கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்

*இந்தச் சிறுகதை பொதுமக்களின் / மாணவர்களின் வாசிப்புக்கு அல்ல. உளவியல் அறிந்தவர்கள் மட்டும் இக்கதையை வாசிக்கலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.


ஜீன்ஸிலேயே சிறுநீர் கழித்திருக்கிறேன். அதன் ஈரம்தான் என்னை எழுப்பியிருக்கவேண்டும். இல்லை நான் எழுந்திருக்கவில்லை. முனகுகிறேன். என்னால் அசைய முடியவில்லை. கண்களைக் கட்டியிருக்கிறார்கள். கை கால்களும் கட்டியிருக்கிறது. என்ன இது இப்படி ஒரு வாடை. குமட்டுகிறது. இது நிச்சயம் கழிவறையாகத்தான் இருக்கவேண்டும். என் முகமும் கழிவறைக்குழியில் தொங்கிக்கொண்டிருக்க வேண்டும். என் குமட்டலின் போது வெளிவந்த காற்று துர்வாடையாக என் முகத்தில் அறைந்தது. அவ்வளவு அருகில் என் முகம் இருக்கிறது.

என்ன நடந்தது. யார் இப்படி செய்தார்கள். கடைசியாக நான் எங்கிருந்தேன். எதற்காக நான். இது உண்மையிலேயே கழிவறைதானா..?

பேச்சு சத்தம் கேட்கிறது. இவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் புரியவில்லையே. சிரிக்கிறார்கள். என்னைத்தான் பார்த்து பேசுகிறார்கள். அப்படித்தான் நினைக்கிறேன். இவர்கள் மனிதர்கள்தானா..? நான் உதவிக்கு சத்தமிட வேண்டும். ம்…ம்…ம்..ம்ம்ம். வாய்க்கு நடுவில் துணி கட்டப்பட்டிருக்கிறது. முனக முடிகிறதே தவிர கதற முடியவில்லை.

புரிந்துவிட்டது. இது கழிவறையென்றால், நான் பழிவாங்கப்படுகிறேன். ஆமாம். இது பழிவாங்கள்தான். அதற்கான சரியான காரணம் என்னவென்று நான் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பழிவாங்களில் இருந்து நான் வெளிவர முடியும். நான் தப்பிக்கவேண்டும்.

யோசிக்கவேண்டும். எதற்காக இந்த பழிவாங்கள்.

அம்மா முதலில் நான் உன்னிடம்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். என்னை மன்னித்துவிடு. நாள் நினைவில்லாத அன்று நீயும் நானும் மட்டும்தான் வீட்டில் இருந்தோம். மழையாக இருந்தது. என்னால் டி.வி பார்க்க முடியவில்லை. ஹாலில் தனியே திறக்கப்படாத டி.வியை பார்த்துக் கொண்டிருந்தேன். நீ குளிக்கச்சென்றாய். அந்த டி.வியின் கறுப்பு திரையில் முதல் நாள் பார்த்திருந்த ப்ளூ பிலிம் எனக்கு தெரியத்தொடங்கியது.

அவளை நாற்காலியில் சாய்த்து அவன் மேலே அவன் ஊர்ந்துச்செல்கிறான். அவள் அவனிடம் என்னமோ சொல்கிறாள். அவன் சில நிமிடம் அப்படியே ஸ்தம்பித்து எதையோ யோசிக்கிறான். பின், என்னை திரும்பிப் பார்க்கிறான். எழுகிறான் . நேரே எழுந்து வந்து என்னை நோக்கி கையசைக்கிறான். டி.வி திரை மீண்டும் கறுப்பாகிப்போனது.

அம்மா அப்போதுதான் குளிக்கும் அறையில் இருந்து சத்தம் எனக்கு கேட்டது.  கொஞ்சம் கொஞ்சமாக குளியலறைக்கு வந்துக் கொண்டிருந்தேன். அம்மா நீ குளிக்கிறாய். அந்த சத்தம் இப்போது நின்றுவிட்டது. நானும் நின்றுவிட்டேன். உன்னிப்பாக கேட்டேன். இப்போது நீ மீண்டும் குளிக்கிறாய். கொஞ்ச நேரத்தில் நீ வந்துவிடுவாய் என தெரியும். இப்போது கழிவறையில் இருக்கிறேன். கழிவறையில் ஒரு நாற்காலியை வைத்து அதன் மேல் நின்று இன்னும் எக்கினால் குளியல் அறையை பார்க்கலாம். நாற்காலியை சத்தமில்லாமல் எடுத்து வைத்துவிட்டேன். அப்பாவுக்கு வேலை முடிய தாமதமாகும்.

