திற‌ந்தே கிட‌க்கும் டைரி

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 3

ஜிம் செட் ஒன்றை அப்பா வாங்கி வீட்டில் போட்ட‌தோடு ந‌ண்ப‌ர்க‌ள் குழு வீட்டிற்கு அடிக்க‌டி வ‌ர‌த்தொட‌ங்கிய‌து.உட‌ற்க‌ட்டின்மீது அதிக‌ம் ஆர்வ‌ம் கொண்டிருந்த‌ கால‌ம் அது.ப‌ள்ளிவிட்டு வ‌ந்த‌வுட‌ன் நானும் ச‌ர‌வ‌ண‌னும் உட‌ற்ப‌யிற்சி செய்ய‌த் தொட‌ங்கிவிவோம்.உட‌ற்ப‌யிற்சி செய்வ‌தில் ச‌ர‌வ‌ண‌ன் அதிக‌ம் ஈடுபாடு காட்டுவான்.அத‌ற்கு மேல் முடியாது என‌ ப‌லுவை நான் இற‌க்கும் போது அவ‌ன் அப்போதுதான் தொட‌ங்கிய‌து போல‌ வேக‌த்தை முடுக்குவான்.ச‌ர‌வ‌ண‌னுக்குத் த‌ன் கால்க‌ள் குறித்து தாழ்வு ம‌ன‌ப்பான்மை இருந்த‌து. உட‌லுக்கு ஏற்றார்போல் இல்லாம‌ல், மெலிந்த‌ கால்க‌ள் அவ‌னுக்கு. எப்ப‌டியும் அவ‌ற்றை ப‌ருக்க‌ச்செய்ய‌ வேண்டுமென்ப‌தில் தீவிர‌மாக‌ இருந்தான். அத‌ற்காக‌ எவ்வ‌ள‌வு மென‌க்கெட‌வும் த‌யாராக‌ இருந்தான்.சீன‌ர்க‌ளின் கால்க‌ள் பெருத்து இருக்க‌ ப‌ன்றி இறைச்சிதான் கார‌ண‌மென‌ ப‌ன்றி இறைச்சியைத் த‌ன‌துண‌வில் அதிக‌ம் சேர்த்துக்கொள்வான்.

எங்க‌ள் உட‌லில் ஓர‌ள‌வில் மாற்ற‌ம் ஏற்ப‌ட்ட‌தும் அள‌வில்லா ஆன‌ந்த‌ம் அடைந்தோம். கைக‌ள் ந‌ன்கு முறுக்கேறி இருந்த‌ன‌. எந்த‌ நேர‌மும் மொட்டைக்கைச் ச‌ட்டையுட‌ன் லூனாஸை உலா வ‌ர‌த்தொட‌ங்கினோம். ப‌ள்ளியிலும் ச‌ட்டையை ம‌டித்துவிட்டுக்கொண்டோம். மூச்சை இழுத்து த‌ம்பிடித்து நெஞ்சை தூக்கி ந‌ட‌ப்ப‌து ஒரு க‌தாநாய‌க‌னுக்குரிய‌ க‌வ‌ன‌த்தை எங்க‌ள் மீது ப‌ட‌ வைக்கும் என‌ அழுத்த‌மாக‌ ந‌ம்பிய‌ கால‌ங்க‌ள் அவை.சில‌ கால‌ங்க‌ளில் ப‌யிற்சியின் பிர‌திப‌ளிப்பு உட‌லில் ந‌ன்கு புல‌ப்ப‌ட‌த்தொட‌ங்கிய‌தும் திமிர் இன்னும் கூட‌த் தொட‌ங்கிய‌து. சில‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளைத் திட்ட‌மிட்டு ஏற்ப‌டுத்த‌ முய‌ன்றோம்.

