சட்டென சந்திக்கும் பெண்ணிடம்
எழும் காமத்தை…
காதல் தீர்ந்துவிட்ட கணத்தின்
கசப்பை…
உன் நட்பு இனி தேவையில்லை
என்ற வெறுப்பை…
இதற்காகத்தான் பழகினேன்
என்ற உண்மையை…
நான்தான் குற்றவாளி
என்ற வாக்குமூலத்தை…
எனக்கு யாருமே தேவையில்லை
என்ற இறுமாப்பை…
நான் மரணத்தை மட்டுமே விரும்புபவன்
என்ற மௌனத்தைசத்தமிட்டு சொல்லமுடியாதவரை
இந்த வாழ்க்கை
சுதந்திரமற்றதுதான்.
(Visited 100 times, 1 visits today)