நேற்றுதான் ‘விஸ்வரூபம்’ பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் மண்டைக் குடைச்சல். ஆப்கான் தீவிரவாதம் குறித்து ஹாலிவுட்டில் நிறையப் படங்களை எடுத்துவிட்டார்கள். அவை ஒரு சார்பானவை. உலக போலிஸாகத் தன்னை நம்பும் அமெரிக்கா தன்னைத்தானே பரிசுத்த பூமியாக காட்டிக்கொண்டு , உலகத் தீவிரவாதிகளாக இஸ்லாமியர்களைக் காட்டுவதும் அவர்களை ஒடுக்க போரிடுவதுமாக குவிந்துள்ள காட்சிகள் அநேகம். அமெரிக்கா ஒரு சார்பாக காட்சிகளை அமைப்பதில் ஒன்றும் ஆச்சரியமல்ல.
சினிமா
Life of Pi : இறுதி கையசைப்பு
சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச்செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச்செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கையசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்ப்பார்க்கிறேன்
அவ்வளவு தானே
— ஆத்மாநாம்
Continue reading
நான் கடவுள்
நந்தலாலா : மேலும் சில பயணங்கள்
‘நந்தலாலா’ திரைப்படம் குறித்து பல நண்பர்களிடமிருந்தும் நல்லவிதமான கருத்துகள் வரவே ஒரு முறையாவது பார்த்துவிட முடிவெடுத்தேன். இயக்குநர் மிஷ்கின்தான் அப்படத்தை இயக்கி நடித்ருந்தார். அப்படம் ஜப்பான் இயக்குநர் தகேஷி கிடானோ என்பவரால் 1999ல் இயக்கப்பட்ட ‘கிகுஜிரோ’ எனும் படத்தின் தலுவல் என இணையப்பக்கங்களில் செய்திகள் வந்திருந்தன. அதைப் பற்றி எனக்கென்ன கவலை. நான் எந்த ‘ஜிரோ’வையும் அதுவரை பார்க்காத நிலையில் நந்தலாலாவைப் பார்ப்பதில் பெரிய தடைகள் இருக்கவில்லை.
அங்காடித் தெரு : மீந்திருக்கும் வாழ்வு
சில திரைப்படங்களை உடனே சென்று பார்த்துவிட சில விடயங்கள் காரணங்களாக இருந்துவிடுகின்றன. நடிகர்கள், திரைக்கதை, அப்போதைய மனோநிலை, நண்பர்களின் தூண்டுதல் என்பன அதில் சில. இவையெல்லாம் இல்லாமல் ஓர் இயக்குனரின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே ‘அங்காடித் தெரு’வுக்குச் சென்றேன்.
2006 ஆம் ஆண்டில் தமிழகம் சென்றிருந்த போது மனுஷ்ய புத்திரனோடு வசந்தபாலனின் ‘வெயில்’ திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். பிரமுகர்களின் சிறப்புக் காட்சி அது. எங்களுக்குப் பின்னால் எழுத்தாளர் திலகவதி அமர்ந்திருந்தார். உடனே அவரின் ‘கல்மரம்’ நாவல் நினைவிற்கு வந்தது. அந்த நாவலுக்கு எப்படி ‘சாகித்திய அகாதமி’ விருது கிடைத்தது எனக் கேட்க நினைத்து திரும்பினேன். பின்னர், அவர் ‘ஐ.பி.எஸ்’ என்பது நினைவுக்கு வந்து வாலைச் சுருட்டிக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டேன். நடிகர் பசுபதியிடம் ஒரு ‘ஹலோ’ சொன்னேன். படம் என்னை மிகவும் நெகிழ வைத்திருந்தது.படம் முடிந்தபின் வசந்தபாலனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினேன். திரும்பிச் செல்லும் போது மனுஷ்ய புத்திரனிடம் படம் குறித்துப் பேசிக்கொண்டே சென்றேன். “உயிர்மையில் எழுதுங்களேன்”, என்றார். “எழுதவேண்டும்”, என்றதோடு சரி.