நாற்காலியின் மேல் நின்று, சுவரை லாவகமாக பிடித்துக் கொண்டேன். தண்ணீர் சத்தம் வேகமாக கேட்கிறது. இப்போதுதுதான் நான் எக்கி உன்னை பார்க்க வேண்டும். உன்னால் என்னை கவனிக்க முடியாது. எக்கினேன்.

கழிவறை சுவரில் இருந்து தூசி கண்ணில் விழுந்தது. கீழே இறங்கிவிட்டேன். கண்களை திறக்க முடியவில்லை. கைகளால் கண்களை தேய்துக் கொண்டே நாற்காலியை சத்தமில்லாம் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன்.

அம்மா நீ வருவதற்குள் பழையபடி ஹாலில் போய் அமர்ந்து கொண்டேன். முழங்கால் தெரியும் படி நீ கைலி கட்டி நடந்துவந்து கொண்டிருந்தாய். என்ன நினைத்தாயோ தெரியவில்லை. நேரே என் அருகில் வந்தாய். என் கண்களை கவனித்தாய். என்னடா கண்ணு இப்படி சிவந்து போயிருக்கு என்று நீ கேட்டது எனக்கு பீதியை கொடுத்தது. கழிவறை உனக்கு ஏதும் சொல்லிவிட்டதா..?

ஒன்னுமில்ல, அரிச்சது, அதான் தேய்ச்சேன் என்றேன். அதுக்குன்னு இப்படியா தேய்க்கிறது என திட்டிக் கொண்டே நீ திரும்பினாய். நேத்துல இருந்து ஒரு மாதிரிதான் இருக்க என்று நடந்து கொண்டே நீ சொன்னாய். நிச்சயம் கழிவறைதான் இதனை உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும் எனப்பட்டது எனக்கு.

அம்மா என்னை மன்னித்துவிடு. என்னை கழிவறையிடம் இருந்து காப்பாற்றேன். எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. ஏதேதோ செய்கிறது எனக்கு.

இல்லை இது அம்மாவாக இல்லாவிட்டால்.. வேறு யார்.. ஆமாம் குமார் இருக்கிறான். இது அவன் வேலையாக இருக்குமோ..? குமார் வாயேன்.

நீதான் கழிவறை மூலமாக என்னை பலிவாங்குகிறாய். எனக்கு தெரிந்துவிட்டது. சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிட்டு போ.. இல்லையென்றால் அந்த வீடியோ காட்சியை எல்லோரும் அனுப்பிவிடுவேன்.

உனக்கு அந்த யோசனையை கொடுத்தது நான் தான். அது உனக்கான யோசனை அல்ல எனக்கான யோசனை. நீயும் ரீத்தாவும் காதலிக்கிறீர்கள்தான் ஆனால், நீங்கள் செய்த கருமத்தையெல்லாம் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமே. அதனால்தான் அப்படி செய்தேன். எனக்கும் ஆசை இருக்காதா சொல்லு குமார். எத்தனை ப்ளு பிலிம்ப்களை நாம் ஒன்றாக பார்த்திருப்போம். எத்தனை தோழிகளின் உடல்களை வர்ணித்திருப்போம். எத்தனை முறை உன் வீட்டு கழிவறையில் ஆளுக்கு ஒரு கையால் சுய இன்பம் செய்திருப்போம். ஆனால் காதல் என்று வந்ததும் காமத்திற்கு என்னைக் கூட்டுச் சேர்க்காதது உன் தவறுதான். நான் உன்னை மன்னித்துவிடுகிறேன். சீக்கிரம் வந்து என்னை அழைத்துப்போ. ப்ளூ பிளிம்களில் பார்த்ததையெல்லாம் ஒரு முறையாவது நேரடியாக பார்க்க தோன்றியது எனக்கு. பேசிப்பேசி உன்னை சம்மதிக்க வைக்க எனக்கு அதிக செலவானது ஐம்பது வெள்ளிதான். ‘கொண்டோம்’ உனது வழக்கமான செலவு என்பதால், அடுத்த நாளுக்கான பீருக்கும் அதனை தொடர்ந்து இரண்டு நாளுக்கான சிகிரெட்டுக்கும் நான் பொறுப்பு எடுத்திருந்தேன்.

