ஆவணப்படங்களை இயக்கிக்கொண்டிருந்த சமயம் ஒரு பெரும் போதாமையை உணர்ந்தேன். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறை ஆளுமைகள் குறித்து கூறும்போது அவ்வாளுமைகளின் படங்கள் கிடைக்காமல் திணறுவோம். ஆவணப்பட செறிவாக்கப்பணியில் அந்தக் குறிப்பிட்ட ஆளுமைகளின் படத்தை இணைக்காமல் மனம் நிறைவு கொள்ளாது. இது ஒரு ஊனமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்த சமயம்தான் கோ.சாரங்கபாணிக்கும் இதே நிலை உள்ளதை அறிய முடிந்தது.
கட்டுரை/பத்தி
யாக்கை : கணேஷ் பாபு கடிதம்
2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
வண்ணங்களைப் பூசி விளையாடிய குழந்தை கைகளைக் கழுவாமல் தூர நின்று ஒழுங்கற்ற ஒழுங்கை ரசிக்கும்போது அதற்குள் ஏற்படும் பரவசம்தான் வருட இறுதியில் நின்றுகொண்டு திட்டுத் திட்டான அவ்வருட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கும்போது ஏற்படுகிறது. புதிய கார் வாங்குவது, புது வீடு வாங்குவது, திருமணம் செய்வது என இவ்வாண்டு தொடக்கத்தில் முகநூல் முழுக்க லட்சியக்குரல்கள் நிறைந்து கிடந்தபோது ஓர் எழுத்தாளனாக மட்டுமே வாழ்ந்து முடிக்க சித்தமாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு அர்த்தப்படும் கணங்கள் பொதுவெளியில் வியப்புக்கும் பின் நீடித்த நகைப்புக்குமாக மாறிவிடுகின்றன. அவ்வாறு சவர்க்கார பலூன் விடும் குழந்தையைப்போல எனக்குள் நுரைத்து நுரைத்து இவ்வருடம் மகிழ்ந்த நாட்கள் அதிகம்.
நாரின் மணம் 3: களவெனும் கலை
திருடர்கள் என்றலே எனக்கு மிகவும் பயம். அப்போதெல்லாம் எண்ணெய் மனிதன் (Orang Minyak) குறித்தப் பேச்சு எங்கள் ஊரில் அதிகம் இருந்தது. கம்பத்தில் வசித்தபோது நள்ளிரவுகளைத் தாண்டியும் பேய் பயமெல்லாம் இல்லாமல் சுற்றியுள்ளேன். கம்பத்து வீட்டுக்குள் இருக்கும்போதுதான் பகலில்கூட திருடர்கள் பயம் கௌவிக்கொள்ளும். குறிப்பாக எண்ணெய் மனிதன் என் பொழுதுகளை அச்சமடைய வைத்தான்.
நாரின் மணம் 2 : தோலிருக்க சொளா முழுங்கி
மாமிசத்துண்டுடன் ஆற்றைக் கடந்த நாய், நீரில் நிழலைப்பார்த்துக் குரைத்து மாமிசத்துண்டை இழந்ததோ, சின்னஞ்சிறிய சுண்டெலி சிங்கத்திடம் குறும்பு செய்து மாட்டிக்கொண்டு, உயிர்ப்பிச்சைக் கேட்டு தப்பிச்சென்றப்பின் சிங்கத்தை வலையிலிருந்து தப்பிக்க வேறொரு சந்தர்ப்பத்தில் உதவியதோ, நண்பர்களாக இருந்த தவளையும் சுண்டெலியும் குளத்துக்காகச் சண்டையிட்டு இறந்ததால் பருந்துக்கு இறையானதோ கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஈசாப் எழுதிய கதைகள் மூலம் பலரும் அறிந்திருக்கலாம். பள்ளிக்குச் சென்று நான் சுயமாக வாசிக்கத் தொடங்கிய அனேகமான தினங்களில் ஈசாப் என் உடன் இருந்தார். அழகிய படங்களுடன் அவரது கதைகள் வீட்டில் இருக்கும். அவர் ஓர் அடிமை என்பதோ அவர் கதைகள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோ எனக்கு அப்போது தெரியாது. அவரது கதைகள் மூலம் அப்போதே விலங்குகளின் மேல் இயல்பாக ஓர் ஈடுபாடு வந்தது எனக்கு.
நாரின் மணம் 1: காக்க காக்க கதிர்வேல் காக்க
ஏதோ ஒரு காரணத்தினால் என்னை பாலர் பள்ளியில் இணைக்கவில்லை. வறுமை ஒரு காரணமாக இருக்கலாம். சித்திதான் (அம்மாவின் தங்கை) எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். இரவானால் அம்மா சாமி அறையில் என்னையும் அக்காவையும் அமரவைத்து தேவாரம், திருவாசகம் பாடுவார். ஏழு வயதிலெல்லாம் கந்தர் சஷ்டி கவசமும் சிவபுராணமும் எனக்கு நன்கு மனனம். கந்தர் சஷ்டி கவசம் என்னை எந்த ஆபத்தில் இருந்தும் காப்பாற்றும் என அம்மா சொல்வதுண்டு. அம்மாவுக்காக இல்லாமல் அந்தப்பாடல்களைப் பாடும்போது எனக்குத் திக்காததால் நான் அவற்றை விரும்பிப் பாடுவதுண்டு. நாக்கு உளராத என்னை நான் சாமி அறையில்தான் அந்த வயதில் பார்த்தேன். என் உலகம் வீட்டுக்குள்ளேயே மையமிட்டிருந்தது. எனவே முதன்முறையாக ஒன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்தபோது பெரும் கலாச்சார அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.
