கட்டுரை/பத்தி

பேய்ச்சி: புனைவாய்வு (ஆதித்தன் மகாமுனி)

ஓர் எழுத்தாளனின் சுவைக்கேற்ப உருவாவதல்ல நாவல். அது எழுத்துகளோடு வாழபோகும் ஒரு வாசகனின் குறுகிய கால குடும்பம். அவன் வெளியேயும் உள்ளேயும் நின்று கதாபத்திரங்களோடு பயணிக்கப் போகிறவன். அவனே அந்த கதைக்கு நாயகனாகவும் மாறலாம் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப கதை மாந்தர்களுக்கு உருவம் கொடுக்கலாம். ஆனால், எழுத்தாளன் என்பவன் தன் கதையைக் கற்பனையாகவும் அல்லது உண்மையைக் கற்பனை சுவையோடு ததும்ப சமைப்பதே ஆகும். தான் பார்த்த, படித்த, அனுபவித்த எல்லாவற்றையும் வாசகனுக்கு அதே உணர்ச்சிகளோடு கொண்டு வந்து சேர்ப்பது என்பது நாவலின் தனிச் சிறப்பு.

Continue reading

பேய்ச்சி: தாய்மையும் பேய்மையும்

வாசகனுக்குக் கலை இலக்கியத்தின், வாசிப்பின் பெறுபயன் என்பது வெறும் உணர்வு கடத்தலாக இருக்கும் என்று எண்ணி; உணர்வினைக் கடத்துகின்ற எல்லா எழுத்துப் பிரதிகளும் கலை இலக்கியமே என நான் தடுமாற்றம் அடைந்ததுண்டு. ஆனால், உண்மை கலையினை வேறுபடுத்தும் நுண்ணிய கூறுகள் உள்ளன என்பது தொடர்ந்து வாசிப்பில் துலங்குகிறது.

Continue reading

பேய்ச்சி: ஒரு வாசிப்பு அனுபவம் (காளிபிரஸாத்)

காளிப்ரஸாத்

தமிழகத்திலிருந்துக் கிளம்பி மலாயா சென்ற புலம் பெயர் மக்களின் வாழ்க்கையைத் தலைமுறை வாரியாக வருடக்கணக்குளோடு அளித்த நாவல்கள் ஏற்கனவே மலேசியாவில் எழுதப்பட்டிருக்கின்றன. அதை எழுதியவர்களில் சீ.முத்துச்சாமி முக்கியமானவர்.

Continue reading

நீலகண்டப் பறவையைத் தேடி…

‘உன்னுள் விதை முளைக்கிறது சோனா! இன்னுங் கொஞ்சம் காலத்தில் நீ வாலிபனாகிவிடுவாய். இப்போது உனக்குப் புரியாத ரகசியம் அப்போது புரிந்துவிடும். இன்னும் பெரியவனானதும் இருபக்கமும் கரையில்லாத ஆற்றுக்குள் மூழ்கி விடுவாய் நீ. அப்படி முழுக முடியாவிட்டால் கரையில் அந்த ரகசியத்தைத் தேடுவாய். தேடிக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என் மாதிரியே பைத்தியமாகிவிடுவாய்’

Continue reading

இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்!

2020எப்போதும் சொல்வதுதான். எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. பிரகாசமான முகத்துடன் என்னை நீங்கள் அன்று தரிசிக்கலாம். கடந்து சென்ற ஒரு வருடத்தை புதிய ஆண்டில் நின்றுகொண்டு அசட்டையாக எட்டிப்பார்ப்பதில் ஒரு ‘திரில்’ உண்டு. ஏதோ அதெல்லாம் யாருக்கோ நடந்ததுபோல. அப்படிப் பார்க்கும்போது, பெரும்பாலும் மகிழ்ச்சியும் துக்கமும் உலகியல் சார்ந்த நிகழ்வுகளில் குவிந்ததில்லை. பணித்துறை, கல்வித்துறை, பொருளாதாராம், குடும்பம் என எதில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களையும் நான் பொருட்படுத்திப் பதிவிட்டதில்லை. ஆனால் என் தாய்மாமாவின் மரணம் என்னை இம்முறை அதிகமே தடுமாற வைத்தது. மூளையில் மூன்று புற்றுக்கட்டிகள். அவற்றைக் கண்டுப்பிடித்த முதல் நாளில் இருந்தே காப்பாற்ற முடியாது என உள்ளூர அறிந்த நிலையிலும் ஏதோ நம்பிக்கையில் வைத்தியம் செய்ய அலைந்துகொண்டிருந்தேன்.

