கட்டுரை/பத்தி

அவ‌தாரும் ஆத்தாவும்!

 

அவ‌தார் ப‌ட‌த்தை இர‌ண்டாவ‌து முறையாக‌ ‘3டி’ காட்சியில் பார்த்த‌போதும் மன‌ம் அப்ப‌ட‌த்தின் இறுதி க‌ட்ட‌த்திற்கே காத்திருந்த‌து. ம‌ற்றெல்லா காட்சிக‌ளைவிட‌வும் இறுதி காட்சியில் என‌க்கு ஒரு வ‌கையான‌ சிலிர்ப்பு ஏற்ப‌ட்ட‌து. இனி தோல்விதான் என‌ அந்த‌ப் பூமியின் ம‌க்க‌ள் பின்வாங்கும் நிலையில் இந்த‌ வ‌ன‌ம் எங்க‌ளுக்கும் சொந்த‌மான‌துதான் என‌ வில‌ங்குக‌ள் வ‌ந்து யுத்த‌ம் செய்யும் காட்சி ம‌னித‌னின் ஆண‌வ‌த்திற்கு அறைவிழுந்த‌து போல் இருக்கும்.

Continue reading

கோழைகளின் கூச்சல்

நேற்று ஃபிளோமினா எனும் புனைப்பெயரில் சிங்கப்பூர் Bras Basah Road  அருகில் உள்ள ஒருவர் வெட்டிக்கதை அளந்ததைத் தொடர்ந்து அவர் யாரென்று கண்டுப்பிடிக்கப்பட்டது. கண்டுப்பிடிக்கப்பட்டது தெரிந்தவுடன் ஆள் ஓடிவிட்டார். இந்நிலையில் எனக்கு  ‘ராஜூ’ போலி பெயரில் மற்றுமொரு  மின்னஞ்சல் வந்தது. அதில் மிக முக்கியமானது என் எழுத்து தொடர்பானதல்ல. என் ஆசிரியர் தொழில் சம்பந்தப்பட்டது. அதில் நான் பள்ளிக்கூடத்தில் செய்த தவறுகளுக்காகப் பள்ளி (அரசாங்கத்தால்) மாற்றப்பட்டதாக இருந்தது. மிக விரைவில் அந்த ‘ரகசியம்’ அம்பலப்படுத்தப் படுமாம். நல்லது.

Continue reading

முகிலனும் முருங்கைப் பூவும்

தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சிகரமானவர்கள். கல்வியும், நாகரீகமாகிவிட்ட வாழ்வியல் முறையும், எளிதாகிவிட்ட உலகத் தொடர்புகளும் எந்த வகையிலும் அவர்களிடம் மாற்றம் கொண்டுவரவில்லை. திராவிட கழகப் பிண்ணனியில் பெரியாரைத் தவிர்த்து அறிஞர் அண்ணா, கருணாநிதி, போன்றோருடைய அடுக்குமொழியும் அலங்காரமுமான பேச்சில் உணர்ச்சி தூண்டப்பட்டு கொதித்தெழுந்த பரம்பரையின் இரத்தத்தொடர்பு, நமது நாட்டிலும் இன்னும் நீர்த்துப் போகாமல் இருக்கிறது.

Continue reading

ம‌ற‌க்கும் க‌லை!

சோம்பிக் கிடந்த வீட்டின் மூன்றாவது மாடியில் நூலகத்தை அமைத்தவுடன் சட்டென அப்பிரதேசம் முழுதும் உயிர் வந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. ஒரு நாளில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தனித்திருப்பது கசகசப்பான மனதின் தன்மையைக் கொஞ்சமாவது அமைதி செய்ய உதவுகிறது.

Continue reading

மலேசியா – சிங்கப்பூர் உறவுப்பால மாநாட்டில் என் உரை

வணக்கம்.

ரௌடிகளாகவும் ஒழுக்கத்தைச் சிதைப்பவர்களாகவும் புனிதங்களைக் கேள்வி எழுப்புபவர்களாகவும் நம்பப்படும் எங்களுக்கு இந்நிகழ்வில் உரையாற்ற வாய்ப்பு வழங்கியமைக்கு முதலில் நன்றிகள்.

Continue reading

நானும் சில சாமியார்களும்

கடவுள் மீதான நம்பிக்கை எனக்கு என் அம்மாவின் மூலம் வந்திருந்திருக்கக்கூடும். அம்மா ஒரு முருக பக்தை. நானும் அது போல ஆக வேண்டும் என நிறைய ஆசை பட்டார். நான் முருகனின் அருளால் பிறந்த குழந்தை என்றும் கடவுளின் அம்சம் எனக்கிருப்பதாகவும் தீர்க்கமாக நம்பினார்.