மூன்றாம் ப‌டிவ‌ ப‌ள்ளி விடுமுறை தொட‌ங்கும் முன்பாக‌ ஏற்ப‌ட்ட‌ க‌ல‌வ‌ர‌ம்… (அதை க‌ல‌வ‌ர‌ம் என்றுதான் சொல்ல‌வேண்டும்)………. இடைநிலைப்ப‌ள்ளியில் இன்றும் நினைவு கூர்வ‌ர். தொட‌ர்ந்து 1 வார‌ம் ஆயுத‌ங்க‌ளோடு திரிந்த‌ கால‌ங்க‌ள் அவை. இ.எக்ஸ்.பைப் மோட்டாரின் கிய‌ர் ச‌ங்கிலியை ச‌ர‌வ‌ண‌ன் புதிய‌ ஆயுத‌மாக‌ எங்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்திருந்தான். ந‌ல்ல‌ நீள‌ம்.மெலிதாக‌க் கைக்குப் பிடிக்க‌ வ‌ச‌தியாக‌ இருந்த‌து. ச‌ண்டைக்கான‌ திட்ட‌த்தையெல்லாம் நானும் ச‌ர‌வ‌ண‌னும்தான் வ‌குப்போம். அத‌ன்ப‌டி ச‌பைக்கூட‌லில் அந்த‌ச் ச‌ண்டையை அர‌ங்கேற்ற‌ வேண்டுமென‌ முடிவுசெய்திருந்தோம். ச‌ர‌வ‌ண‌னுக்கு என‌து அடியில் ந‌ம்பிக்கை இருந்த‌து .3 வ‌ருட‌ங்க‌ள் சில‌ம்ப‌ம் ப‌ழ‌கியிருந்த‌தில் எதிரியை ஒரே குத்தில் வீழ்த்தும் உத்தியை ஓர‌ள‌வு அறிவேன்.

ச‌பைக்கூட‌ல் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. க‌ட‌ந்த‌ வார‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையைப்ப‌ற்றி ஒழுங்கு ந‌ட‌வ‌டிக்கை ஆசிரிய‌ர் கோப‌மாக‌ப் பேசிக்கொண்டிருந்தார். எல்லாவ‌ற்றுக்கும் கார‌ண‌ம் இந்திய‌ மாண‌வ‌ர்க‌ள் என்றார். எட்டிப்பார்த்தால் தொலைவில் நான் குத்த‌ வேண்டிய‌வ‌ன் வாயில் எதையோ மென்ற‌ப‌டி நின்று கொண்டிருந்தான். ச‌ர‌வ‌ண‌ன் காதில் கிசு கிசுத்தான்… ‘தோ பாருடா… எத‌ ப‌த்தியும் நினைக்காதே.த‌மிழ‌ன்னா கேவ‌ல‌மா?க‌றுப்பு தோலுன்னா எல‌க்கார‌மா? ஒரு குத்துதான்… ஒரே குத்துதான். அதோட‌ அவ‌ன் எழுந்திருக்க‌க் கூடாது. கூட‌ இருக்கிற‌துல்லாம் எலிங்க‌. ப‌ய‌ந்து ஓடிடுங்க‌. போன‌வார‌ம் ஒன்டியா வீட்டுக்குப்போன‌ த‌‌ன‌பால‌ என்னா சொல்லி அடிச்சானுங்க‌…விட்டுடாத‌…’

நான் ஒன்றும் பேசவில்லை. இது என‌க்குப் புதிதில்லை. அன்று நான் குத்த‌ வேண்டிய‌வ‌ன் என்னைவிட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு பெரிதாக‌ இருந்தான். அந்த‌ வ‌ருட‌ம்தான் அவ‌னுக்குக் க‌டைசி வ‌ருட‌ம். அவ‌ன் ப‌டிவ‌ம் ஐந்து. நான் மூன்று. அவ‌னை வீழ்த்த‌ வேண்டும். அதுவும் ஒரே குத்தில்.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 2

