
சன்னதி தெருவின் நான்காவது வீட்டை நெருங்கிய போது, “ஏட்டி, நாளான்னைக்கு பத்திர பதிவாக்கும். கேட்டிச்சா” என்ற சிவராமன் குரல் உள்ளிருந்து எழுந்தது. வேண்டுமென்றே உரத்து சொல்வது போல் செயற்கையாக இருந்தது அவன் குரல். அந்நேரத்தில் அவன் வீட்டிலிருப்பானென நான் ஊகித்திருக்கவில்லை. உள்ளே செல்லலாமா, வேண்டாமா என்ற இரட்டை மனதோடு வாசல் நடையை தாண்டினேன். உள்ளறையிலிருந்து வெளிபட்டவன்…