கட்டுரை/பத்தி

கலைஞனின் தும்பிக்கை

IMG-20191008-WA0037‘அக்கினி வளையங்கள்’ சை.பீர்முகம்மதுவின் இரண்டாவது நாவல். 2009இல் ‘தென்றல்’ வார இதழில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற தொடர்கதை இது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாவலாகப் பதிப்பிக்க முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்தக் கதையின் போக்கில் மாற்றமும் செறிவும் அடைந்து நூல்வடிவம் பெற்றுள்ளது.

Continue reading

சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2019/10/100-00-0001-448-5_b.jpgஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை உருவாக்கி மெல்லதிர்ச்சியைக் கொடுக்கும் சிறுகதைகளைப் புனைந்தார். எம்.ஏ.இளஞ்செல்வன் வானம்பாடி கவிஞர்களால் ஈர்க்கப்பட்டவர். அவர்கள் போல கவிதைகள் புனைந்தவர். அவர் கதைகளில் மையமாக ஒரு படிமத்தை உருவாக்கி, அந்தப் படிமத்தை வந்தடையும் ஒரு திருப்பம் நிகழும் சம்பவத்தைக் கதையின் முடிவாக்கும் உக்தியை அதிகம் கையாண்டார். அது பரப்பிலக்கிய பாணி. அது இயல்பாக அன்றைய வாசகர்களை ஈர்த்தது. எழுபதுகளில் மலேசியாவில் அதிகம் அறியப்பட்ட எழுத்தாளரும் அவரே. இவர்களைப் போல சை.பீர்முகம்மதுவும் ஜெயகாந்தனால் ஈர்க்கப்பட்டு புனைவிலக்கியத்தில் ஈடுபட்டவர்தான்.

Continue reading

சை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்

1567261962_tmp_சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை.

வல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன. விருதென்பது எல்லா விமர்சனங்களையும் அழித்துவிட்டு வழங்கப்படும் ஒன்றல்ல. ஓர் ஆளுமையை அவர்மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுடன் அணுகி; அவற்றுடனேயே அவரை ஏற்றுக்கொண்டு கௌரவிப்பது. அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால், விருது பெறும் துறையில் ஒருவரது ஆளுமை மேம்பட்டு இருக்க வேண்டும். சை.பீர்முகம்மதுவின் ஆளுமை அத்தகையதுதான் என்பது எங்களின் பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.

Continue reading

மலாய் புராணக் கதைகள் ஓர் அறிமுகம்

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2019/06/64659026_2277118272324903_6984702659747905536_n.jpgஎல்லாத் தொன்ம நிலங்கள் போலவே மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், புருணை, போன்ற நாடுகளை இந்த மலாய் தீவுக்கூட்டங்களில் உள்ளடக்கலாம். மன்னர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இருந்த எழுத்து அறிமுகம் பாமரர்களை எட்டாத வரை அவர்கள் மத்தியில் பலநூறு கதைகள் தங்களின் அடுத்தத்த தலைமுறைகளுக்கு வாய்மொழியாகவே கடத்தப்பட்டன.

Continue reading

இமையம் சிறுகதைகள்: அறியப்பட்டதை ஆவணமாக்கும் கலை

(1)

imayam cover“தலித்தியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. பெண்ணியம் என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பது குறித்தெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கோட்பாடுகள் என்னை எழுதத் தூண்டவில்லை. நிஜ வாழ்க்கைதான் எழுதத் தூண்டியது.”

இது ஒரு நேர்காணலில் வெளிப்பட்ட எழுத்தாளர் இமையத்தின் குரல். அவருடன் தொடர்ந்து உரையாடலில் இருப்பவன் என்ற முறையில் இந்தக் குரல்தான் அவரது படைப்பு மனதின் மையமும் என அறிவேன்.

Continue reading

விருது உரை

nigaz-06-600

கனடா இலக்கியத் தோட்ட விருது வழங்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லை. விசா முதன் விண்ணப்பத்தில் நிராகரிக்கப்பட்டிருந்தது. சில கூடுதல் தகவல்களை இணைத்து மீண்டும் முயன்றால் கிடைக்கும் என்றார்கள். ஆனால் நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் செல்ல முடியும். 10ஆம் திகதியுடன் பள்ளி தவணை விடுமுறையும் முடிவதால் கூடுதல் விடுப்பெடுப்பதில் சிக்கல்.  எனவே எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கி உரையை மட்டும் அனுப்பினேன். அது அங்கு வாசிக்கப்பட்டதை வீடியோவில் பார்த்தேன். அது கீழே.

Continue reading

பூங்கோதையை யாருக்காவது தெரியுமா?