ச‌ர‌வ‌ண‌ன் என்றொரு ந‌ண்ப‌ன்…

‘நீங்க‌ எழுத்தாள‌ராக‌ யார் கார‌ண‌ம்?’, ‘இள‌ஞ்செல்வ‌ன் உங்க‌ளை எழுத்தாள‌ராக்கினாரா?’, ‘எப்ப‌டி நீங்க‌ எழுத‌ ஆர‌ம்பிச்சீங்க‌?’ எல்லா எழுத்தாள‌ர்க‌ளைப் போல‌வே நானும் இந்த‌க் கேள்வியைப் ப‌ல‌ த‌ர‌ம் ச‌ந்தித்துள்ளேன். என‌க்கு எழுத்தை அறிமுக‌ம் செய்த‌து என‌வோ இள‌ஞ்செல்வ‌ன்தான். ஆயினும் எழுத்தாள‌னுக்கான‌ அடிப்ப‌டை ப‌ண்பைப் போதித்த‌வ‌ன் என் ந‌ண்ப‌ன் ச‌ர‌வ‌ண‌ன்.

ச‌ர‌வ‌ண‌ன் மிக‌வும் ஆச்ச‌ரிய‌மான‌ ந‌ண்ப‌ன். ஒரு கைக‌ல‌ப்பில்தான் அவ‌னை நானும் என்னை அவ‌னும் அடையாள‌ம் க‌ண்டுகொண்டோம். ர‌த்த‌ம் ஒழுக‌ ப‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ ம‌லாய்கார‌ மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் த‌னித்து நின்றுகொண்டிருந்தான். அவ‌னிட‌ம் ப‌ய‌ம் இல்லை. இர‌த்த‌த்தைத் துடைக்கும் க‌ண‌த்தில் த‌ன்னை யாரேனும் தாக்க‌க்கூடும் எனும் எச்ச‌ரிக்கை உண‌ர்வு ம‌ட்டும் இருந்த‌து. அவ‌ன் அதுவ‌ரை ந‌ம்பிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ரும் தொலைவில் க‌ண்க‌ள் ம‌ட்டும் வெளித்தெரிய‌ நின்ற‌ன‌ர். முத‌ன்முதலாக‌ ஆயுத‌ம் எடுப்ப‌தின் ப‌த‌ற்ற‌த்தை உண‌ர்ந்தேன். இஷ்ட‌ப்ப‌டி வீச‌ அந்த‌க் க‌ட்டை அத்த‌னை தோதாக‌ இல்லை. ஆனால் அடுத்த‌வ‌னின் ப‌ய‌ம் ஒருவ‌கை த‌ன்ன‌ம்பிக்கையையும் திமிரையும் மூட்டிய‌து.

எல்லாம் முடிந்த‌பின் ச‌ர‌வ‌ண‌னிட‌ம் கேட்டேன்.

‘ஏன் ச‌ண்டை?’.

‘ப‌றைய‌ன்னு சொன்னான் அதான்…அத‌ சொல்ல‌ அவ‌ன் யாரு வ‌……….டி’

அந்த‌ நிமிட‌ம் நானும் ச‌ர‌வ‌ண‌னும் உயிர் தோழ‌ர்க‌ளாகிவிட்டோம். என்னைச் சார்ந்திருந்த‌ ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌மும் அவ‌னைச் சார்ந்திருந்த‌ ந‌ண்ப‌ர் வ‌ட்ட‌மும் கை குலுக்கிக்கொண்ட‌து. ஏற‌க்குறைய‌ 40 த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள் வெறுப்புக‌ள் அற்று ஒன்றிணைய‌ நாங்க‌ள் இருவ‌ரும் கார‌ண‌மாக‌ இருந்த‌தை இப்போதும் கூறி பெருமை ப‌டுவ‌துண்டு. அத்த‌னை கால‌மும் வேற்று இன‌த்து மாண‌வ‌ர்க‌ளின் புத்த‌க‌ப்பை சும‌க்க‌வும் அவ‌ர்க‌ளின் விர‌த‌ கால‌ங்க‌ளில் திருட்டுத்த‌ன‌மாக‌ உண‌வு வாங்கித்த‌ர‌வும் அவ‌ர்க‌ள் வீட்டுப்பாட‌ங்க‌ளைச் செய்வ‌த‌ற்கு உத‌வ‌வும் கேட்கும் நேர‌த்தில் ப‌ண‌ம் கொடுக்க‌வும் ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌ட்ட த‌மிழ் மாண‌வ‌ர்க‌ளின் கைக‌ளுக்கு முத‌ன்முதலாக‌ ஆண்மை வ‌ந்திருந்த‌து.