ரீத்தாவை நீ அழைத்திருந்தாய். உன் வீட்டிலும் அவள் வீட்டிலும் ஆட்கள் வர மதியமாகும் என இருவரும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தீர்கள்.

ரீத்தா வந்தாள். நீயும் அவளும் தனியே வீட்டில் இருந்தீர்கள். நாம் திட்டமிட்டபடி உன் வீட்டு கழிவறையில் நான் காத்திருந்தேன். வழக்கம் போலவே ரீத்தாவிடம் நீ பேசிப் பேசி மூட் வந்ததும் அவளை படுக்கைக்கு அழைத்து போவாய். அப்போது நீ ஏதாவது பாடல் பாடுவாய். அதுதான் நான் தயாராகும் நேரம்.

நீ பாடினாய். நான் தயாரானேன்.

ரீத்தாவிப் முனகல் சத்தம் கழிவறைவரை கேட்டது. இப்போது நான் லாவகமாக கழிவறை கதவை திறந்து மெல்ல நடந்து நீங்கள் இருவரும் இருக்கும் அறைக்கு வந்தேன். வாசலை நோக்கி அவளின் உச்சந்தலை இருக்கிறது. அவள் மேல் நீ படுந்திருக்கிறாய். உன் கவனம் முழுக்க அவள் மீதே இருக்கும் படிதான் இருக்க வேண்டும். கொஞ்சமேகூட நீ தலை நிமிர்ந்து வாசலை பார்ப்பதை ரீத்தா கவனித்தால் சந்தேகம் கூட ஏற்படலாம் அவளுக்கு. எல்லாமே நாம் திட்டமிட்டது படிதான் நடந்தது. ஆனால், குமார் நான் திட்டமிட்டபடியும் ஒன்றை நடத்தினேன். எனது கைபேசியில் உங்கள் இருவரையும் மறைந்திருந்து ரசித்தவாறு பதிவு செய்தேன். இருவரும் நிர்வாணமாக ஒருவரை ஒருவர் இயக்கியும் ஒருவரால் ஒருவர் இயங்கியும் இருக்கிறீர்கள். ஆடைகள் அற்ற ரீத்தா என்னையும் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள்.

எனக்கும் இது போன்ற காதலி தேவை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இருந்தும் அதற்கு முன்பாகவே அவளை கைபேசியில் பதிவு செய்ய முடிவெடுதிருந்தேன். நிறைய நேரம் என் வீட்டிலும் ஆட்கள் இல்லாத பொழுதுகள் உள்ளன. ‘கொண்டோம்’ வாங்கும் கடையில் தமிழர்கள் இருப்பதில்லை. அந்த இந்தோனிசியாக்காரனுக்கு என்னையும் தெரியாது என் பொருட்டு யாரையும் தெரியாது. ரீத்தாவை வீடியோ எடுத்து உனக்கு தெரியாமல் அவளை அணுகலாம். அவளை என் வீட்டுக்கு வர வைக்கலாம். நீ என்ன குமார் செய்கிறாய். அவளை இதைவிட இன்னமும் கூட அனுபவிக்கலாம். அப்பறம் அவளுக்கு குமார் தேவையில்லை. நான் போதும். அவளின் கறுத்த மேனியில் சாம்பல் நிற அங்கங்களை இதைவிட இன்னும் ஈரமாக்கலாம்.

எனக்கும் ஒரு காதலி கிடைக்கும் வரை ரீத்தாவை பயன்படுத்தலாம்.

பத்து நிமிடம் வரை கூட உன்னால் நீடிக்க முடியவில்லை. என்ன ஆண் நீ.சுயஇன்பத்தின் போது என்னை தோற்கடித்தவனா நீ. நான் சந்தேகிக்கிறேன்.

