Author: அ.பாண்டியன்

வாசகனின் உள்ளத்தை விசாலப்படுத்தும் எழுத்துகள்

இலக்கியம் வாசகனைப் புதிய அனுபவங்களை நோக்கி நகர்த்துகிறது. உயிரோட்டமும் அனுபவ எதார்த்தமும் கொண்ட எழுத்துகள், வாசகனின் உள்ளத்தை விசாலப்படுத்துகின்றன. உலகமொழி இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் இருக்கும் பொதுக் குணம் இது. அதேசமயம் ஒரு மொழியின் இலக்கியமானது, அந்த மொழிசார்ந்த இனத்தின் பண்பாடுகளின் அடையாளமாகவும், அரசியல் பதிவாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும் அமைந்துவிடுகிறது. சங்க இலக்கியங்கள் தமிழினத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும்…

பாவனைச் சமுதாயம்

கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு 10 மணி அளவில் எனது புலனத்தில் தொடர்ந்து வரத்துவங்கிய தகவல்கள் என் கவனத்தைக் கோரின. இந்திய முன்னால் அதிபரும் உலக தமிழர்கள் பலவகையிலும் நன்கு அறிந்த பெரியவர் எ.பி.ஜே அப்துல் கலாம் மரணம் பற்றிய தகவல்கள் அவை என்பதால் அத்தகவல்களின் நம்பகத்தன்மையை முதலில் அறியவேண்டியிருந்தது. அது உண்மை தகவல்…

பேனாவை முறிக்கும் அதிகார கரங்கள்

படைப்புலகம் கலை நயமும் அழகியலும் சார்ந்தது என்றாலும் அது விட்டுச் செல்லும் தாக்கமானது அதிகார வர்க்கத்திற்கு எப்போதும் அச்சுறுத்தல் தருவதாகவே இருக்கிறது. தீவிர நிகழ்த்துக் கலைகளாக இருந்தாலும் இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அது அதிகார வர்க்கத்தின் பொதுபுத்தி சார்ந்த போக்குகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் சவால் விடுவதாகவும் மாற்றுச் சிந்தனைகளை முன்னெடுப்பதாகவும் இருப்பதால்தான் அரசுகள் படைப்பாளர்கள் மேல் அவ்வப்போது…

குறையொன்றுமில்லை: நூல் அறிமுகம்

துறவிகள், முனிவர்கள், சன்யாசிகள் போன்ற ஆன்மீக பணியாளர்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு அன்னியமானவர்கள் அல்ல. பன்னெடுங்காலமாகவே தமிழ் இலக்கியத்தோடு முனிவர்களும் தவச் சான்றோர்களும் துறவிகளும் நெருங்கிய தொடர்பாளர்களாகவே இருந்துவருவதை தமிழ் இலக்கிய வரலாறு மெய்பிக்கிறது. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ ஒரு சமண துறவி. பக்தி இலக்கியம் படைத்த சமயக் குறவர்கள் ஆன்மீக வாழ்க்கையை நாடியவர்களே. சைவ…

மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா? (பகுதி 2)

இரண்டாம் பாகம் தமிழ்த் தேசியம் தமிழ் தேசியம் என்னும் முழுமை இல்லாத கருத்தாக்கத்தை அவ்வளவு சுலபமாக விளக்கி விடவும் முடியாது. காரணம் அடிப்படையில் தமிழ் தேசியம் வேறொரு சமூக நீதியை பேசுவதாகவும் நடைமுறையில் வேறு ஒரு சமூகநீதியை கடைபிடிப்பதாகவும் உள்ளது. உலக தமிழர்களுக்கு தோதான மேடையை அமைக்கும் பேரியக்கமாக அது தன்னை அடையாளப்படுத்தினாலும் நடைமுறையில் அது…

மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா?

முதல் பாகம் முன்னுரை தமிழ் உணர்வு சிந்தனையாளர்கள் இடையேயும், தமிழர் அரசியல் முன்னெடுப்பளார்கள் இடையேயும் இன்று பெரிய சிந்தனை தாக்கத்தையும் தீவிர உரையாடல்களையும் தோற்றுவித்திருக்கும் களமாக அமைந்திருப்பது தமிழ்த் தேசியம் என்னும் இனவழி அரசியல் முன்னெடுப்பாகும். கடந்த நூற்றாண்டில் தேசியவாத கருத்தாக்கங்களின் எதிராகவும் காந்தியச்சிந்தனைகளின் எதிராகவும் நின்று, திராவிடர்கள் என்ற இனமரபுக்குள் தமிழர்களின் மாற்றுச் சிந்தனை…

2015 வரவு செலவு அறிக்கை – ஒரு சாமானியனின் பார்வை

மலேசிய மக்களுக்கு பொருளாதாரம் குறித்த சிந்தனைகளும் விழிப்புணர்வுகளும் துளிர்விட்டு கிளம்பும் மாதம் அக்டோபர் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அக்டோபர் மாதத்தில் தான் நாட்டின் வரவு செலவு திட்ட அறிக்கை வெளியிடப்படுகிறது. ஆண்டுதோரும் அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் முதல் வாசிப்பே ‘வரவு செலவு வாசிப்பு’ என்றும் பட்ஜெட் என்றும்…

கே. பாலமுருகனின் ‘மர்ம குகையும் ஓநாய் மனிதர்களும்’ : சிறார் இலக்கியமும் அதன் தேவையும்

கடந்த 20.9.2014 அன்று சுங்கை பட்டாணி நகரின் சிந்தா சாயாங் கிளப் (Cinta Sayang Club) மண்டபத்தில் எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘‘மர்ம குகையும் ஓநாய் மனிதர்களும்’ சிறுவர் நாவல் வெளியீடு கண்டது. அந்நிகழ்வு மலேசிய தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் தனிச்சிறப்பு மிக்கதாககவும் அமைந்தது. வழக்கமாக நாட்டில் வெளியிடப்படும் தமிழ் நாவல்களை…

கோ. புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’ – கோழைகளின் விதி அடிமை வாழ்வே!