காற்றுசெல்லும் பாதை – ஜெயமோகன்
சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் நவீனைச் சந்தித்தேன். 2006ல் நானும் அருண்மொழியும் சிங்கப்பூருக்குச் சென்றோம். சிங்கப்புர் எழுத்தாளர் சங்கம் சார்பில் என் நண்பர் சித்ரா ரமேஷ் அழைத்திருந்தார். அங்கிருக்கையில் மலேசியா வருகிறீர்களா என ஓர் அழைப்பு வந்தது. மலேசிய நவீன இலக்கியத்தின் மையமாகிய டாக்டர் சண்முக சிவா அழைத்திருந்தார் ஆனால் சிங்கப்பூரிலிருந்து நேரடியாக மலேசியா செல்ல விசா கிடைக்காது என்னும் நிலை.
மறைந்த நண்பர் ஈழநாதன் விசா ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார். சிலநாட்களிலேயே விசா வந்தது. சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு ஒரு பேருந்தில் சென்றிறங்கினோம். கொலாலம்பூர் பேருந்துநிலையத்திற்கு நண்பர் அகிலனுடன் ஒரு காரில் நவீன் வந்து வரவேற்றார். கரிய உருவம் சிறுவனைப்போன்ற அழகிய முகம். முகத்தில் சரியும் மயிக்கற்றை. செல்லப்பிள்ளைகளுக்குரிய மெல்லிய திக்கல் கொண்ட பேச்சு.
‘உலகின் நாக்கு’ நூலின் முன்னுரை
16 வயதில் சுஜாதாவிலிருந்துதான் நான் தமிழக இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினேன். அதுவரை மலேசிய இலக்கியங்களை வாசித்ததோடு சரி. எம்.ஏ.இளஞ்செல்வன்தான் முதன் முதலாக என் வாசிப்பின் போதாமையைச் சுட்டிக்காட்டினார். வாசிப்பு எத்தனை சுவையானது என புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ சிறுகதையைச் சொல்லி புரிய வைத்தார். அப்போது லுனாஸில் செயல்பட்ட புத்தகக் கடையையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது வித்தியாசமான புத்தகக் கடை.
மெனிஞ்சியோமா : வலியைத் தின்று வாழ்தல்
இதுவரை எந்த மரணத்துக்காகவும் அழுததாக நினைவில்லை. மரணம் ஒரு முற்றுப்புள்ளி. அதனிடம் விவாதிக்க ஒன்றும் இல்லை. ‘காலனும் கிழவியும்’ சிறுகதையில் அழைத்துப்போக வந்த எமனிடம் கிழவியைச் சண்டைப்பிடிக்க வைத்த புதுமைப்பித்தன்தான் ‘செல்லம்மாள்’ சிறுகதையில் செல்லம்மாளின் மரணத்தைக் பிரமநாயகம் ஒரு சாட்சியாக காண்பதைக் காட்டியுள்ளார். புதுமைப்பித்தன் அப்படித்தான். அவர் வாழ்வின் எல்லா சாத்தியங்களையும் புனைவில் உருவாக்கிப்பார்ப்பவர். ஆனால் வாழ்வு மனிதனுக்கு அத்தகைய சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை. பிரமநாயகம்போல மரணத்திடம் அதிகபட்சம் சாட்சியாக இருக்கும் உறவே சாத்தியம். மரணம், மரணித்தவரின் அன்புக்குறியவரையே அதிகம் வதைக்கக் கூடியது. ஆனால் விபத்தில் துடிக்கும் ஒரு இளைஞன் , தனது உறுப்பில் ஒன்றை இழந்து கதறும் ஒருவரின் அவலம், நோய்மையின் சுமை படுத்தும் பாட்டின் பதற்றம் என ஒருவரின் வலியே என்னை அவஸ்தையுற வைக்கும்.



யாக்கை சிறுகதை மேலோட்டமாகப் பார்க்கையில் மரணத்திற்கெதிரான ஒருவரின்
போராட்டமாகத் தென்பட்டாலும் உண்மையில் அது இருவருடைய யாக்கைப் போராட்டமாகத்தான் விரிகிறது. ஈத்தனின் யாக்கைப் போராட்டத்தை அவரது மகள் சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டே வரும் கதைசொல்லி ஒரு கட்டத்தில் ஈத்தனுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கிறான். தன்னை அண்டவந்த மரணத்தில் இருந்து தப்பிக்க முடிந்த ஈத்தன் தானே மரணத்தைச் சென்றுதொடும் புள்ளியில் உறைந்து போகும் கதைசொல்லி ஈத்தனாகத் தன்னையும், கடலாக அந்தப் பெண்ணையும் பாவித்துக்கொள்ளும் தருணத்தில் கதை நிறைவுறுகிறது.
Continue reading →