ப‌ள்ளி முழுதும் இது ஆச்ச‌ரிய‌த்தைப் ப‌ர‌ப்பியிருந்த‌து. த‌மிழ் மாண‌வ‌ர்க‌ள் ஒன்றிணைவ‌து அவ‌ர்க‌ள் க‌ன‌விலும் நினைக்காத‌ ஒன்று. அதிலும் மூன்றாம் ப‌டிவ‌த்தில் ப‌டிக்கும் முத‌ல் நிலை மாண‌வ‌னிலிருந்து க‌டை நிலை மாண‌வ‌ன் வ‌ரை ஒரே குழுவாகிக் கிட‌ந்ததும் ச‌ர்வ‌ சாதார‌ண‌மாக‌ ஐந்தாம் ப‌டிவ‌த்தில் ப‌யிலும் வேற்று இன‌ மாண‌வ‌ர்க‌ளை ஓட‌ ஓட‌ விர‌ட்டுவ‌தும் அவ‌ர்க‌ளுக்கு என்னையும் ச‌ர‌வ‌ண‌னையும் ந‌ன்கு அறிமுக‌ம் செய்திருந்த‌து.

ச‌ர‌வ‌ண‌ன் பெண்க‌ள் ம‌த்தியில் ஒரு க‌தாநாய‌க‌னாக‌வே வ‌ல‌ம் வ‌ந்தான். ச‌ண்டை வ‌ரும் கால‌ங்க‌ளில் முத‌ல் மாடியிலிருந்து அவ‌ன் கீழே குதித்து க‌ள‌த்தில் நிற்ப‌து அவ‌னைத் த‌னித்துக்காட்டிய‌து. அவ‌ன் ச‌ண்டையில் ஒரு நேர்மை இருந்த‌து. அவ‌னிட‌ம் வ‌ந்து முறையிடுப‌வ‌ர்க‌ளிட‌ம் நியாய‌ம் யார் ப‌க்க‌ம் என்ப‌தை ம‌ட்டுமே முத‌லில் பார்ப்பான். த‌மிழ‌ர்க‌ளை அவ‌ம‌திக்கும்ப‌டியான‌ சொற்க‌ள் இருந்தால் அன்று எங்க‌ளுக்குப் பாட‌ம் இல்லை என்று பொருள்.

ப‌ய‌ண‌த்தின் சுக‌த்தை முத‌ன் முத‌லாக‌ ச‌ர‌வ‌ண‌ன் என‌க்கு போதித்தான்.எங்க‌ளுக்கு இல‌க்கு அவ‌சிய‌ம் இல்லாம‌ல் இருந்த‌து.ப‌ள்ளி நாட்க‌ளில் எங்க‌ளின் க‌ண்க‌ளின் ப‌ட்ட‌ எந்த‌க்காட்சியும் வெள்ளி,ச‌னி கிழ‌மைக‌ளில் (கெடா மாநில‌த்தில் வெள்ளி ம‌ற்றும் காரிக்கிழ‌மையில் ம‌ட்டுமே ப‌ள்ளி விடுமுறை)ப‌ட‌க்கூடாது என்ப‌து ம‌ட்டுமே எங்க‌ளுக்குள் நாங்க‌ள் செய்துகொண்ட‌ ஒப்ப‌ந்த‌ம்.மோட்டாரில் ஏறி தூர‌ம் செல்ல‌ச் செல்ல‌ ஏற்ப‌டும் ப‌ர‌வ‌ச‌த்தை அனுப‌விக்கையில் நாங்க‌ள் பேசிக்கொண்ட‌து குறைவு.அப்போது எங்க‌ள் இருவ‌ரிட‌ம் இருக்கும் மொத்த‌த் தொகையே ப‌த்துவெள்ளியாக‌த்தான் இருக்கும்.மோட்டாருக்கு எண்ணை நிர‌ப்ப‌ 3 வெள்ளி.சாப்பிட‌ ஆளுக்கு 3 வெள்ளி.வீடு திரும்புகையில் ஆளுக்கு 1 வெள்ளி ஐஸ் க‌ச்சாங்.