சில ஆண்டுகளாக மலேசிய தமிழ் இலக்கியத்தில் நீடித்து வரும் நாவல் வரட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்களின் ‘செலாஞ்சார் அம்பாட்’. அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் தொன்னூறு விழுக்காடு மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. செலாஞ்சார் அம்பாட் என்னும் ஃபெல்டா நிலப்பகுதியில், போக்கிடம் அற்று ஒதுங்கிய தொழிலாளர் கும்பல் ஒன்று…

எஸ்.எம்.ஆறுமுகத்தின் ‘உயிர்த்துடிப்பின் இதய ஒலி’ – முதிரா கதைகளின் தொகுப்பு

மலேசிய நாளிதழ்களிலும் வார மாத சஞ்சிகைகளிலும் அச்சிடப்படும் சிறுகதைகள் பெரும்பாளும் எந்த சுவாரசியமும் இன்றி தட்டையாக இருப்பது இலக்கிய ஆர்வளர்கள் பலரும் அறிந்ததே. விதிவிலக்காக சில சமயங்களில் நல்ல சில படைப்புகளையும் நாம் பார்க்க நேர்கிறது. அச்சு இதழ் கதைகளின் வெத்துப் போக்கை நாம் எந்த விமர்சனமும் இன்றி கடந்து போய்விடுவது வாடிக்கை. காரணம் மீண்டும்…

கருவில் வளரும் அணு ஆயுதம்

மலேசிய மலாய் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் அனுவார் ரிட்வான் ( Anwar Ridhwan). 1949 ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்த இவர், 1970 களில் இருந்து சிறுகதை இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சிறுகதை தவிர சில நாவல்கள், கட்டுரை நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நவீன மேடை நாடகங்களில் இவரது பணி…

‘டை’ அணிந்தவன் கணேசன் இல்லை.

என் கைப்பேசியின் பெயர் பட்டியலைத் திறந்து ‘ G ’ எழுத்தைத் தட்டினால் மூன்று கணேசன்கள் வந்து வரிசை பிடித்து நிற்கின்றனர். முதலாவது கணேசன் என் மகளின் டியூசன் ஆசிரியர். ‘வாவாசான் இன்டெலெக்’ டியூசன் சென்டரை நிர்வகிக்கிறார். இரண்டாவது கணேசன் என் பழைய தோழன். ஆரம்ப பள்ளியில் இருந்து பழக்கமானவன். மூன்றாவது கணேசன் யாரென்று தெரியவில்லை.…

மாற்றத்தை நோக்கியதே இலக்கியம்

மூலம் S.M. ஷாகீர்   மொழியாக்கம்: அ.பாண்டியன் கட்டுரையாளரைப் பற்றி: S.M. ஷாகீர்- இயற்பெயர்  ஷேட் முகமது ஷாகீர் பின் ஷேட் ஓத்துமான். 4.2.1969 கோத்தா பாருவில் பிறந்தவர். 1990 முதல் எழுதி வருகிறார். இதுவரை 22 இலக்கிய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது ‘மெரெங்குஹ் லாங்கீட்’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு (1994/1995) பெர்டான இலக்கிய…

மலேசிய சீன இலக்கியம்: எளிய அறிமுகம். – லீ சூ சீ

(சீனக் குடியேறிகள் முதல் மலேசிய சீனர்கள் வரையிலானவர்களின் படைப்புகள்.) முதலாவதாக, ‘சீனர் மலேசிய இலக்கியம்’ (Chinese Malaysian Literature) என்னும் சொல்லாடலே, தற்போது பரவலாக புழக்கத்தில் உள்ள ‘மலேசிய சீன இலக்கியம்’(Malaysian Chinese Literature) என்னும் சொல்லைவிட மிக பொருத்தமானது என்பது என் தனிப்பட்ட கருத்து. காரணம் சீன மலேசியர்களால் படைக்கப்படும் இலக்கியம் கருத்தாக்கங்களாலும், அடிப்படைக்…

ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் : காலம் கடந்து கண்டெடுக்கப்பட்ட வைரம்.

தமிழ் நாவல்களை தீவிரமாக தேடிப் படிக்கும் வசகர்கள் முதல் விமர்சகர்கள் வரை சிறந்த தமிழ் நாவல்கள் என்று குறிப்பிடும் பட்டியலில் கட்டாயம் இடம் பிடிப்பது பா. சிங்காரத்தின் கடலுக்கு அப்பாலும் புயலிலே ஒரு தோணியும் ஆகும். பா. சிங்காரம் இவ்விரண்டு படைப்புகளை மட்டுமே தமிழ் இலக்கிய உலகுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இவ்விரண்டு நாவல்களின் தோற்றமும் அவை…