உலக இலக்கியம்

மண்டோவின் துப்பட்டா

நீங்கள் எந்தக் கதையையாவது படித்து குற்ற உணர்ச்சி அடைந்ததுண்டா? உங்களை நீங்களே கீழான மனோநிலைக்கு நகர்த்தி வைத்ததுண்டா? உங்கள் மனதில் உள்ளிருக்கும் மிருகத்தை அடையாளம் கண்டதுண்டா?

என்னை அப்படியொரு படைப்பு செய்தது என்றால் அது மண்ட்டோவின் சிறுகதையாகத்தான் இருக்கும். ஒரு சிறுகதையில் வாசகனின் பங்களிப்பு என்ன என்பது மிக முக்கியமான கேள்வி. அவன் கதை கேட்பதை மட்டுமே வேலையாகச் செய்கிறான் என்றால் நிச்சயம் சிறந்த வாசகனாக இருக்க முடியாது. நாம் இன்று காணும் பெரும்பாலோர் சிறுகதையை வாசித்து அதன் சாரத்தை மட்டுமே அறிந்துகொண்ட சாரசரி வாசகர்கள்தான். அவர்களால் கதையை மட்டுமே சொல்ல முடியும். கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகள் பிரயோகத்தைச் சுட்டிக்காட்டமுடியும். வெகுசிலரே சிறுகதையுடன் உரையாடல் நடத்துகின்றனர். ஒரு சிறுகதையை வாசித்து முடித்தப்பின் உடன்பட்டும் முரண்பட்டும் தான் யாராக இருந்திருக்கிறோம் என்று மீளாய்வு செய்கின்றனர்.

Continue reading

ஹெமிங்வேயின் மீன்

hemiஒரு நதியில் இரு குச்சிகள் விழுகின்றன. ஒன்று குறுக்காகவும் மற்றது நேர்கோட்டிலும் மிதக்கின்றன. நேர்கோட்டில் விழுந்த குச்சி நதிக்கு தான்தான் பாதை காட்டுவதாக ஆனந்தத்தில் நதியுடன் இணைந்து பயணித்தது. குறுக்கே விழுந்த குச்சி தான் நதியின் ஓட்டத்தைத் தடைப்படுத்தப் போவதாகக் கடைசி வரை சாகசங்கள் செய்து பார்த்தது. இறுதியில் இரு குச்சிகளுமே பெரும் பள்ளத்தில் போய் விழுந்தன. நதிக்குக் குச்சிகள் குறித்து ஒன்றுமே தெரியாது. ஓஷோ சொன்ன இந்தக் கதையை நான் பலமுறை நினைவு படுத்தியுள்ளேன்.

Continue reading

மாப்பஸானின் குதிரை

110dசிறுகதை என்றவுடன் நம் மனதில் அது ஒரு சம்பவத்தைச் சொல்லும் படைப்பு முறை என தோன்றலாம். அதாவது ஒரு சம்பவம் நடக்கிறது, அந்தச் சம்பவத்தின் இறுதியில் ஒரு திருப்பம் இருக்கும். அந்தத் திருப்பமே கதையை வாசிப்பவருக்குச் சுவாரசியத்தையும் இதுவரை வாசித்ததற்கான மொத்த அனுபவத்தையும் கொடுக்கும் என பொதுவான ஒரு கருத்து இன்றும் உண்டு. சில சமயம் அதுபோன்ற படைப்புகள் வாசகர்களிடையே வெற்றி பெறுவதையும் பார்க்கிறோம். பொதுவாகவே படைப்பிலக்கியங்கள் ஓர் இலக்கணத்தை அடிப்படையாக வைத்து அதன் சட்டகத்திற்குள் பயணிப்பதில்லை. படைப்புகளே புதிய இலக்கணங்களை உருவாக்குகின்றன. அதற்குமுன் நடப்பில் இருந்த கட்டமைப்பை உடைத்து மறுநிர்மாணிப்பு செய்கின்றன. எனவே நிலையான படைப்பிலக்கணம் என ஒன்று இருக்க சாத்தியம் இல்லை.