பினாங்கு எங்க‌ள் ப‌ய‌ண‌ங்க‌ளில் முத‌ல் இல‌க்காக‌ இருக்கும்.லுனாஸிலிருந்து 20 நிமிட‌ங்க‌ள்.(ந‌ம‌து உயிரின்மீது ப‌ய‌ம் இல்லாம‌லும் அடுத்த‌வ‌ன் உயிரின் மீது இர‌க்க‌ம் இல்லாம‌லும் மோட்டார் ஓட்டினால்.)க‌ட‌லும் க‌ட‌ல் சார்ந்த‌ ப‌குதியும் ம‌ன‌துக்கு தெம்பைத்த‌ர‌க் கூடிய‌வை.ஒவ்வொரு நாளும் எங்கிருந்து எவ‌ன் வ‌ந்து அடிப்பான் என்ற‌ பாதுகாப்புக்குறித்தே சிந்தித்த‌ எங்க‌ளுக்குத் திற‌ந்த‌ வெளி பெரும் ம‌ன‌ அமைதியைக் கொடுக்கும்.இப்போது நினைத்துப்பார்த்தாலும் அது போன்ற‌ த‌ருண‌மெல்லாம் நானும் ச‌ர‌வ‌ண‌னும் நெடிய‌ மௌன‌த்தை அனும‌தித்த‌ கார‌ண‌ம் புரிய‌வில்லை.அது கொஞ்ச‌ம் ஆழ்ந்து சுவாசிக்க‌த் தேவைப்ப‌ட்ட‌ மௌன‌மாக‌ இருக்க‌லாம்.

அநேக‌மாக‌ எங்க‌ள் ப‌ய‌ண‌ங்க‌ளின் ப‌ட்டிய‌லில் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் ப‌குதி முக்கிய‌ இட‌ம் பிடித்துவிடும். ப‌ட்ட‌வ‌ர்த்தில் அத‌ற்கென்று த‌னி இட‌ம் இருந்த‌து.முன்பு அங்கு ‘ரூமா தாங்கா’ என‌ எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.இப்போது கொஞ்ச‌ம் மாறி ‘ஹாட்ட‌ல் தாய்’ என்றும் ‘ஹாட்ட‌ல் பாங்கோக்’ என்றும் எழுத‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ கேள்விப்ப‌ட்டேன். அது போன்ற‌ இட‌ங்க‌ளில் நுழையும் போது நான் த‌லை க‌வ‌ச‌ம் போட்டுக்கொள்வேன்.ச‌ர‌வ‌ண‌ன் எதையும் அணியாம‌ல்தான் வ‌ருவான். ‘உன்னை உன‌க்குத் தெரிஞ்ச‌ யாராவ‌து பாத்துட்டா’? என‌ ஒருத‌ர‌ம் அவ‌னைப் பார்த்துக் கேட்டேன். ‘உன‌க்கு என்னாடா இங்க‌ வேல‌ன்னு நான் அவ‌னைப் பார்த்து கேப்பேன்’ என்றான்.

