கடிதம்/எதிர்வினை

Sikandi Reading Experience – The magnificence of motherhood (Vasanth)

Dear Ma Naveen,

Myself Vasanth from Cuddalore. I completed reading Sikandi last night. I thought I could write about my reading experience.

My personal favourite is Leo Tolstoy, and Jeyamohan. I have almost read all fictional works of Je including Venmurasu. So, during this letter let me share how Sikandi impacted me relative to my favourite author’s works.

Continue reading

ஆகவே செயல் புரிக!

விஜயலட்சுமி

அண்ணே வணக்கம். சற்று முன்னர் முகநூலில் அண்ணன் எழுதிய பதிவை வாசித்தேன். எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் கோபப்படமாட்டீர்கள் என நம்புகிறேன். நமது தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காப்பாற்ற போராடும் சிலரை மனமுவந்து பாராட்டும் தாங்கள், ஏன் __________ போன்ற சிலரை ஏசுகிறீர்கள்? அவர்களும் தமிழ் வளரவும் செழித்தோங்கவும்தானே பாடுபடுகிறார்கள். ஏன் இந்த பாராபட்சம்? உங்கள் விமர்சனத்தால் ____________ போல சில மனமுடைய வாய்ப்புண்டு. அவர்கள் செயல்படாவிட்டாலும் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் இழப்புதானே. நான் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு தாங்கள் பதில் சொல்லவில்லை. வாய்ப்பிருந்தால் சொல்லவும். என் புலன எண்ணுக்கும் __________ அனுப்பலாம்.

குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

Continue reading

வேம்படியான் : கடிதங்கள் 4

வேம்படியான் சிறுகதை

நவீன்,


இரண்டு காரணங்களுக்காக இது குறிப்பிடத் தக்க சிறுகதை. ஒன்று பொருள் மயக்கம் வெளிப்பட்ட விதம், மற்றது திகில் அனுபவத்தை மீறி நிகழ்ந்த கண்டறிதல். நிஜம் கற்பனையும் எல்லைகளை அழித்துக் கொள்ளுதல் நம்முள் எங்கெங்கு நிகழ்கிறது எனப் பார்த்தால் ஆச்சரியப் படுவோம். 

Continue reading

வேம்படியான் : கடிதங்கள் 3

வேம்படையான் சிறுகதை

அன்புள்ள அண்ணன் நவீனுக்கு,

பேய்க்கதைகள் விரும்பி படித்த காலக்கட்டம் ஒன்றிருந்தது. ஜேம்ஸ் லீயின் மிஸ்டர்.மிட்நைட் அத்தியாய வரிசை அதில் பிரதானம். திகிலுக்காகவும் மர்மம் வேண்டியும் புரட்டிய ஏடுகள் பெரும்பாலும் எதிர்ப்பார்த்ததை ஏமாற்றியதில்லை. காட்சி ஊடக வரிசையும் இதில் விதிவிலக்கன்று. நண்பர்களுடனான இரவரட்டையின் போதும் இத்தலைப்பு வந்துவிடுவதுண்டு. பக்கங்களுக்குள்ளிருந்தும் திரையொளிக்குள்ளிருந்தும் பேச்சொலிக்குள்ளிருந்தும் நகர்ந்து இடைமனவெளியில் அவற்றின் அந்தரங்கத் தொடர்ச்சியை பார்த்த, படித்த, கேட்ட மட்டில் உணராத நாளும் இல்லை.

Continue reading

வேம்படியான் : கடிதங்கள் 2

வேம்படியான் சிறுகதை

வணக்கம். கதையைப் படித்துவிட்டேன். பிறருக்கு சிரிக்கச்சிரிக்க சொல்கிற கதையை துயரத்துடன் அசைபோட்டுப் பார்க்கும் தருணமே வாழ்வில் மிகப்பெரிய துரதிருஷ்டமான தருணம். அந்த பலவீனமான தருணம் இல்லாததை இருப்பது போலவும் இருப்பதை இல்லாததுபோலவும் மாற்றிவிடுகிறது. மீட்சி அடைய விரும்பாத மனம் ஒரு கட்டத்தில் அதிலேயே திளைக்கத் தொடங்கிவிடுகிறது. நல்ல கதை. வாழ்த்துகள்.