இருவரும் மூச்சிரைக்க ஒருவர் மீது ஒருவர் இன்னமும் படுத்திருக்கிறீர்கள். இது நான் புறப்படும் நேரம். கைபேசியில் உங்கள் வீடியோவை ‘சேவ்’ செய்தவாரு மீண்டும் கழிவறைக்கு ஒழியச்சென்றேன்.

எப்போதும் உங்கள் உறவுக்கு பிறகு அவள் குளியல் அறைக்குத்தான் செல்வாள் இன்று மட்டும் என்ன ஆனதோ தெரியவில்லை. கழிவறைக்கு வருகிறாள். நீ அவளை தடுத்திருக்கவேண்டும். தவறவிட்டாய். அது உன் தவறுதான்.

அல்லது,

நிச்சயம் இது உங்கள் வீட்டு கழிவறையின் சூழ்ச்சியாகத்தான் இருக்கும். கழிவறைதான் அவளை சூட்சுமமாக அழைத்திருக்கிறது. இல்லையென்றால் நான் பதிவு செய்த வீடியோவை மீண்டும் விளையாடவிட்டு பார்க்கும் நேரம் அவள் கழிவறை கதவுக்கு அருகில் வந்திருக்க வாய்ப்பே இல்லை. கழிவறையின் கதவை அவள் திறக்கிறாள்; உங்கள் வீடியோவில் உங்கள் முனகல் கேட்கிறது. ரீத்தாதான் ஆக்ரோஷமாக சத்தமிட்டாள்.

என்னைப் பார்த்தவள் கத்தியதில்; பயந்து கைபேசியை கீழே போட்டுவிட்டேன். நீயும் நிர்வாணமாய் வந்து நிற்கிறாய். நீங்கள் இருவரும் நிர்வாணமாய் வந்தும் நான்தான் அப்போது கூனிக்குறுகிப்போனேன்.

குமார் நீயெல்லாம் ஒரு மனுஷனா..ச்சே.. உன்னையா நான் காதலிச்சேன்.. ச்சீ… என்று கூறியவள் உன்னை தள்ளிவிட்டு படுக்கையறைக்கு சென்றாள். நீயும் நானும் செய்வதறியாது நிற்கிறோம். கொஞ்ச நேரத்தில் அவள் ஆடையுடன் வெளியேறியிருக்கிறாள்.

நீதான் குமார், அந்த சம்பவத்தை மனதில் வைத்து இப்படி கழிவறையில் என்னை பழிவாங்குகிறாய். அந்த வீடியோவை பரப்பியது நான் இல்லை குமார் நம்பு. உடைந்த கைபேசியை கடையில் சரி செய்ய கொடுத்தேன். அந்த கடைக்காரன்தான் உங்கள் வீடியோவை பரப்பியிருக்கின்றான். அதனால்தான் ரீத்தா காணாமல் போனாள். உன் காதல் தேவ காதல் என்றால் நீ இந்நேரம் அவளை தேடி கண்டுப்பிடித்திருக்க வேண்டும். இல்லை, நீயும் எங்கேயாவது ஓடியிருக்க வேண்டும். இப்படி நீ என்னை பழிவாங்குவது முறையில்லை குமார். சீக்கிரம் வா. என்னை கூட்டிக்கிட்டு போ. ஒரு வாரத்திற்கு உனக்கு பீர் செலவும் சிகிரெட்டு செலவும் என் பொறுப்பு. வா குமார். இந்த வாடை எனக்கு குமட்டுகிறது.

என் முகம் எதன் மீதோ உரசுகிறது. இது நிச்சயம் மலமாகத்தான் இருக்கும். காய்ந்த மலம். கழிவறையில் இதைகூடவா கழுவாமல் என்னை பழிவாங்குவாய் குமார்.

ஒருவேளை இது மோகன் சாரின் வேலையோ.

பள்ளிக்கழிவறையில் அவரை அசிங்கமாக வரைந்தவன் நான் தானே. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்தது இப்போது அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. எவனோ ஒருவன், மோகன் சாருக்கு இதனை சொல்லியிருக்க வேண்டும். அவர்தான் இந்த கழிவறையில் என்னை பழிவாங்குகிறார். யார் சொல்லியிருக்க வேண்டும்.

