Category: சிறுகதை

கிருஷ்ணை

நான் தங்கியிருந்த ஹாஸ்டலின் வெளியே நீண்டிருந்த பச்சை மாமரத்தின் சிறு கிளையின் மேல் அமர்ந்து கொண்டு ஒரு கருங்குயில் கூவியது. அவ்வொலி மிக அருகில்தான் கேட்டது. முழு மாமரமும் தெரியும் ஜன்னலைக் கொண்ட அறை அது. நீண்டு வளர்ந்து பெருத்திருந்த மாமரக் கிளை மட்டும் என் அறையைத் தொடும் வரை வளர்ந்திருந்தது. அங்கே தான் அந்தக்…

வேம்படியான்

“வேப்டியான் கத சொல்லு தாத்தா,” என்றாள் அம்மு. இப்போதெல்லாம் இரவானால் பேத்திக்கு நான் கதை சொல்ல வேண்டியுள்ளது. நன்றாக வாயடிக்கவும் பழகியிருந்தாள். என்னிடம் கதைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், பேய்க் கதைகளைச் சொல்லி, அவளிடம் தேவையில்லாத பயத்தைப் புகுத்துவதில் எனக்கு அவ்வளவாக ஒப்புதல் இல்லை. பேய் என்பதை வேம்படியான் என்றே அவளுக்குப் பழக்கியிருக்கிறேன். என் அப்பா அப்படித்தான்…

வெள்ளம்

“சிவப்பு நிறத்துல ஒரு பைக் நிக்குது பாருங்க. அங்க நிப்பாட்டுங்க,” என்றான் சுதாகர். ஆட்டோ அவனை அனாதையாக நடுத் தெருவில் விட்டுவிட்டு அவனைச் சுற்றி அரைவட்டமிட்டுச் சென்றது. லேசான தூரல் மட்டுமே இருந்தது. தாமரைப்பூ போட்ட இரும்புக் கதவைத் திறந்து கொண்டு, யாரோ போட்ட மனித கழிவு போல நிற்க்கும் மஞ்சள் கட்டிடத்தை நோக்கி நடந்தான்…

மிருகம்

கோமதி என்ன சொல்கிறாள் என்பதே எனக்கு விளங்கவில்லை. அவள் கதறி அழுதபோது மூச்சுக்காற்று மிகையாகி ‘உய் உய்’ என்று கேட்டது. அவள் கோபமாக இருக்கிறாள் என்பது புரிந்தது. தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளை அழுகையினூடே கொட்டித் தீர்த்தாள். அப்படியானால் அவள் போப்பியைத்தான் திட்டுகிறாள். போப்பியிடம் என்னையும் என்னிடம் போப்பியையும் கெட்ட வார்த்தையில் திட்டுவது அவள் வழக்கம்.…

இ. ஆ. சி அல்லது ஆ. இ. சி

அந்தக் கதையின் போலிக் கதையை என்னால் எழுத முடியும். ஆனால், என்னதான் இருந்தாலும் போலி போலித்தானே. டேனியல் கிரேக் ‘ஜேம்ஸ் பாண்ட்’ திரையில் கட்டியிருக்கும் ஒமேகா கைக்கடிகாரத்தில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் தொடக்க விலை மலேசிய ரிங்கிட் முப்பதாயிரம். ஆனாலும், அந்த ஒமேகா கைக்கடிக்காரத்தை ‘மூடா டாட் காம்’ என்ற மலேசிய இணையச் சந்தையில்…

தேவனாம்பிய பியதசி

‘பௌத்தம் என்பது மாயமல்ல. அதை உங்கள் வாழ்வில் அனுமதித்த கணமே அற்புதங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது. நீங்கள் எந்தளவுக்கு அதன் சாரத்தை உள் வாங்குகிறீர்களோ அதற்கேற்ப உங்களிடம் மாற்றங்கள் நடக்கும். அதற்கு நானே சாட்சி’ ரூப்நாத்தில் கற்பாறையொன்றில் செதுக்கப்பட்டிருந்த கணவர் அசோகரின் செய்தியை வரிவரியாக வாசித்தார் ராணி வேதிதாதேவி. சமஸ்கிருதத்தோடு பாலியிலும் பிராகிருத மொழியிலும் அவருக்குப்…

பாபியின் தொழில் தர்மம்

“நம்மளாவது வாரத்துக்கு ஒரு வாட்டியாவது அவனுகளைப் பாக்குறோம். இந்த அர்த்தராத்திரில இப்பிடி ஒரு கூட்டம் முழிச்சுக்கிட்டு இருக்குறது அவனுகளுக்கு என்னைக்காவது தெரியுமா?” இப்போதுதான் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் அவனுகளைப் பார்த்துவிட்டு வந்திருந்தார்கள் செந்திலும் பாபியும். அவனுகள் என்பது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள மனிதர்கள். “அவனுகளுக்கு ஏண்டா தெரியணும்? நம்ம தலையெழுத்து இங்க கிடந்து சாகணும்னு…”  என்றான் கொட்டாவியை…

