
ஐந்தடி அகலத்தில் நீளமாக இருக்கும் அந்தத் தாழ்வாரத்தின் பூத்தொட்டிகளில் கரும்பச்சை, இளம்பச்சை, செம்பச்சை என்று பலவண்ணப் பச்சைகளில் இருந்த இலைகளில் வெய்யில் நீண்டு படர்ந்திருந்தது. நீளநீளமான வெள்ளைக்கோடுகள் இருக்கும் இலைகள் நிறைந்த செடியின் ஓரமாக எனது நாற்காலியை நிறுத்திவிட்டு, தனது கைப்பெட்டியைத் திறந்து ஒரு பெரிய நீலநிறத் துணியை எடுத்து எனது கழுத்தைச் சுற்றிக் கட்டினான்…