ஆறுமுகம்…

இந்த மூஞ்சிக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை. ஆனாலும் சந்தேகிக்கப்பட வேண்டியவன்தான் இவன். கட்டிலில் இவனும் நானும் விளையாடும் போது விதையை அழுத்தமாக நசுக்கிவிட்டதால், ஓங்கி அறைந்திருக்கிறேன். அன்று முதல் இவன் என்னிடம் ஒட்டி நடப்பதில்லை. அவ்வபோது பாடம் படிக்க என் வீட்டுக்கும் வருவதில்லை.நானாக மூட் வந்து அவனை அழைத்தாலும், என்னமோ தெரியாதவன் போல போய்விட ஆரம்பித்தான். இவனுக்கும் மோகன் சார் மீது கோவம் இருந்தது. அதனால்தான் நான் செய்ததை இவனுக்கு சொல்லி; இவனையும் கழிவறைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். இப்போது அவன் என்னை பழிவாங்குகிறான். ஆறுமுகம் ப்ளீஸ். வந்து என்னை அழைத்து போ. இனி நீ எத்தனை அழுத்தமாக நசுக்கினாலும் உன்னை அடிக்க மாட்டேன். பொறுத்துக் கொள்கிறேன். சீக்கிரம் வா.

ஆறுமுகமாக இல்லாவிட்டால்… கேசவனாகத்தான் இருப்பான்.

இவனது தங்கை மீது நான் கைவைத்தது, அவளது தப்பு. நானாக சென்று அவளை தொடவில்லை. நானாக அவளை ஹோட்டலுக்கு அழைக்கவில்லை. நானாக அவள் ஆடைகளை அவிழ்க்கவில்லை. அவள்தான் வந்தாள்; அவள்தான் அழைத்தாள்; அவள்தான் அவிழ்த்தாள்; அவள்தான் ஆரம்பித்தாள். நான் அவளுக்கு இணங்கினேன் அவ்வளவுதான். அதற்குத்தான் கேசவன் பழிவாங்குகிறானோ. இது என்ன நியாயம் கேசவன். உன் தங்கையை நீ என்ன செய்தாய். எத்தனை பேரின் தங்கையை நீ செய்தாய். உன் தங்கை என்பதும், என்னை பழி வாங்கலாமா..? வேணி வேண்டுமானால் பழிவாங்கலாம்.

ஆமாம் வேணி…

அவளைத்தான் நானே அழைத்தேன். பல கடிதங்களை கொடுத்திருக்கிறேன். இரவு முழுவதும் காதல் கவிதைகளை காமம் கலந்து அவளின் மேனியெங்கும் தூவி அவளை உச்சமடைய செய்தேன். வழக்கமாக என் வீட்டுக்குத்தான் அழைப்பேன். அவள் கொஞ்சம் விஷேசம்;வெட்கம் என்பதால், நானே அவள் வீட்டுக்கு செல்லத் தொடங்கினேன். அதிக நாட்கள் எல்லாம் இல்லை. ஒரு வாரம் கூட முழுதாக ஆகவில்லை. அவளால் எனக்கு இரண்டு லாபம் கிடைத்தது.

லாபம் ஒன்று. கவிதைகளில் காமத்தை கலக்கும் கலை தெரிந்தது.

லாபம் இரண்டு. தொலைபெசியில் வெறும் சொற்கள் மூலமே கூட பேசிப்பேசி சுகத்தினை பகிரலாம்.

இரண்டு முறைக்கு மேல் அவளை தாங்க முடியவில்லை. முதல் உறவில் இருந்தே காதல், தெய்வீகம், கல்யாணம், முதல் குழந்தையின் பெயர் என நச்சரித்துவிட்டாள். விலகிவிட்டேன். அவள்தான் கல்யாணமாகி இரண்டு குழந்தை பெற்றுக் கொண்டாளே. இப்போது போய் அவள் எதற்காக என்னை பழிவாங்க வேண்டும். வேணி, உன்னை குறித்துதான் நான் யாரிடமும் பேசுவதில்லையே; பிறகு எதற்கு என்னை இப்படி பழிவாங்குகிறாய். வேண்டுமென்றால் ஒரு முறை உன்னை காம கவிதைகள் வழி அர்ச்சிக்கிறேன். என்னை காப்பாற்று.