யானும் அவ்வண்ணமே கோரும்

“என்னைவிட நல்லவன் யாருமில்லை,” என்றேன். இதை ஏன் நானே சொல்கிறேன்? என்னைவிட்டால் வேறு யார் என்னை நல்லவன் என்று சொல்லமுடியும்? அண்ணனைத் தவிர. எனக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஏதாவது ஒரு விஷயத்தை மூன்று முறைக்கு மேல் கேட்டால் நானே உண்மையைச் சொல்லி விடுவேன். ஆழ்மனதில் சென்றோ அல்லது அடித்தோ கேட்க வேண்டிய அவசியமில்லை.…

முனி

எதிர்வீட்டுக்கு ஒரு நாயோடு அவர்கள் குடிவந்திருந்தார்கள். முதல் நாள் பால் காய்ச்சுவதற்கே முருகேசையும் லட்சுமியையும் அழைத்தார்கள். “சொந்த வீடா கட்டிப் பால் காய்ச்சறாங்க? வாடக வீட்டுக்கு அழப்பு வேறயா? அதுக்குப் போவோணுமா?” என்று கேட்டான் முருகேசு. “சொந்த வீட்டுல இருக்கறமுன்னு பீத்தாதீங்க. வர்றவங்க அலுப்பசிலுப்பமான ஆள் கெடையாது. பெரிய மாளிக மாதிரி ஊடு இருக்குதாம். எதோ…

சண்முகப்பிரியா

சண்முகப்பிரியா குறித்து நான் இதுவரை எனது எந்தச் சிறுகதையிலும் நாவலிலும் குறிப்பிட்டதில்லை. அவ்வளவு ஏன்… அனுபவங்கள் குறித்து மாங்கு மாங்கென்று எழுதிய எந்தக் கட்டுரையிலும் கூட அவள் தொலைதூரமாய் நிற்கும் மங்கிய பாத்திரமாகக் கூட வெளிபட்டதில்லை. சண்முகப்பிரியாவை நான் எப்படி அவ்வளவு எளிதாக மறந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது. என் மூன்று வயது மகளை…

வண்டி

நாச்சியாவிற்கு ஒரு கணம் நெஞ்சு அடைத்துவிட்டது. உணவகத்தின் பின்புறச் சமையல் கூடத்தில், மிளகாய் தூளை அள்ளிப் போட்டு நறுக்கியக் கோழித்துண்டுகளை அலுமினிய அகப்பையால் கிண்டிக் கொண்டிருந்தவளின் கைகள் சட்டென பிடியை விட்டன. முக்காடாக வேயப்பட்டிருந்தச் சேலைத்தலைப்பையை வாயில் பொத்தி, “யா ரஃபி, என்ன கொடுமையிது!” வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிறைமாதமாக வந்து நின்ற அவளைப் பார்க்கும்போது…

குத்தாங்கட்டை ரகசியம்

கோபால், ரெக்ஸ் தியேட்டரை ஒட்டி இருந்த ஒரு பெரிய ஆங்சானா மரத்தடியில் ‘இங்கே பெரட்டா ரொட்டி கிடைக்கும்’ என்று போர்டு தொங்கிய ஸ்டாலுக்குப் போனான். தியேட்டரில், ‘16 வயதினிலே’ திரைப்படம் காண்பிக்கப்படும் போஸ்டர் தெரிந்தது. அன்று, ஞாயிற்று கிழமையாதலால் காலை 11 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி இருந்தது போல. ஸ்டாலில் நிறைய விடலைப் பையன்கள்…

தொலைவில் எங்கோ

தொலைதூரத்தில் இருந்த பூமி என்னும் கோளில் இருந்து வந்து சேர்ந்த மனிதனைப் பார்ப்பதற்காக ஆபா என்னும் கோளில் வாழ்ந்த மக்களான ஆபிகள் நகர்ச்சதுக்கத்தில் பெருந்திரளாகக் கூடினார்கள். அவர்கள் எதிர்பார்த்து வந்த ஒரு நிகழ்வு அது. ஆகவே, ஒவ்வொருவரும் கூச்சலிட்டுக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் ஓசை அலையலையாக எழுந்தது. நகர்ச்சதுக்கம் மிகப் பெரிய கல்பீடம்…

கருப்பன்

எனக்கும் கருப்பனுக்கும் உறவு சுமூகமாக இருக்கப் போவதில்லை என்று முதல் நாளே தெரிந்துவிட்டது. வீட்டு வாசலிலேயே என்னை நோக்கி குரைத்துக் கொண்டு பாய்ந்து வந்தது. நல்ல வேளையாகக் கம்பி கதவு மூடியிருந்ததால், கதவை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். உள்ளிருந்து குரைத்துக் கொண்டு நின்றது. அப்பா வந்து அதட்டி உள்ளே விரட்டிவிட்டு பிறகு கதவைத் திறந்தார். அப்பா…

திருவேட்கை

01 லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான்.  வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து…