Continue reading

கலைஞனின் தும்பிக்கை

IMG-20191008-WA0037‘அக்கினி வளையங்கள்’ சை.பீர்முகம்மதுவின் இரண்டாவது நாவல். 2009இல் ‘தென்றல்’ வார இதழில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற தொடர்கதை இது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாவலாகப் பதிப்பிக்க முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்தக் கதையின் போக்கில் மாற்றமும் செறிவும் அடைந்து நூல்வடிவம் பெற்றுள்ளது.

Continue reading

சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2019/10/100-00-0001-448-5_b.jpgஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை உருவாக்கி மெல்லதிர்ச்சியைக் கொடுக்கும் சிறுகதைகளைப் புனைந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் வானம்பாடி கவிஞர்களால் ஈர்க்கப்பட்டவர். அவர்கள் போல கவிதைகள் புனைந்தவர். அவர் கதைகளில் மையமாக ஒரு படிமத்தை உருவாக்கி, அந்தப் படிமத்தை வந்தடையும் ஒரு திருப்பம் நிகழும் சம்பவத்தைக் கதையின் முடிவாக்கும் உக்தியை அதிகம் கையாண்டார். அது பரப்பிலக்கிய பாணி. அது இயல்பாக அன்றைய வாசகர்களை ஈர்த்தது. எழுபதுகளில் மலேசியாவில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளரும் அவரே. இவர்களைப் போல சை.பீர்முகம்மதுவும் ஜெயகாந்தனால் ஈர்க்கப்பட்டு புனைவிலக்கியத்தில் ஈடுபட்டவர்தான்.

Continue reading

சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்

1567261962_tmp_சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை.

வல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன. விருதென்பது எல்லா விமர்சனங்களையும் அழித்துவிட்டு வழங்கப்படும் ஒன்றல்ல. ஓர் ஆளுமையை அவர்மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுடன் அணுகி; அவற்றுடனேயே அவரை ஏற்றுக்கொண்டு கௌரவிப்பது. அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால், விருது பெறும் துறையில் ஒருவரது ஆளுமை மேம்பட்டு இருக்க வேண்டும். சை.பீர்முகம்மதுவின் ஆளுமை அத்தகையதுதான் என்பது எங்களின் பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.

Continue reading

மலாய் புராணக் கதைகள் ஓர் அறிமுகம்

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2019/06/64659026_2277118272324903_6984702659747905536_n.jpgஎல்லாத் தொன்ம நிலங்கள் போலவே மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், புருணை, போன்ற நாடுகளை இந்த மலாய் தீவுக்கூட்டங்களில் உள்ளடக்கலாம். மன்னர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இருந்த எழுத்து அறிமுகம் பாமரர்களை எட்டாத வரை அவர்கள் மத்தியில் பலநூறு கதைகள் தங்களின் அடுத்தத்த தலைமுறைகளுக்கு வாய்மொழியாகவே கடத்தப்பட்டன.

Continue reading

இமையம் சிறுகதைகள்: அறியப்பட்டதை ஆவணமாக்கும் கலை

(1)

imayam cover“தலித்தியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. பெண்ணியம் என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பது குறித்தெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கோட்பாடுகள் என்னை எழுதத் தூண்டவில்லை. நிஜ வாழ்க்கைதான் எழுதத் தூண்டியது.”

இது ஒரு நேர்காணலில் வெளிப்பட்ட எழுத்தாளர் இமையத்தின் குரல். அவருடன் தொடர்ந்து உரையாடலில் இருப்பவன் என்ற முறையில் இந்தக் குரல்தான் அவரது படைப்பு மனதின் மையமும் என அறிவேன்.

Continue reading