பூங்கோதை படம்பூங்கோதை என்பவரை அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்காது. நானும் அவரை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அழைத்து கலை இலக்கிய விழாவுக்கு வருவதாகச் சொன்னார். அப்படி நிறைய பேர் அழைத்து முன்பதிவு செய்வதுண்டு. மறுநாளும் அவர் அழைப்பு வந்தது. நிகழ்ச்சிக்கு வருவதில் சிக்கல் இருப்பதாகவும் தனது தம்பி சம்மதித்தால் மட்டுமே அவரும் இணைந்து வர முடியும் என்றார். நிகழ்ச்சிக்கு முன்பு அவரது அழைப்புகள் பலமுறை வந்தன. அனைத்துமே தன்னால் வர முடியுமோ முடியாதோ என்ற தவிப்புகள் அடங்கியவை. நான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இருக்கும்போது அவசியமற்ற அழைப்புகளில் எரிச்சல் அடைவதுண்டு. அழைப்பை எடுக்க தவிர்த்தபோது வட்சப்பில் குரல் பதிவு அனுப்பினார். ‘அன்புள்ள நவீன் சார்’ என தொடங்கியது அந்தக் குரல் பதிவு. தொடர்ந்து அதுபோன்ற பதிவுகள் வந்தன. நிறுத்தி நிதானமாகப் பேசுபவராக இருந்தார். நீளமான குரல் பதிவுகளாக இருந்தன. எனக்கு அதை முழுமையாகக் கேட்பதில் பொறுமை இருக்காது.

Continue reading

மா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்

01pic-269x300மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் இடம் 1980களின் இறுதியில் வலுவாக உருவானது. 1950களில் மலேசியா வந்த கு.அழகிரிசாமி இந்நாட்டில் அதுவரை இருந்த சிறுகதைப் போக்கின் உரத்த குரலையும் கருத்துப் பிரதிநிதிகளின் உரையாடல்களையும் விமர்சித்ததிலிருந்து மொழியின் கலை வடிவத்துக்கான முதல் விமர்சனக் குரலை இம்மண்ணில் பதிவு செய்தார் என எடுத்துக்கொண்டால் அதன் நீட்சியாக 1980களில் எழுந்த குரல் சண்முகசிவாவினுடையது.

Continue reading

பிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண ஆளுமை

“யார்தான் சாக முடியும்? உடம்பு மண்ணுக்குப் போறது, சாவா? நினைவுகளுள்ள மனுஷர் என்னைக்குமே ஜீவிக்க முடியுமே… அதுதான் அமரத்துவம்.” – பிரபஞ்சன் (அமரத்துவம் சிறுகதையில்)

பிரபஞ்சன் 01ஓர் எழுத்தாளர் இறந்தவுடன் ஏற்படும் வெறுமையின் தவிப்பில் அவரது வாசகர்கள் பல சமயங்களில் மிக அதிகமாகவே அவ்வாளுமையைக் கொண்டாடித் தீர்த்துவிடுவதுண்டு. படைப்புகளின் எண்ணிக்கை, அந்த எழுத்தாளர் என்னவாக வாழ்ந்தார், நட்பில் அவர் காட்டிய நெருக்கம், இலக்கியத்தில் நேர்மை, சமரசமற்ற போக்கு, எளிமை என அனைத்துமே கலந்த நினைவுகள் உருவாக்கும் சமநிலையற்ற மனம், மிதமிஞ்சிய சொற்களால் அவரைப் போற்றத் துடிக்கும். இலக்கியவாதி கொண்டாடப்பட வேண்டியவன்தான். அதுவும் கடைசிக் காலம் வரை இலக்கியத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த பிரபஞ்சன் போன்ற ஆளுமைகள், இளம் தலைமுறையினருக்கு என்றுமே நல்லுதாரணங்கள். ஆனால் ஓர் இலக்கிய வாசகனின் கவனம் இலக்கியவாதியின் மரணத்திற்குப் பின்பும் அவரது படைப்பில்தான் குவிந்திருக்கும். அதன் வழியாக மட்டுமே அவன் அவரது ஆளுமையைத் தனக்குள் சமநிலையுடன் கட்டமைப்பவனாக இருக்கிறான்.

Continue reading

கண்டநற் சக்திக் கணமெலாம் நான்

01இதுவும் மற்றுமொரு நாள்தான் எனும் தத்துவத்தையெல்லாம் நான் புதிய ஆண்டின் தொடக்கத்தில் சட்டை செய்வதே இல்லை. நான் இந்து புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு என எதையும் கொண்டாடுபவன் அல்ல. எந்த மத, இன பண்டிகைகளையும் விரும்புவதும் இல்லை. ஆனால் வருடத்தின் முதல் திகதியை ஒரு பண்டிகையைப்போல அவ்வளவு மெல்ல ரசித்து நகர்த்துவேன். எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்கலாம் என்றும் எல்லா கவலைகளும் தீர்ந்துவிட்டது என்றும் இனி எல்லாம் நலமாக நடக்கும் என்றும் நானே எனக்குள் சொல்லிக்கொள்வேன். புதிய சட்டை போட்டுக்கொள்வேன். அது தோலை நீக்கி புதுத்தோலை போர்த்திக்கொண்டதுபோல தோன்றும். புதிய வருடத்தின் மற்றுமொரு உற்சாகம் கடந்து சென்ற வருடத்தை முழுக்க அலசிப்பார்ப்பதில் தொடங்கும். அநேகமாக அந்த நாள் முழுவதும் அவ்வாறு கடந்தவற்றை எண்ணி அவற்றை ஒரு கனவுபோல கடப்பதிலேயே முடியும். அக்கனவு புதிய வருடத்தை கொஞ்சம் கவனமாக நகர்த்திச் செல்ல உதவக்கூடியதாக மாறும்.

Continue reading