மறுபடியும் எனக்கு மூத்திரம் வருகிறது. நனைந்து போன ஜீன்ஸை மீண்டும் நனைக்கிறேன்.

என்னால் மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை. யாரால் நான் பழிவாங்கப்படுகிறேன் புரியவில்லை. இப்படிப் பலிவாங்க முடியும் ஒருவர் சக்தி மிக்கவராகவே இருக்க வேண்டும். சக்தி மிக்கவர் என்றால்…

ஆமாம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறாள் காளி.

காளி. ஆடையற்று நின்றிருக்கும் கோர பற்கள் கொண்டவள். அவள் மீது அதிக பக்தி கொண்டவன் நான். வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில்தான் காளி மீது பக்திக் கொள்ளத்தொடங்கினேன். முதலில் அவளது திறந்த மார்பகங்களால் நான் ஈர்க்கப்பட்டாலும் பின்னாலில் அவள் எனது இஷ்ட தெய்வமாகிப்போனாள். ஒவ்வொரு முறையும் காளிக்கு மாலை போடும் போது அவளின் மார்புகளை உரசுமாறுதான் பூக்களை வைப்பேன். இது என்னமோ பார்ப்பவர்களுக்கு அவளின் மார்பகங்களை நான் மறைப்பதாகத் தெரிந்தாலும். அதனை தொடும் சுகம் பூக்களைவிட மென்மையான உணர்வை எனக்கு கொடுத்தது.

அப்போதுதான் கோவிலுக்கு ஒருவர் பெரிய காளி ஓவியத்தை அன்பளிப்பாக கொடுத்தார். கண் திறக்கப்படாத ஓவியம். பூஜைகள் சில செய்த பிறகுதான் காளிக்கு கண் வைக்க வேண்டுமாம். அதுவரை சீன நாளிதழில் அந்த ஆளுயர ஓவியம் சுற்றப்பட்டிருந்தது. பூஜைக்கு ஏற்ற நாள் வர இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. என்னால் பொறுமை காக்க முடியவில்லை. ஆளுயர காளி சிலையும் ஆடையின்றிதானே இருக்கும். முட்டிப்போட்டுக் கொண்டு நான் பார்த்து; தொட்டு; ரசித்த அந்த மார்பகங்களை எனக்கு சரி நிகராக நான் பார்க்க வேண்டும். நான் தான் முதலில் பார்க்க வேண்டும்.

நான் காளியின் குழந்தை என்று தொடங்கி பக்தன் என்று வளர்ந்து இப்போது காதலனாகியிருக்கிறேன். நான் காளியின் காதலன் ஆனேன். காளி உன் மீது உன் உடல் மீது எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. நான் உன் காதலன். என்ன செய்தாலும் நீ என்னை மன்னிக்கவேண்டும். நீயும் என்னை காதலிக்கிறாய் தானே…

மயான காளியாகவும்; பயங்கர சூலியாகவும் பார்க்கப்பட்டு பழக்கிய உன்னை உனக்கே வேறு மாதிரி காட்டிய காதலன் நான். உன் பெண்மையை உனக்கு புரியவைத்த காதலன் நான். எத்தனை முறை உன்னை அர்ச்சிக்கும்போது நீ மயங்கி வெட்கியிருக்கிறாய். உன் வெட்கத்தை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் காளி. சொல். நீதான் யாரிடமாவது காட்டியிருக்கிறாயா..? இல்லை. காதலன் வேண்டும் காளி. என் போன்று காதலன் வேண்டும் காளி.

கணவனை விட காதலனுக்குத்தானே பெண்ணுடம்பில் உரிமை அதிகம். என் உரிமை. காதலி காளியின் மார்பகங்களை நான் பார்க்க வேண்டும்.

யாரும் இல்லை. கோவிலில் காளிகள் மட்டும் இருக்கிறார்கள். ஒருத்தி நான் தொட்டு தொட்டு ரசித்தவள். தன் மார்புக்கு போட்டியாக பூக்களை சுமப்பவள் .இன்னொருத்தி புதியவள். ஆளுயரமானவள். யாரும் பார்த்திடாதவள்.

