
வெய்யில் படியத் தொடங்கியதும் கடையின் கண்ணாடிச் சுவரில் படிந்திருந்த பனித்துளிகள் மெல்லக் கரையத்தொடங்கின. எதையோ மறந்துவிட்டோமா என நீலமலர் மங்கியிருந்த வெளிச்சூழலைக் கூர்ந்து பார்த்தாள். ஒரே ஒரு துளி மேலிருந்து கீழ் இறங்கி பனிப் போர்வையின் மேல் கோடிழுத்துச் சென்றது. நீலமலர் வெளிப்புறத்தில் இருந்திருந்தால் அதில் ஏதாவது வரைந்திருப்பாள். அவளுக்குப் பூக்களை வரைவது பிடிக்கும். சுலபமானதும்கூட.…