
யு.பி தோட்டத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் பெரியாற்றின் மேல் பரப்பில் விரிந்திருக்கும் மரக்கிளையில் இருந்து குதித்து, எல்லா சிறுவர்களும் ‘சொரப்பான்’ பாய்ந்துகொண்டிருக்க கரை ஓரமாக நீந்தியபடியே பாய்ந்த வேகத்தில் தன் நண்பர்கள் ஆற்றின் ஆழம் சென்று மீள்வதை ரசித்துக்கொண்டிருந்த சிறுவன்தான் முத்துசாமி. ஆற்றில் ஆழ நீந்துவதில் பயம் இருந்தாலும் அதில் கால்களை நனைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லை.…