Category: சிறுகதை

ஒலிப்புதையல்

“சூரியன ரசிச்சது போதும் மாமா!” பானுதான் சொன்னாள். சட்டென திரும்பலாமா வேண்டாமா என நிதானித்தேன். இப்படி நிதானமாக அமர்ந்து காலை நேரச் சூரியனைப் பார்த்து பல நாட்களாகிவிட்டதென தோன்றியது. சரியாகச் சொல்வதென்றால் மூன்று வருடங்கள்.  ”சாப்பாடு ஆரிடப்போவுது… சீக்கிரம் வாங்க மாமா,” குரலில் அன்பிருந்ததால் சிரித்தபடியே மனைவியைப் பின் தொடர்ந்தேன். தமிழகத்துப் பெண். கிராமத்துக்காரி. சொந்தம்…

உப்பிலி

1 மேனேஜரிடம் முறையிட்டு நான்கைந்து நாட்களாகிவிட்டது. ஒன்றும் பதில் இல்லை. ஒருவேளை என் விருப்பத்திற்கு எதிராக அவர் முடிவு எடுப்பாரெனில் இங்கிருப்பதில் பயனில்லை. பேப்பர் போட்டுவிட்டு வேறிடம் பார்க்கலாம். ஒரு மணி நேரத்தில் அடுத்த வேலையை வாங்கிவிடலாம். ஆனால் இங்கே இருக்கும் வசதிகளாலும் பழகிய முகங்களாலும் அவ்வளவு எளிதில் விட்டுக் கிளம்பிட மனம் ஒப்பவில்லை. பதினைந்து…

அற்புதம்

அப்பாவின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வருகிறது. ஒரு மாதமாக டெல்லியிலிருக்கும் உறவினர் வீட்டிலிருந்து அதற்கான வேலைகளைச் செய்தோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பா மனு போட்டார். ஒரு அரசாங்கத்திற்கு எதிராக தனி மனிதர் போராடுவது கடினம். அதோடு வெற்றி பெறுவதென்பது அரிது என பல்வேறுவிதமாக சொல்லியபோதும்…

சிலுவை மரம்

“மக்கா, உனக்க அப்பன கடலுக்கு கூட்டிட்டு போனவனும் நான் தான், இப்ப என்னனா உன்னையும் கூட்டிட்டு போக சொல்லுதா உன் அம்ம” என்றவாறே வலையின் கிழிந்த பகுதிகளைத் தைத்துக் கொண்டிருந்தார். நெடுக்காக பாதி உடைத்த பிளேடை உதட்டால் கவ்வி கொண்டே அவர் பேசுவதை அவன் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். “நீயோ சின்ன பயலா இருக்க, உன்…

கோதுமை மணி

முட்டம் கிராமத்தில் இன்று மக்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. வழக்கத்திற்கும் மாறாக கடல் அலையின் உயரம் இன்று அதிகமாகவே இருந்தது. ஓயாதக் கடல் அலையும் கட்டித் தழுவும் அதன் உப்புக் காற்றும்தான் இம்மக்களுக்கு முதல் உறவு. அனைவரும் கடல் அலையைப் பார்த்தபடி கடற்கரை மணலில் அமர்ந்து சீமோனுக்காகக் காத்திருக்கிறார்கள். “சீமோன் மாமா வந்தாச்சா?” என்று…

நினைவின் மழை

மீண்டும் ஓர் மழைகாலம். இந்த முறை வேறொரு சாளரம். ஆண்டுக்கொருமுறை சாளரத்தின் வழியாகத் தெரியும் காட்சி மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. எங்கள் கல்லூரி அமைந்திருக்கும் கிண்டி சென்னையின் மத்தியப்பகுதியில் இருக்கும் சிறிய காடு என்றுதான் சொல்ல வேண்டும். கருமையான பெரிய தண்டுகளுடனான மரங்கள் செறிந்து நிறைந்த இடம். எப்போதும் இலைகள் விழுந்து செறிந்து மட்கிய…

ம் என்ற மரணம்

குளிரில் உறைந்தா; நெருப்பில் கருகியா; நீரில் மூழ்கியா? எப்படி நடக்க வேண்டும்? கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்கலாம், ஆனால் அவள் வீட்டின் முன் கிணறு கிடையாது. சுருக்கிட்டுக் கொண்டு மரத்தில் தொங்கலாம் ஆனால், அவள் வீட்டின் முன் மரம் கிடையாது. விஷம் குடிப்பவர்கள் உண்மையிலேயே வாழவே விரும்புகிறார்கள். சம்பவத்துக்கும் மரணத்துக்கும் அதிக கால இடைவெளி…

மேலே திறந்து கிடக்கிறது…

”ஒரு விந்தை!” என்று ராபர்ட் கோல்ட்மான் சொன்னார். கண்ணில் நுண்நோக்கியுடன் ஒரு கல்படிவத்தின்மேல் குனிந்திருந்த ராம்கோவிந்த் தலைதூக்கி புருவத்தை மட்டும் தூக்கினார். “இதைப்பாருங்கள்,” என ராபர்ட் கோல்ட்மான்  ஒரு சிறிய கல்லை நீட்டினார். அது ஒரு பெரிய சேற்றுப்படிவப் பாறையில் இருந்து உடைந்த கீற்று. மங்கலான  சிவந்த நிறத்தில் ஒரு சிப்பி போலிருந்தது. “படிமமா?” என்றபடி…