பாவண்ணன்

Continue reading

வேம்படியான் : கடிதங்கள் 1

வேம்படியான் சிறுகதை

அன்பு நவின்,

வேம்படியான் குறித்த அறிவிப்பு வந்த நாளில் இக்கதையை வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்து வைத்தேன். இன்று வாசித்தேன். இப்படி ஒரு பேய்க்கதையை வாசித்து பல நாட்களாகிவிட்டது. ஆனால் உங்களின் ‘பூனியான்’ சிறுகதை போலவே இது உளவியல் சார்ந்த சிக்கலா? அல்லது உண்மையான பேயா? எனும் சிக்கலான இடத்திற்கு வாசகனைத் தள்ளி விட்டுள்ளீர்கள்.

Continue reading

வணிக எழுத்தாளனாக இருப்பதில் என்ன தவறு?

இதழும் இயக்கமும் எழுத்தாளனும்

//ஒருவன் வணிக எழுத்தாளனாக இருப்பதில் என்ன தவறு// இந்த சந்தேகம் எனக்கு இன்றும் இருக்கிறது. இது ஒரு form of expression தானே? ஏன் எனக்கு பிடித்ததை எழுதக்கூடாது? நான் எழுதுவது இலக்கியம் என்று சொல்லிக்கொள்ளாத வரையில், (விமர்சகர்களின்  விமர்சனமெல்லாம் பிரச்சனை இல்லை, வணிக இலகியம் என்பதை உணர்ந்து எழுதுகிறேன் என்பதால்)

ஹேமா, சிங்கப்பூர்

Continue reading

இதழும் இயக்கமும் எழுத்தாளனும்

ஜூன் 18இல் எழுதிய கட்டுரை குறித்து சில நண்பர்களிடம் இருந்து கேள்விகள் வந்தன. “அதெப்பாடி… இதழ்களும் இயக்கங்களும் ஒருவரை எழுத வைத்து கஷ்டப்பட்டு எழுத்தாளராக உருவாக்குகின்றன. ஆனால் தன்னை யார் உருவாக்கினார் என எழுத்தாளர்தான் முடிவு செய்வாரா? அப்படியானால் அந்த எழுத்தாளர் தனது அரசியல் நிலைபாட்டிற்கு ஏற்ப எதையும் மாற்றிச் சொல்லக்கூடும் அல்லவா? ஒருவேளை ஓர் எழுத்தாளர் வாயையே திறக்கவில்லை என்றால், ஆய்வாளர்கள் அவர் எழுதிய படைப்புகளைக் கொண்டே அதை முடிவு செய்யலாம் அல்லவா?”

Continue reading

பொன் கோகிலம், தமிழ் விக்கி, சில தெளிவுகள்

இன்று எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் பொன் கோகிலம் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு வரி இவ்வாறு அமைந்துள்ளது.

‘மூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் மறைவிற்குப் பின்னர், மலேசிய எழுத்துச்சூழலில் புதிய அல்லது அறிமுக எழுத்தாளர்கள் உருவாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.’

Continue reading

மலேசிய யோக முகாம் 2024 – கணேஷ் பாபு

லூனாஸ் மாரியம்மன் கோயில் முன்புறம்
லங்கேஷ் & ம.நவீன்

யோக ஆசிரியர் சௌந்தர்ஜி அவர்களுடன் இதற்கு முன் ஓரிரு முறை பேசியிருந்தாலும் அவரிடமிருந்து யோகம் கற்கும் வாய்ப்பு இப்போதுதான் வாய்த்தது. மலேசியாவில் யோக முகாம் என்று நவீன் அறிவித்ததும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொண்டேன். மே மாதம் 25,26, 27 ஆகிய தேதிகளில் இந்த யோக முகாம் கூலிம் பிரஹ்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெற்றது. சிங்கப்பூரில் இருந்து நான், லதா மற்றும் லங்கேஷ் ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டோம்.

Continue reading