நான் சின்ன வயதிலேயே பிள்ளையார் பக்தனாகி விட்டேன். `திருவிளையாடல்’ படத்தில் பிள்ளையார் முருகனை குறுக்குவழியில் வெற்றி கொண்டு ஞானப்பழத்தை பெற்றது அதற்கு முக்கியக் காரணம். எனக்கு நல்ல நன்னெறி பாட ஆசிரியர் கிடைத்ததால், பின்னாளில் முருகன் மீது இரக்கமும் பிள்ளையார் மீது கோபமும் வந்து நானும் தீவிர முருக பக்தனாகி விட்டேன்.

Continue reading

ஒரு மின்ன‌ஞ்ச‌லும்… த‌ற்கொலை செய்து கொள்ளும் த‌த்துவ‌ங்க‌ளும்!

மின்ன‌ஞ்ச‌லுக்கு முன்பு:

பொதுவாக‌ உண‌வுக‌ள் குறித்த த‌டைக‌ள் என்னிட‌ம் பெரிதாக‌ இருந்த‌தில்லை. என‌து ஜீர‌ண உறுப்புக‌ள் மிகுந்த‌ க‌றாரான‌வை. என் உட‌லுக்குத் தேவையில்லாத‌ உணவு என்றால் நான் உண்ட‌ அடுத்த‌ நிமிட‌மே ‘வெளியே போ!’ என‌ வ‌ந்த‌ வாச‌ல் வ‌ழியே க‌ழுத்தைப் பிடித்து வெளியே த‌ள்ளிவிடும். அதை நான் பெரும்பாலும் த‌டுப்ப‌தில்லை.

க‌ம்ப‌த்தில் வ‌சித்த‌போது என் அண்டைவீட்டுக்கார‌ர் வேட்டையாடுவ‌தை தொழிலாக‌க் கொண்டிருந்த‌தால் உடும்பு, அலுங்கு, காட்டுப்ப‌ன்றி போன்ற‌வை அவ்வ‌ப்போது சாப்பிட‌க்கிடைக்கும். இவ‌ற்றையெல்லாம் சாப்பிட‌ முடிந்த‌ என்னால் எவ்வ‌ள‌வு முய‌ன்றும் ஆட்டிறைச்சியைச் சாப்பிட‌ முடிந்த‌தில்லை. உள்ளே நுழைந்த‌ சிறிது நேர‌த்திலெல்லாம் அங்கே இங்கே முட்டி மோதி நெஞ்சு க‌ரிப்பெடுத்து வெளியேறிவிடும்.

Continue reading

இளங்கோவன் : தீ முள்

இளங்கோவன் அறிமுகம் ஆகும் முன்னரே அவர் பெயர் நன்கு அறிமுகமாகியிருந்தது. சில சிங்கை நண்பர்கள் மூலமாக அவர் சிங்கப்பூரில் மிக முக்கிய படைப்பாளி என்பதையும் அறிந்துகொண்டேன். மேடை நாடகம், கவிதை, மொழிப்பெயர்ப்பு என பலவற்றிலும் அவரது ஆளுமையை சிங்கை நண்பர்களுடனான உரையாடலின் மூலம் அறிய முடிந்தது. கூடவே அவர் யாரையும் பார்க்கவும் உரையாடவும் விரும்பமாட்டார் எனவும் தொடர்ந்தார் போல தகவல்களும் வந்து கொண்டிருந்தன.

அப்போது தமிழகச் சிற்றிதழ்களில் தலித் இலக்கியம் பற்றிய விவாதங்கள் வந்து கொண்டிருந்தன. எளிய மனிதர்கள், அவர்கள் வாழ்க்கை, அவர்களின் பால் செலுத்தப்படும் சுரண்டல்கள் போன்றவற்றை வாசித்துக் கொதித்துப் போயிருந்தேன். மலேசியாவில் அம்னோ அரசால் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்தின் ஓர் அங்கமான நான், எல்லா அரசியல் செயல்பாடுகளையும் ஒரு தலித் மன நிலையில் இருந்தே சிந்தித்தேன். சிந்திக்கிறேன். முதிர்ச்சியடையாத ஒரு சிந்தனை காலக்கட்டத்தில் சுற்றி நடக்கும் அனைத்திற்குமே அரைகுறையான அரசியல் பார்வையோடு சிந்திக்கும் தன்மை மட்டுமே அப்போது வாய்த்திருந்தது.

Continue reading