01. உங்களை கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள் தோழர்…
தமிழ்ப்பள்ளி ஆசிரியனாகக் கடந்த 5 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறேன். ஆசிரியர் தொழிலைப் பிடித்துத் தேர்வு செய்யவில்லை. எதிர்கால மலேசிய சந்ததியினரையும் இந்தக் கல்வித் திட்டம் சிந்திக்கும் மனிதர்களாக உருவாக்கும் வகையில் அமைக்கப்படவில்லை. உயர்ரகக் கூலிகளை வேண்டுமானால் உருவாக்கலாம்.இந்நிலையில் மலேசிய அடித்தட்டுத் தமிழ் மக்களின் மனம் செயல்படும் விதத்தை அறிந்து கொள்ளும் கடமை ஓர் எழுத்தாளனாக எனக்கு உண்டு என நம்புகிறேன். தீவிரமாகச் சிந்திக்கும் போக்கு உள்ள ஓர் சமுதாயத்தை உருவாக்கத் தமிழ்ப்பள்ளி எனக்கு ஓர் களமாக உள்ளது. ஏறக்குறைய நான் செயல்படும் இலக்கியம், இதழ், அகப்பக்கம் என அனைத்துமே இந்தச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதே. Continue reading