ஒருவரின் வாழ்க்கை முறை

நீ காத்திருந்தது கடல் நீருக்காகவா அலையும் மணலும்  இடைவெளியின்றி அசைகின்றன உனக்குத் தெரியும் இறுதியில் உடைவது கடல் நீரல்ல உன்னால் மறக்க இயலாது. பேரமைதியும் இளமையும் வனப்பும் பரிசுத்தமும் ஒருங்கே அமைந்தவள் அவள். பசுமையான மாணிக்கத்தின் தன்மையை ஒத்திருந்தாள் யூ சியாவ் யூ. உன்னால் அந்த ஜீவனை மறக்க முடியாது. அவள், தான் ஒரு பெண்…

ஆசிர்வாதம் ஸ்டூடியோஸ்

என் வாழ்நாளில் மகிழ்ச்சி என்ற ஒன்றை நான் எப்போதுமே  அறிந்திருக்கவில்லை. இளமையில் பசியோ வேதனையோ உடலில் தூலமாக  உணர்ந்ததைபோல அதை நான் உணர்ந்ததில்லை. சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்திருந்த தருணங்கள் உண்டு. கரிசல் காட்டின் அந்தியில் வானம் சிவக்கும்போது சில சமயங்களில். அதையும் சிறுவயதில் அச்சத்துடன்தான் கண்டிருக்கிறேன். மொத்த வானமும் தலைக்கு மேல் தீப்பற்றி எரிவதுபோல…

இன்துயில் கொள்க

அரை மணி நேரத்திற்கு முன்புதான், அண்ணா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அரை மணி நேரம் என்பது மிக துல்லியமாக எனக்குத் தெரிந்திருந்தது. அம்மா வீட்டிற்குள் நுழைந்தவுடன் நான் என் அறைக்கு மிகச் சாதாரணமாக நடந்து சென்று கதவை மூடிக் கொண்டேன். உள்ளே எத்தனை நேரம் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதைச் செல்பேசியைத் திறந்து பார்ப்பதிலும், சுவரில்…

காதுகளின் கல்லறை

“துர்க்கனவுகளைப் பேய்கள் திங்கட்டும்,” என்று சொன்னார் அவர். முதலில் அவர் தனக்குத்தானே பேசிக் கொள்கிறார் என்று தோன்றியது. சொல்லிவிட்டு என் பக்கம் திரும்பிப் புன்னகைத்தார்.  அது என்னிடம் சொல்லப்பட்டதுதான் என்று உணர்ந்து, கொஞ்சம் தயங்கி பதிலுக்குப் புன்னகைத்தேன். இரைச்சலான ஜாஸ் இசை அதிர்ந்து கொண்டிருந்தது. விதவிதமான மது வகைகள் தொடர்ந்து கலக்கப்பட்டு பல வண்ணங்களில் மதுக்கோப்பைகள்…

கருப்பலுவை

நாளை மறுநாள் நிஷா அக்காவின் திருமணம். அவள் என் நண்பனின் அக்கா என்பதால் நானும் அக்காவென்று அழைப்பேனே தவிர எங்களுக்குள் இரத்த உறவெல்லாம் இல்லை. ஆனால், நாங்கள் நல்ல நண்பர்கள். தன் வயதினரிடமோ அல்லது தன்னைவிட மூத்த வயதினரிடமோ பழகுவதற்குப் பெண்களுக்குக் கிடைக்காத சுதந்திரம் இளைய வயதினரிடம் பழகுவதற்கு எளிதாக கிடைத்து விடுகிறது. பெண் பிள்ளைகளைப்…

வடசேரிக்கரை தேவன்

கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை உலுக்கி ஓசை எழுப்ப ஆரம்பித்தான் தேவன். பனி மூடியிருந்த அமைதியான விடியற்காலையில் அந்தச் சங்கிலியின் ஓசையால் தடால் என எழுந்தமர்ந்த பாப்பியம்மாள், “ஞான் வருந்நு, எனிக்கி கொறச்சு ஒறங்ஙான் சமயந்தாடோ,” என்று கூறி மீண்டும் உறங்க முயற்சித்தாள். ஆனால், பாப்பியம்மாவைத் தேவன் விடுவதாகத் தெரியவில்லை. “ஹூம்ம், இவன் என்னெ ஒறங்கான் விடில்லா,”…

ஆடும் தேவி

துணுக்குற்று கண் விழித்த பொழுது, உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு. மிக உயரமான கட்டடத்திலிருந்து விழுந்ததால் அவ்வுணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். கனவுதான். ஆனால், உணர்ச்சி நிஜமானது. ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டது முதல் இப்படியான கனவுகள்தான் மூன்று மாதங்களாக வருகின்றன. ஆனால், மதிய நேரத்தின் இடைவெளி உறக்கத்திலும் இப்படியான கனவு வருவது வியப்புதான். உதட்டின் ஓரத்தில்…