புதியவளை இப்பொழுதான் பார்க்க சரியான நேரம். சுவரோரத்தில் தலைக்குப்புற சாய்ந்திருந்தாள்.

அருகே செல்கிறேன். பழைய காளியையும் ஒரு முறை பார்க்கிறேன். அவளுக்கு இதில் பொறாமை ஏதும் இல்லையென்பதை உறுதி செய்தேன். அவள் மட்டும் மறுத்திருந்தால் உயர்ந்த காளியை பார்த்திருக்கமாட்டேன். சாய்ந்துக் கிடக்கும் காளியை நிமிர்த்தினேன். ஒரு கையால் காளியை சாய்த்து; மறு கையால் நாளிதழ் காதிகங்களை கிழிக்கிறேன்.

நீல வண்ணத்தில் மார்பு, வெள்ளை நிற மண்டையோடுகளைத்தாங்கி ஜொலித்தன. ஒரு கையில் தாங்கியிந்த காளியை பாரம் தாங்காமல் கீழே போட்டுவிட்டேன். சத்தமாகியது. பயந்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கழிவறைக்குள் ஒழிந்து கொண்டேன். கோவிலில் சிலர் வந்திருப்பது எனக்கு புரிந்தது. சந்தேகம் வராமல் இருக்க ; வராத மூத்திரத்தை முக்கி முக்கி வர வைத்தேன். பின் வெளியேறினேன். நினைத்தது போலவே என் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பாரேன் சாமி படமே சொந்தமா சாய்ந்திருக்கு சீக்கிரமே பூஜையை ஆரம்பிக்கனும்னு சாமி சொல்லாம சொல்லறா.. என்றார்கள். காளீ நீ என்னிடம் சொல்லாததையா அவர்களிடம் சொல்லிடப்போகிறாய். எனக்கு சிரிக்கத்தோன்றியது.

ஆனால்…

அன்று முதல் காளியுடன் எனக்கு முறிவு ஏற்பட்டது. ஒருவேளை சின்ன மார்பில் இருந்த ஈர்ப்பும் கிளர்ச்சியும் ஆளுயர மார்பில் இல்லாமல் போனதாலோ.

இப்போது அதற்கான சரியான நேரம் பார்த்திருந்து காளிதான் பழிவாங்குகிறாள். என் சந்தேகமெல்லாம் அவளை நோக்கிதான் மையமிடுகின்றன.

காளி. என் காதலி. மண்டையோட்டு சூளி. இங்கே வாடி.

காதலனை இப்படி பழிவாங்குதல் முறையோ சொல்லு. இத்தனை காலம் உன்னை மறந்திருந்தது தவறுதான். இனி நீதான் எனக்கு எல்லாம் வாயேன் காளி. சீக்கிரம் வாயேன். உன் மார்பில் சூழ்ந்திருக்கும் மண்டையோடுகளை கழட்டு. என் முகத்தினை அதில் பதிக்கிறேன். உன் திறந்த மார்புகளை என் தோளால் போர்த்துகிறேன். கையில் இருப்பதையெல்லாம் தூக்கியெறிந்துவிடு. காதலை தாங்கிப்பிடி. கண்ணில் இருக்கும் குரோதங்களை தூக்கியெறியலாம். காமத்தை விதைக்களாம்.

வருகிறாள்.

காளி வருகிறாள். எனக்கு மீண்டும் மூத்திரம் வருகிறது.


*Oedipus complex / Oedipal complex உளவியல் சிக்கலை இக்கதைக்கு ஆதாரமாகக் கொள்க.

8 comments for “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்

  1. December 1, 2013 at 8:53 pm

    என்ன வென்று சொல்வது…பயத்தே போனேன்,உங்கள் கதை…

  2. ஸ்ரீவிஜி
    December 2, 2013 at 1:56 pm

    ஓரான் பாமுக்’யின் என் பெயர் சிகப்பு என்கிற நாவல்- இந்த கோணத்தில்தான் ஆரம்பிக்கும். இங்கே உயிருள்ள ஒருவன். அங்கே உயிரற்ற ஒருவன். அருமை வாழ்த்துகள்.

