ஹிட்லர் மனநோயாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுபவனே கலைஞன். இவ்விதழ் அந்தக் கலைஞனுக்குச் சமர்பணம்.

தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது

தெளிவத்தை ஜோசப்புக்கு இவ்வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும். இம்முறை விருதுத்தொகையாக ரூபாய் ஒருலட்சமும் நினைவுச்சிற்பமும் வழங்கப்படும். தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி விருதை வழங்கி கௌரவிப்பார். மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை…

மலாயாப் பல்கலைக்கழக நூலக ஏற்பாட்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல் சேகரிப்புத் திட்டம் 2013 (22 – 24 நவம்பர் 2013)

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகம் தமிழ்மொழி சார்ந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னகத்தே கொண்டு இயங்கி வருகின்றது. குறிப்பாக இந்நூலகத்தில் மொழி, மொழியியல், கற்றல் கற்பித்தல், இலக்கணம், இலக்கியம், வரலாறு, அறிவியல், மருத்துவம், சோதிடம், சமயம், பண்பாடு, கலைகள், பல்துறைச் சார்ந்த மாநாட்டு ஆய்வடங்கல்கள், தொகுப்பு நூல்கள் என எண்ணிலடங்கா தலைப்புகளில் நூல்கள் உள்ளன. இவற்றோடு…

வல்லினம் ஜனவரி 2014 முதல் அச்சிலும் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மலேசியா முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில கடைகளுக்கு வல்லினம் விற்பனைக்குச் செல்கிறது. அதே சமயம் புலம்பெயர்ந்த நாடுகளில் வல்லினம் அச்சு இதழ் தேவைப்படுபவர்கள் சந்தா மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விரிவான தகவல்கள் அடுத்த இதழில்…

மை ஸ்கீல் அறவாரியம் (MySkills Foundation) மற்றும் வல்லினம் ஏற்பாட்டில் மலேசியாவில் முதல் நவீன வீதி நாடகம்!

எள்ளலும், பகடியும், தத்துவக் கூர்மையும், வர்க்கப்பிடிமானமும் கொண்ட பிரளயன், பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணை இயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தாலும் அவரது ஜீவன் நாடகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது. இவர் தமிழின் தொன்ம ஞானமும் நிகழ்வாழ்வின் மீதான கூரிய பார்வையும் ஆற்றல் மிக்க படைப்புச் செயல்பாடும் கொண்டவர். தமிழகத்தில் பல…