கையில் 10 வெள்ளியை வைத்துக்கொண்டு பாலிய‌ல் தொழிலாளிக‌ளிட‌ம் விலை விசாரிப்போம். அவ‌ர்க‌ள் விலை அதிக‌ ப‌ட்ச‌ம் 50 ரிங்கிட்டைத் தாண்டிய‌தில்லை. விலை குறைப்பு ந‌ட‌க்கும். அவ‌ர்க‌ள் 40 வெள்ளிக்கு இற‌ங்க‌ மாட்டார்க‌ள். அந்த‌ ச‌ம்பாஷ‌னையின் நீள‌ம் எங்க‌ளுக்கு அதிக‌ம் தேவைப்ப‌ட்ட‌து. ச‌ர‌வண‌ன் மொழியில் சொல்வ‌தென்றால் ‘உருவ‌த்தை ந‌ன்கு ம‌ன‌தில் ப‌திய‌ வைத்துக்கொண்டால் வீட்டிற்குச் சென்று இல‌வ‌ச‌மாக‌வே உற‌வு கொள்ள‌லாம்.’

சில‌ இட‌ங்க‌ளில் ‘பாப்பா ஆயாம்’எங்க‌ளை நெருங்க‌ விடுவ‌திலை.ப‌ண‌ம் வைத்திருப்ப‌வ‌னின் வாடையை அவ‌ர்க‌ள் ந‌ன்கு அறிந்து வைத்திருந்த‌ன‌ர். ஏதாவ‌து ஒரு விடுதியில் ரிட்டைய‌ர் ஆகும் வ‌ய‌தில் இருக்கும் பாலிய‌ல் தொழிலாளியிட‌ம் அம‌ர்ந்து அதிக‌ நேர‌ம் பேசுவோம்.அவ‌ர் அளிக்க‌க்கூடிய‌ சேவை குறித்து விளாவாரியாக‌ விசாரிப்போம்.அவ‌ர் த‌ர‌க்கூடிய‌ விள‌க்க‌ம் அன்று நாங்க‌ள் பேசி ம‌கிழ‌ போதுமான‌தாக‌ இருக்கும்.

-தொட‌ரும்

திற‌ந்தே கிட‌க்கும் டைரி … 1

‘உன்னைப்ப‌ற்றி என‌க்குத்தெரியாதா?’ என‌த் தொட‌ங்கும் மொட்டைக் க‌டித‌ங்க‌ளும் ஆபாச‌ப் பேச்சுக‌ளும் ஒவ்வொரு முறையும் என்னை வ‌ந்து அடைகையில் ஒருவித‌ ஆச்ச‌ரிய‌மும் கேள்வியுமே என்னை அலைக்க‌ழிக்கிற‌து. அதைவிட‌ ஆச்ச‌ரிய‌மாய் ‘நீ அந்த‌ எழுத்தாள‌ன்கிட்ட‌ கெஞ்சினாயாமே’ .. ‘பிச்சை எடுத்தாயாமே’ என‌ கூறும்போது ஆமோதிப்பத‌ற்கான‌ மௌன‌த்தைத் த‌விர‌ என்னிட‌ம் வேறு சொற்க‌ள் இல்லை. கூட‌வே ம‌ன‌ம், என‌து ப‌ள்ளி ப‌ருவ‌த்தை நோக்கி ந‌க‌ர்கிற‌து. அது ஏற்ப‌டுத்தும் ப‌ர‌வ‌ச‌மும் சுத‌ந்திர‌மும் ஓர் அழ‌கிய‌ க‌ற்ப‌னையாய் மீண்டும் மீண்டும் ம‌ண்ணில் ச‌ரிகையில், ஒரு க‌விதை இர‌க‌சிய‌மாய் பிற‌ந்து ம‌றுக‌ண‌மே அழிகிற‌து.

