எழுத்தும் வாழ்வும் : மா.சண்முகசிவா கடிதம்

அன்பு நவீன்,

ஐயா ரெங்கசாமியும் இளங்கோவனும் நேரெதிர் ஆளுமைகள். அந்த சந்திப்பு எவ்வளவு அழகாக இருந்திருக்கும். அன்பும் மரியாதையும் கூடி வந்த அந்த உறவில் வேறுபட்ட பார்வைகள் கூட நெகிழ்ந்து கலக்கும் தருணங்கள் இருந்திருக்கும் . அதை பதிவு செய்திருக்கலாம். அது போலத்தான் சுவாமியுடனான சந்திப்பும் இருந்திருக்கும் . சில நேரங்களில் சந்திப்பு பேச்சு என்பது வெறும் கருத்துப்பரிமாற்றம் மட்டுமல்ல அதற்கும் மேலாக அங்கே ஒரு உறவு மலர்கிற தருணம் அது. நவீன் போன்ற ஒரு நுட்பமான கலைஞானால் மட்டும்தான் அதை எழுத்துக்குள் கொண்டுவர முடியும்.

மா.சண்முகசிவா

அன்பு டாக்டர்,

நீங்கள் இத்தொடரை வாசிப்பது மகிழ்ச்சி.  பொறுப்புணர்வு கூடுகிறது. நிச்சயம் அதை பதிவு செய்கிறேன். அடுத்தடுத்தப் பகுதியில் நிச்சயம் அவ்வாளுமைகளின் உரையாடலைப் பதிவு செய்வேன்.

நவீன்

(Visited 73 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *