சோம்பிக் கிடந்த வீட்டின் மூன்றாவது மாடியில் நூலகத்தை அமைத்தவுடன் சட்டென அப்பிரதேசம் முழுதும் உயிர் வந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. ஒரு நாளில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தனித்திருப்பது கசகசப்பான மனதின் தன்மையைக் கொஞ்சமாவது அமைதி செய்ய உதவுகிறது.
கட்டுரை/பத்தி
மலேசியா – சிங்கப்பூர் உறவுப்பால மாநாட்டில் என் உரை
வணக்கம்.
ரௌடிகளாகவும் ஒழுக்கத்தைச் சிதைப்பவர்களாகவும் புனிதங்களைக் கேள்வி எழுப்புபவர்களாகவும் நம்பப்படும் எங்களுக்கு இந்நிகழ்வில் உரையாற்ற வாய்ப்பு வழங்கியமைக்கு முதலில் நன்றிகள்.
நானும் சில சாமியார்களும்
கடவுள் மீதான நம்பிக்கை எனக்கு என் அம்மாவின் மூலம் வந்திருந்திருக்கக்கூடும். அம்மா ஒரு முருக பக்தை. நானும் அது போல ஆக வேண்டும் என நிறைய ஆசை பட்டார். நான் முருகனின் அருளால் பிறந்த குழந்தை என்றும் கடவுளின் அம்சம் எனக்கிருப்பதாகவும் தீர்க்கமாக நம்பினார்.
நான் சின்ன வயதிலேயே பிள்ளையார் பக்தனாகி விட்டேன். `திருவிளையாடல்’ படத்தில் பிள்ளையார் முருகனை குறுக்குவழியில் வெற்றி கொண்டு ஞானப்பழத்தை பெற்றது அதற்கு முக்கியக் காரணம். எனக்கு நல்ல நன்னெறி பாட ஆசிரியர் கிடைத்ததால், பின்னாளில் முருகன் மீது இரக்கமும் பிள்ளையார் மீது கோபமும் வந்து நானும் தீவிர முருக பக்தனாகி விட்டேன்.
ஒரு மின்னஞ்சலும்… தற்கொலை செய்து கொள்ளும் தத்துவங்களும்!
மின்னஞ்சலுக்கு முன்பு:
பொதுவாக உணவுகள் குறித்த தடைகள் என்னிடம் பெரிதாக இருந்ததில்லை. எனது ஜீரண உறுப்புகள் மிகுந்த கறாரானவை. என் உடலுக்குத் தேவையில்லாத உணவு என்றால் நான் உண்ட அடுத்த நிமிடமே ‘வெளியே போ!’ என வந்த வாசல் வழியே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடும். அதை நான் பெரும்பாலும் தடுப்பதில்லை.
கம்பத்தில் வசித்தபோது என் அண்டைவீட்டுக்காரர் வேட்டையாடுவதை தொழிலாகக் கொண்டிருந்ததால் உடும்பு, அலுங்கு, காட்டுப்பன்றி போன்றவை அவ்வப்போது சாப்பிடக்கிடைக்கும். இவற்றையெல்லாம் சாப்பிட முடிந்த என்னால் எவ்வளவு முயன்றும் ஆட்டிறைச்சியைச் சாப்பிட முடிந்ததில்லை. உள்ளே நுழைந்த சிறிது நேரத்திலெல்லாம் அங்கே இங்கே முட்டி மோதி நெஞ்சு கரிப்பெடுத்து வெளியேறிவிடும்.
இளங்கோவன் : தீ முள்
இளங்கோவன் அறிமுகம் ஆகும் முன்னரே அவர் பெயர் நன்கு அறிமுகமாகியிருந்தது. சில சிங்கை நண்பர்கள் மூலமாக அவர் சிங்கப்பூரில் மிக முக்கிய படைப்பாளி என்பதையும் அறிந்துகொண்டேன். மேடை நாடகம், கவிதை, மொழிப்பெயர்ப்பு என பலவற்றிலும் அவரது ஆளுமையை சிங்கை நண்பர்களுடனான உரையாடலின் மூலம் அறிய முடிந்தது. கூடவே அவர் யாரையும் பார்க்கவும் உரையாடவும் விரும்பமாட்டார் எனவும் தொடர்ந்தார் போல தகவல்களும் வந்து கொண்டிருந்தன.
அப்போது தமிழகச் சிற்றிதழ்களில் தலித் இலக்கியம் பற்றிய விவாதங்கள் வந்து கொண்டிருந்தன. எளிய மனிதர்கள், அவர்கள் வாழ்க்கை, அவர்களின் பால் செலுத்தப்படும் சுரண்டல்கள் போன்றவற்றை வாசித்துக் கொதித்துப் போயிருந்தேன். மலேசியாவில் அம்னோ அரசால் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்தின் ஓர் அங்கமான நான், எல்லா அரசியல் செயல்பாடுகளையும் ஒரு தலித் மன நிலையில் இருந்தே சிந்தித்தேன். சிந்திக்கிறேன். முதிர்ச்சியடையாத ஒரு சிந்தனை காலக்கட்டத்தில் சுற்றி நடக்கும் அனைத்திற்குமே அரைகுறையான அரசியல் பார்வையோடு சிந்திக்கும் தன்மை மட்டுமே அப்போது வாய்த்திருந்தது.
“பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?”
குறிப்பு : மலேசியத் தமிழர்கள் நெடுங்காலமாகவே மிகச் சமத்தாக ஒளித்துவைத்து வளர்த்தெடுக்கும் பார்ப்பனர் ஏற்படுத்திய சாதிய அடையாளங்களின் கறைகளை நெம்பிக்காட்ட பார்ப்பனர் ஏற்படுத்திய சாதிய அடுக்குகளையே கட்டுரையில் சில இடங்களில் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
நமது நாட்டில் அவ்வப்போது தமிழர்களிடம் ஏதாவது பிரச்சனையை ஒட்டி மிகப்பெரிய கொதிப்பலை வேகமாக எழுந்து அதன் அதிர்வு நாடு முழுதும் பற்றிப் படர்வதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த எழுச்சி போராட்டங்கள் பல்வேறு சமயங்களில் சாதகமான விளைவுகளை நமது சமூகத்துக்கு ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உருவாக்கப்பட்டது முதல், மிக அண்மையில் எஸ்.பி.எம் பாட விவகாரத்தில் தமிழிலக்கியத்தை நீக்கியதில் ஏற்பட்ட கொந்தளிப்பு வரை சட்டென மலேசியத் தமிழர் போராட்ட வரலாறு ஒரு பட்டியலாக மனதில் உருவாகிறது.
‘பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?’
முப்பத்தைந்தாவது மது புட்டியைக் காலியாக்கிய களிப்பில் நண்பன் கேட்டான். “பிரபாகரன் இன்னும் இருக்காராடா?” சுற்றியிருந்த நண்பர்கள் என் பதிலுக்கு ஆவலாகக் காத்திருந்தனர். கோலாலம்பூரில் வசிப்பதாலும் இதழ் நடத்துவதாலும் உலகின் அத்தனை மர்மங்களுக்கும் என்னிடம் விடை உண்டு என்பது அவர்கள் கணிப்பு. என் பதிலுக்குக் காத்திருக்காமல் இன்னொரு நண்பன் “அவரு எப்படிடா சாவாறு… திரும்ப வருவாருலா ஜோ. பெரச்சன கொடுப்பாரு. தமுலன்னா சும்மாவா” என குரலை உயர்த்தினான். அழுத்தம் திருத்தமான நண்பனின் பேச்சு நெடுநாளைக்குப் பின் ஒட்டுமொத்தமான வெற்றிக்கூச்சலை நண்பர்களிடமிருந்து கேட்க உதவிசெய்தது. முன்பு கேள்வி எழுப்பிய நண்பன் என்னையே கூர்ந்து பார்த்தபடி இருந்தான். அவனுக்கு என் பதில் தேவைப்பட்டது. “அவர் இருந்தா என்ன… இல்லனா என்ன… உங்களுக்கு இப்ப பிரபாகரனோட தேவை என்ன?” என் பதில் பல நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்குக் கெடாவில் குழுமியிருந்த பல நண்பர்களையும் கோபமடைய வைத்தது. அடுத்த நிமிடமே நான் ஒரு தமிழின துரோகியின் மதிப்பீட்டோடு நண்பர்கள் முன் வீற்றிருந்தேன்.
வேதாளம் சொன்ன கதை
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் வேதாளத்தைத் தூக்கித் தோள்மீது போட் டான். எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரனின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் சிக்கிச் சின்னா பின்னமாகிய வேதாளம் அப்போதுதான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. விக்ரமாதித்தனின் தொல்லை தாங்காமல் வேதாளம் கடுப்பாகிக் கதை கூறத் தொடங்கியது…
விக்ரமாதித்தனே உன் முயற்சியை மெச்சினோம். ஆனா, இப்படித் தூங்கும்போது தொந்தரவு பண்றதுதான் உங்கிட்ட எனக்குப் பிடிக்காத பழக்கம். என்னை மட்டுமல்ல இந்தச் சமுதாயத்தையும் நீ எழுப்ப நினைச்சா, நீ ஐ.எஸ்.ஏ வுல உள்ள போறது திண்ணம். அதனால, யாரையும் எப்பவும் எழுப்ப முயற்சி பண்ணாத. முடிஞ்ச வரைக்கும் தமிழ்,இலக்கியமுன்னு பேசி பணம் சம்பாரிச்சிக்கோ. ஆனா, உம்மவன மட்டும் தமிழ்ப் பள்ளியில போட்டுறாத. ஒரு நல்ல தலைவராக இதுதான் முதல் குணம்.