என்னைப் ப‌ற்றி ம‌றைப்ப‌த‌ற்கும் பாதுகாப்ப‌த‌ற்கும் எந்த‌ப் பிம்ப‌ங்க‌ளையும் நான் சேர்த்து வைக்காத‌ ஒரு கால‌க‌ட்ட‌த்தில் எதை அழிக்க‌ இத்த‌னை எரிச்ச‌ல்க‌ளும் வ‌சை மொழிக‌ளும் என‌வும் தெரிய‌வில்லை. எழுத்தாள‌னின் முத‌ல் தோல்வியே அவ‌ன் ஏற்ப‌டுத்த‌ விரும்பும் பிம்ப‌த்திலும் ச‌முதாய‌ம் அவ‌னுக்கு ஏற்ப‌டுத்தி கொடுத்திருக்கும் பிம்ப‌த்தைக் காப்பாற்றுவ‌திலுமே தொட‌ங்குகிற‌து என‌ இன்ன‌மும் நான் ந‌ம்புகிறேன்.

த‌ன்னைச்சுற்றி எழுப்ப‌ப்ப‌ட்டிருக்கும் பிம்ப‌த்தை உடைத்தெரிவ‌தில்தான் தொட‌ங்குகிற‌து எழுத்தாள‌னின் முத‌ல் வெற்றி. அது எல்லோராலும் இய‌ல்வ‌தில்லை. ச‌மூக‌ ம‌திப்பு த‌ரும் க‌வ‌ர்ச்சிக்கு அடிமையாவ‌து எல்லோரையும் போல‌ எழுத்தாள‌னுக்கும் இன்ப‌மான‌தாகிற‌து.

என‌து க‌விதைக‌ள் என்னைச்சுற்றி விழும் பிம்ப‌ங்க‌ளைக் க‌ளைக்க‌ முய‌லும் அர‌சிய‌ல் நிர‌ம்பிய‌துதான். அப்ப‌டி இருக்கையில் ஒரு ந‌ண்ப‌ரின் மின்ன‌ஞ்ச‌ல் இப்ப‌டி இருந்த‌து, ‘உன்னைப்ப‌ற்றி ஒருநாள் இந்த‌ உல‌குக்குத் தெரிய‌வ‌ரும்.’ (இது கோப‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌து. இதையே கோப‌த்தின் உஷ்ண‌த்தைப் புகுத்தாம‌ல் வாசித்தால் பாராட்டுபோல‌ அமைந்துவிடும் என்ப‌து வேறுவிஷ‌ய‌ம்.) இந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் ஒருவ‌கை அச்ச‌த்தையும் ப‌த‌ற்ற‌த்தையும் ஏற்ப‌டுத்திய‌து. இந்த‌ உல‌குக்கு ஏதாவ‌து தெரிய‌கூடாது என‌ ப‌த்திர‌ப்ப‌டுத்தியிருக்கிறேனா என‌ ஒருத‌ர‌ம் சிந்தித்துப் பார்த்தேன். அந்த‌ச் சிந்த‌னையின் முறையில்லாத‌ பாய்ச்ச‌லின் கோர்வை இது.

இது வெறும் நினைத்துப்பார்த்த‌ல்தான். எந்த‌க்க‌ல‌ப்ப‌ட‌மும் இல்லாம‌ல் நினைத்துப்பார்த்த‌ல். எங்கிருந்து எழுத்தும் இல‌க்கிய‌மும் தொற்றிக்கொண்ட‌து என்ப‌தையும் மொழியை வைத்து பிழைப்பு ந‌ட‌த்தும் கூட்ட‌த்தில் உழ‌ன்று மீண்ட‌ க‌தையையும் இன்றைக்கு இல‌க்கிய‌ம் என‌ நாடிப்போவோரை இந்த‌க்கூட்ட‌ம் எப்ப‌டி வ‌ழி ம‌றிக்கிற‌து என்ப‌தையும் என் வாழ்வில் ச‌ந்தித்த‌ இல‌க்கிய‌வாதிக‌ள் ப‌ற்றியும் சொல்ல‌

முய‌ல்கிறேன். அவ்வ‌ள‌வுதான்.

-தொட‌ரும்