ஒரு பேருந்தை தவற விடுவதுபோல
திரைப்படத்தின் ஓர் அபாரக் காட்சியில் மின்சாரம் நிர்ப்பதுபோல
இரு பறவைகள் மிகச்சரியாக நிலவுக்கு முன் பறந்து கடக்கும் தருணம்
காமிரா செயலிழப்பது போல
வரம் கேட்கும் நிமிடம் சொற்கள் திக்குவதுபோல
உணர்ச்சியற்ற ஒருவனின் முதல் கண்ணீரை அவதானிக்கும் முன்
காய்ந்து கனவாவதுபோல
முதன் முதலாய் வெளியேறும் விந்தின் சுவாரசியத்தை
நினைவில் சேமிக்காததுபோல
அத்தனை அபத்தமானவை
என்னைப்பற்றிய எல்லா புகார்களுக்குமான
தண்டனைகள் இல்லாமல் போகும் ஆச்சரியம்
(Visited 148 times, 1 visits today)