  3. Kani Mozhi
    December 4, 2013 at 12:47 am

    Reality … Oru aanin unmaiyaane mugem … A real feeling/attitude of a guy … Arumai

  4. December 4, 2013 at 12:09 pm

    இந்த கதை மிக நேர்த்திய உள்ளது எனவே எனக்கு தோன்றுகிறது. முதல் முறை படித்ததும் சிறிது கலக்கமாக இருந்தது. மனம் பாதிக்க பட்டது என்று கூட சொல்லலாம். சிறிது இடை வெளி விட்டு மீண்டும் படித்தேன். என்னை விட அதிகம் பாதிக்கப்பட்டது கழிவறையில் கட்டுண்டு தவிக்கும் அந்த ஜீவன் தான் என உணர்த்து கொண்டேன்.

    எந்த ஆணும் பார்க்கும் முதல் நிர்வாணம் தன் தாயினுடையதாக தான் இருக்கும்.ஆண் குழந்தைகள் தன் தாயை முழுவதுமாய் பார்த்து தான் வளர்கிறார்கள். இது ஒரு காலக்கட்டத்திற்கு பின் தவிர்க்கப்படலாம். அனால் உண்மை என்னவோ அதுதான்.

    ஆண் , பெண் என எல்லாரும் நீல படம் பார்காமல் இல்லை. சிலர் மட்டுமே அதில் பாதிக்கப் படுகிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இப்படி கழிவறையில் கட்டுண்டு தவிக்கிறான். எதுவுமே எல்லை மீறினால் ஆபத்து தானே? .

    இளைஞன் தன் தாயை நிர்வாணமாக பார்க்க நினைக்கும் போது, நிர்வனத்தையே உடையாக தரித்து நிற்கும் காளியை கண்டு பரவசப்படுவதில் ஆச்சர்யமோ , அபத்தமோ எனக்கு தெரியவில்லை.

    நம் சமூதாயத்தில் தாய்மையை புனிதமாக்குகிறோம். எத்தனை தாய் உண்மையில் புனிதமானவர்கள் ? எது புனிதம் என எனக்கு புரியவில்லை. புனிதம் தாய்மைக்கு மட்டுமே சேருமா?

    மகன் கஞ்சா விற்றுக் கொடுக்கும் பணத்தில் நகை வாங்கி அணியும் தாயையும் நான் கண்டதுண்டு.

    நாம் எல்லாருமே வெளியில் நம்மை புனிதர்களாக காட்டிக்கொல்கிறோம். மற்றவற்றை கோச்சை என்கிறோம்.

    கழிவறையில் கட்டுண்டவன் நேர்மையாக தன் தவறுகளை உணர்கிறான்.

    அவன் கட்டுண்டு கிடப்பது கழிவறையில் அல்ல, தன் ஆழ் மனதில் தான். சீகிரமே கட்டு அவிழும் , கதவு உடைபடும்.

  5. Vigneswaran
    December 5, 2013 at 11:54 am

    Ithu anathu vayathinarum padikke tthakke Kathai yillei Nanbare.Virasemane Kattanggalai thavirthirukkelam.

  6. வல்லினம்
    December 5, 2013 at 12:20 pm

    இந்தச் சிறுகதை தொடர்பாக உருவான விவாதத் தொகுப்பு :
    http://vallinam.com.my/navin/?p=1350
    http://vallinam.com.my/navin/?p=1355
    http://vallinam.com.my/navin/?p=1361
    http://vallinam.com.my/navin/?p=1364
    http://vallinam.com.my/navin/?p=1369

  7. Mavis
    December 5, 2013 at 7:29 pm

    கதை மிகவும் எதார்த்தமாக உள்ளது. தானே உணர்ந்து அனுபவித்த நிஜங்கள், கற்பனைகளைத்தான் .. எழுதியிருக்கிறார் நினைக்கிறேன்.. காமக்குரோத்தால் சிரழிக்கப் பட்ட ம்னம் இதை விட கேவலமாக போகப்
    கூடியதே.

  8. Raj Theeban
    December 10, 2013 at 11:37 pm

    இலக்கியம் என்ற பெயரில் ஆபாசங்களை விதைக்க வேண்டாம்…..

Leave a Reply to Kani Mozhi Cancel reply