Continue reading

ரேமண்ட் கார்வரின் வீடுகள்

Raymond Carverவாசிப்புப் பழக்கம் உள்ள பலரையும் பார்க்கிறேன். ஆனால் அவர்கள் நுண்வாசிப்பாளர்களாக இருக்கிறார்களா என்ற கேள்வியே எனக்கு எப்போதும் உண்டு. வாசிப்பு என்பது ஒரு போட்டியில்லை. அதிகமான நூல்களை வாசித்துவிட்டோம் என்ற பட்டியலைச் சுமப்பதில் என்ன பெருமை இருந்துவிடப்போகிறது? வாசிப்பின் பலன் நமக்குள் நிகழும் மாற்றம். வாசிப்பில் தனி ஒருவன் அடையும்  மாற்றமே அவனை எதிக்கொள்ளும் ஒவ்வொருவரையும்  தீ போல பற்றுகிறது. இந்த உள் மாற்றம் என்பதை மனவிசாலம் என சுருக்கமாக அடையாளம் காணலாம். தேர்ந்த வாசிப்பாளர்களுக்கு சமூகத்துக்கு இன்னல் தரும், சமுதாயத்தைச் சுரண்டும் நபர்கள் மேல் அறச்சீற்றம் எழுமே தவிர , தனிப்பட்ட வாழ்வில் யாரையும் நல்லவர் – கெட்டவர் எனப் பட்டியலிடமாட்டார்கள். இந்த மனவிசாலம் அடைய வகை செய்யும் நுண்வாசிப்பை பழக்கத்தில் கொள்ளாமல் சுமந்து திரியும் வாசித்த நூல் பட்டியல் என்பது வீண்.

Continue reading

செகாவின் நாய்

chekhovகல்வியாளர்களுக்கு  நவீன இலக்கியத்தின் மீது எப்போதுமே ஒரு சிக்கல் உண்டு. பல்வேறு கணிதங்களையும் அறிவியலையும் மொழியியலையும் புரிந்துகொள்ள முடிந்த அவர்களால் ஒரு கவிதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை எனும்போது கோபமடைவார்கள். அந்தக் கோபம் அதை எழுதிய படைப்பாளனின் மேல் பாயும். ‘தங்களுக்கே புரியாத’ ஓர் இலக்கியப்பிரதி நிச்சயம் முழுமையடையாதது என புறக்கணிப்பார்கள். சங்க இலக்கியங்களையே புரிந்துகொள்ள முடிந்த அவர்களால் ஒரு நவீன கவிதையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என கிண்டல்தொணியில் பேசுவார்கள். உண்மையில் அவர்கள் சங்க இலக்கியங்களை அறிய உதவியது அதன் விளக்க உரைகளின் துணைக்கொண்டே என்ற உண்மை அப்போதைக்கு மறந்துவிடும்.

சங்க இலக்கியப்பாடல்களை உள்வாங்க எவ்வாறான தளர்ந்த மனநிலை தேவையோ அதே மனநிலை நவீன கவிதை வாசிக்கும்போது கிடைக்காமல் அவதியுறுவார்கள். ஒரு மலரை அறிய அதன் இதழ்களைப் பிரித்து எறிந்து , பிழிந்து சாரெடுப்பதுதான் சாத்தியம் என நினைப்பவர்களுக்கு அதை முழுமையாக நுகர்ந்துபார்ப்பதன் மூலமாகவே அறியலாம் என்ற உண்மையை ஏற்பதில்லை. பல கல்வியாளர்கள் பிரேத பரிசோதனை போலவே இலக்கியத்தையும் வெட்டிக்கூறுபோட்டு அறிய முயல்வது வருத்தமே.

Continue reading

ஜன்னலின் ஓரம் சிறுமி

u‹e“cˆê•v‰‰Œ€ÜvŽöÜŽ®கனடாவில் உள்ள ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகளுக்குத் தாய். கொஞ்சம் சோர்வு அவர் குரலில் இருந்தது. காரணம் வினவியபோது குழந்தைகளால் பிரச்னை என்றார். “ஏன் பள்ளிக்குப் போக அடம் பிடிக்கிறார்களா?” எனக் கேட்டேன். “இல்லை… எவ்வளவு கெஞ்சியும் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்க மாட்டேன் என்கிறார்கள்” என மீண்டும் சோகமானார்.

Continue reading