கவிதை : பறவை

mmமின்கலம் தீர்ந்துவிட்ட மடிக்கணினியை
வேறெதுவும் செய்யத்தோன்றாமல்
வலதுபுறம் திரும்பி
சன்னலைப்பார்க்கிறேன்.
இரண்டு தலைகள் நுழையும் அளவில் வானம்.
ஒரு பறவை இந்த மூலையில் தொடங்கி
அங்கே சென்று மறையும் வரை
இறக்கையைச் சிலதரம் அசைத்தது.
மின்கலம் தீர்ந்த மடிக்கணினியை
ஓரிருதரம் மூடி மூடி திறந்தேன்.

(Visited 275 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *