ரயில்

ரயில்: கானகத்தில் கரையாத காலடிகள்

இரண்டாம் உலகப் போரின்போது 415 கிலோ மீட்டருக்குக் கட்டப்பட்ட தாய்லாந்து – பர்மா இரயில் பாதை  குறித்து தமிழில் சில புனைவு முயற்சிகள் நடந்துள்ளன. ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்‘, அ. ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’, ‘புதியதோர் உலகம்’, சா. அ. அன்பானந்தனின் ‘மரவள்ளிக்கிழங்கு’, கோ.புண்ணியவானின் ‘கையறு’ ஆகிய நாவல்களும் சை.பீர்முகம்மதுவின் ‘வாள்’ என்ற சிறுகதையும் உடனடியாக நினைவுக்கு வரக்கூடியவை. இது தவிர 2009இல் சீ. அருண் எழுதிய சயாம் – பர்மா மரண இரயில்பாதை என்ற கட்டுரை நூல், 2014இல் சிங்கையின் நாடோடிகள் கலைக்குழு தயாரித்த ஆவணப்படம் (Siam Burma Death Railway) ஆகியவையும் இந்தக் கொடும் வரலாறு குறித்து மலேசிய – சிங்கை பிரதேசத்தில் தொடர் உரையாடல்களாக இருப்பதற்கு சான்றுகளாகின்றன.

Continue reading