க‌விதை

மூன்று கவிதைகள்

imagesஅதற்குமுன்
பிணங்கள் மட்டுமே புதைக்கப்பட்ட
உனது நிலத்திற்கு
செம்மஞ்சள் ரோஜாக்கள் பூக்கும்
செடி ஒன்றை எடுத்துவந்தேன்

மணல் சூழ்ந்துவிட்ட அந்நிலத்தில்
இனி உயிர்கள் துளிர்க்காது என்றாய்

நிலம் பிளந்து வெளிபடும் அசைவு
மண்புழுக்களல்ல
விஷப்பாம்பின் நாக்குகள் என்றாய் Continue reading

காசி கவிதைகள்

அந்த இரவுnavin 3

இந்த இரவில் அவ்வளவு கறுமையில்லை
எங்கிருந்தோ ஒரு மணியின் ஓசை
கண்கள்வழி புகுந்து
வெளிச்சம் கொடுக்கத்தொடங்கியது
தோல்களை உரசிய காற்று
இரவைக் கிழித்து
காட்சிகளைப் படிமங்களாக்கியது
இப்போதுதான் எரியத்தொடங்கிய
பிணத்தின் சாம்பல்வாடை
இரவுக்குள் கண்களை ஊர்ந்துசெல்ல வைக்கிறது
நான் கங்கையைப் பருகியபோது
கறுமை தனது ஆடைகளைக் களைந்து
இந்த இரவை அத்தனை கருமை இல்லாததாக்கியது.

Continue reading

2.5.2017 – ஆன இன்று…

images

 

 

 

 

 

இறுதியாய்

இறுதியாய் பேசி முடிந்துவிட்டது.

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்
கொடுக்கப்பட்ட நம்பிக்கைகள்

கொடுக்கப்பட்ட திட்டங்கள்
கொடுக்கப்பட்ட முத்தங்கள்
எல்லாமே எல்லாமே
இந்த நிமிடம்

இல்லையென ஆகிவிட்டது

Continue reading

இரு கவிதைகள்

காலத்தின் டைரி47045710-death-pictures

மரணத்தை
இறுதியென நம்பி அழுதுக்கொண்டிருந்தவர்களை
துக்கம் கசிந்த அமாவாசையில்
சந்தித்தேன்

பதுக்கி எடுத்துச்சென்ற
ஒளிவீசும்
கால டைரிக்குள்
கையை நுழைத்து
ஒவ்வொன்றாக வெளியே எடுத்தேன்

Continue reading

மாடறுக்கும் சிவம்

pejantan-kk-muda-jpgc200ஊர் வரண்ட
நாளில்
நான் ஆத்திகனானேன்

பட்டையா நாமமா
என காசு சுண்டி
சிவ பெருமானைச் சரணடைந்தேன்

மதி சூடிய பித்தன்
அரைக்கண்ணில் எனைப்பார்த்தான்

Continue reading

ஒரு கிளாஸ் வைன்னும் இரு கவிதைகளும்…

bஇன்று உறங்காமல் இருப்பதென முடிவெடுத்தது ஒரு நாவலை வாசிக்க. இடையில் கொஞ்சம் ‘வைன்’ தேடினேன். ஒரு மாதத்திற்கு முன் நண்பர் சரவணன் அன்பளிப்பாகக் கொடுத்தது. என் ரசனை அறிந்தவர். சிகப்பு ‘வைன்’னை பருகுவதைவிட கிளாஸில் ஊற்றுவது சுவாரசியமானது. அதற்கேற்ற கிளாஸைத் தயார் செய்து ஐஸ் கட்டிகளை நிரப்பி பாட்டிலைக்கவிழ்க்கும்போது வெளிபடும் ஓசை; இசை. சிவப்பு வைன் பொருத்தமான கிளாஸில் அழகாகக் காட்சியளித்தது.

Continue reading

வனம் புகுதல்

jungle-forest

 

 

 

 

 

நெடுநாள் வருகை செய்யாத வனத்தில்
விட்டுச்சென்ற மரங்கள்
பழைய அன்புடன் நலம் கேட்டன.
கொடிய இருள் குறைந்து
ஆங்காங்கு புதிதாய் அமைக்கப்பட்ட கூடாரங்களில் குரங்குகள்.
ஆச்சரியமாக கைத்தொலைப்பேசியில்
சிக்னல் கிடைக்கிறது.
அதற்குமேல் பாதை இல்லாத
மைய வனத்தில்
யாரேனும் அலுவலகம் நடத்திக்கொண்டிருப்பார்களோ
என்ற அச்சம் தன்னிச்சையாக எழுவதை சொன்னபோது
மாயா உறக்கத்தில் இருந்தாள்.

Continue reading