
குறும்படங்களுக்கான போட்டி அறிவிப்பொன்றில்தான் கே.ராஜகோபால் எனும் இயக்குனரை முதன்முறையாக அறிந்தேன். நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரைப்பற்றி அறிந்துகொள்ள மேலும் தேடியபோது நிறைய குறும்படங்களையும் ஒரு திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார் என்றும் அறிந்தேன். அத்திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த நொடியில் அவர் எத்தனை முக்கிய படைப்பாளி என்பதை உணர முடிந்தது. அப்படம் “மஞ்சள் பறவை”…