
நாளை எழுத்தாளர் ஜெயமோகன் அறுபது வயதை நிறைவடைகிறார். வயது என்பது கூடுதலாக ஒரு வருடம். எல்லோருக்குமே அப்படி ஒரு வயது வரக்கூடியதுதான். ஆனால் ஆளுமைகளை நாம் தொகுத்துப் பார்க்கவும் அவர்களை இன்னொரு தலைமுறைக்கு மேலும் தீவிரமாகக் கடத்திச்செல்லவும் அது ஒரு சந்தர்ப்பம். ஜெயமோகன் போன்ற மாபெரும் ஆளுமையைக் கொண்டாட அப்படியான சந்தர்ப்பங்களைத் தவறவிடுதல் கூடாது. அவருக்கான ஒரு களஞ்சியத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற என் ஆவலை முதலில் சொன்னது சு. வேணுகோபாலிடம். அவருக்கே அப்படி ஒரு திட்டம் இருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.
Continue reading