கடவுள் விட்டுச்சென்றகோப்பையில்
இரண்டு சொட்டு சாராயம்
மீந்திருந்தது.
நான் முதல் சொட்டை பருகினேன்.
காலமற்ற காலத்தின்
கடைசி பிரஜையாய் நடமாடத் தொடங்கினேன்
நிறையமலைகளில் ஏறினேன்
நிறையகடல்களைக் கடந்தேன்
சைத்தான் குகைகளுக்குள் சஞ்சாரம் செய்தேன்
உச்சி மரத்தில் ஒற்றை ஆளாய்
ஓங்காரம் சொன்னேன்
இல்லாதமொழியில் இயல்பாகப் பேசினேன்
தாளங்கள் தப்பியஇசை எழுப்பினேன்
உடலை மடக்கி நடனம் செய்தேன்
கலைப்படைந்து வீழ்ந்த
என்னருகில்
கடவுள் விட்டுச்சென்றகோப்பையில்
மற்றுமொரு சொட்டு சாராயம்
மீந்திருந்தது.
(Visited 82 times, 1 visits today)