எனக்கு முன் இருந்தவனின் அறை

உடனடியாக அறையை மாற்றவேண்டும் என முடிவெடுத்திருந்த இந்த நாள் இரவில் ஏன் திடீரென விழிப்பு வந்தது என்று தெரியவில்லை. நான் இவ்வளவு நேரம் உறங்கிதான் இருந்தேனா எனக் கூட சந்தேகம் எழுகிறது. உறங்கியதற்கான எந்த அறிகுறியுமற்று மிகுந்த விழிப்பு நிலையில் என் மூளை இயங்கிக் கொண்டிருந்தது. சோர்வின் சுவடு தெரியாமல் நெடுநேரம் உழைத்த சுறுசுறுப்பின் பிரகாசமாய் சுற்றி நடப்பதை மனம் கவனித்துக் கொண்டிருந்தது. முகத்தில் எண்ணைப்பசை… மூக்கு இடுக்குகளில் பிசு பிசுப்பு…. கண்ணோரத்தில் ஊளை…. உதடுகளின் இட வலத்தில் காய்ந்து கெட்டியாயிருக்கும் வெள்ளைத் திரவம் என எதுவுமே அற்ற முதல் விழிப்பாகத் தோன்றியது. இரண்டு பேர் கால் கைகளை `பப்பரபே’ என விருத்துப் படுத்தவுடன் நிரைந்து விடும் இந்த வாடகை அறையில் இது போன்ற உறக்கமற்ற நிலை பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

Continue reading

வேதாளம் சொன்ன கதை

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் வேதாளத்தைத் தூக்கித் தோள்மீது போட் டான். எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரனின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் சிக்கிச் சின்னா பின்னமாகிய வேதாளம் அப்போதுதான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. விக்ரமாதித்தனின் தொல்லை தாங்காமல் வேதாளம் கடுப்பாகிக் கதை கூறத் தொடங்கியது…

விக்ரமாதித்தனே உன் முயற்சியை மெச்சினோம். ஆனா, இப்படித் தூங்கும்போது தொந்தரவு பண்றதுதான் உங்கிட்ட எனக்குப் பிடிக்காத பழக்கம். என்னை மட்டுமல்ல இந்தச் சமுதாயத்தையும் நீ எழுப்ப நினைச்சா, நீ ஐ.எஸ்.ஏ வுல உள்ள போறது திண்ணம். அதனால, யாரையும் எப்பவும் எழுப்ப முயற்சி பண்ணாத. முடிஞ்ச வரைக்கும் தமிழ்,இலக்கியமுன்னு பேசி பணம் சம்பாரிச்சிக்கோ. ஆனா, உம்மவன மட்டும் தமிழ்ப் பள்ளியில போட்டுறாத. ஒரு நல்ல தலைவராக இதுதான் முதல் குணம்.

Continue reading

வழக்கம்போல…

கட்டணம் பற்றிய கவலையில்லாமல்
இன்றிரவும் நாம் பேசுவோம்

நமது
பிரிவுகுறித்தான காரணங்களை
உன்னை சிதைத்த என் வார்த்தைகளை
என்னை உசுப்பிய உன் செயல்களை
Continue reading

காமம்

காமம் வெல்வது பற்றி
காதலி
சொல்லிக்கொண்டிருந்தாள்

முதலில் தனது
முகம் மறக்கச் சொன்னாள்
அதில் துளைகள் அதிகம் இருப்பதாகவும்
அவைகளில் அழுக்குகள்
வெளியேறக்கூடுமென்றாள்

Continue reading

சிதைவின் நகர்வு

ஓர் அன்பு நம்மை நிராகரிக்கும்போதும்
அன்பின் நுழைவாயில் அடைப்படும்போதும்
செய்வதற்கு ஒன்றும் இல்லை.

அன்பை வேண்டி பெறுதல் பிச்சையாகிவிடும்

தளர்ந்தமுகம் கழிவிரக்கத்தை ஏற்படுத்தலாம்

சகஜமாக சிரிப்பது அன்பை பரிகசித்ததாகிவிடலாம்
நமது அன்பின்மீது நமக்கே சந்தேகம் ஏற்படலாம்

நிராகரித்து நகரும் அன்பை பின் தொடரவும் இயலாது
அது பாதைகளற்ற பெருவெளியில் பயணிக்கக்கூடும்

Continue reading

இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை – ம. நவீன்

மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் அடையாளம் ம. நவீன். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து என இடையறாது எழுதிக்கொண்டிருக்கும் நவீன் ‘வல்லினம்’ (vallinam.com.my) இணைய இதழின் ஆசிரியராகவும் ‘முக‌வ‌ரி’ எனும் மாத‌த்திற்கு இரு முறை வெளிவ‌ரும் இத‌ழின் ஆசிரியராகவுமிருக்கிறார். ‘வல்லினம்’ பதிப்பகத்தின் மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த‌ ஆண்டுத் தொட‌க்க‌த்தில் சிலாங்கூர் மாநில‌ அர‌சால் வழங்கப்ப‌ட்ட‌ தமிழ் மொழிக்கான ‘இள‌ம் க‌விஞ‌ர் விருது’ நவீனுக்குக் கிடைத்த‌து. ‘தாமான் மெலாவாத்தி’ த‌மிழ்ப்ப‌ள்ளியில் த‌மிழ் ஆசிரிய‌ராக‌ப் பணிசெய்யும் நவீனுடனான இந் நேர்காணல் மின்னஞ்சலூடாகவும் தொலைபேசி வழியேயும் நிகழ்த்தப்பட்டது.

– ஷோபாசக்தி
18.07.2010 Continue reading

என‌து நேர்காண‌ல்

மாற்றுப்பிர‌தி எனும் த‌ள‌த்தில் ந‌ண்ப‌ர் றியாஸ் குரானா நேர்காண‌ல் ஒன்று செய்தார். என‌து சில‌ க‌ருத்துக‌ளைப் ப‌கிர‌ அப்பேட்டி வாய்ப்பாக‌ இருந்த‌து.
ந‌ன்றி,
ம‌. ந‌வீன்

01.  உங்களை கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள் தோழர்…

த‌மிழ்ப்ப‌ள்ளி ஆசிரிய‌னாக‌க் க‌ட‌ந்த‌ 5 ஆண்டுக‌ளாக‌ப் ப‌ணியாற்றுகிறேன். ஆசிரிய‌ர் தொழிலைப் பிடித்துத் தேர்வு செய்ய‌வில்லை. எதிர்கால‌ ம‌லேசிய‌ ச‌ந்த‌தியின‌ரையும் இந்த‌க் க‌ல்வித் திட்ட‌ம் சிந்திக்கும் ம‌னித‌ர்க‌ளாக‌ உருவாக்கும் வ‌கையில் அமைக்க‌ப்ப‌ட‌வில்லை. உய‌ர்ர‌க‌க் கூலிக‌ளை வேண்டுமானால் உருவாக்க‌லாம்.இந்நிலையில் ம‌லேசிய‌ அடித்த‌ட்டுத் த‌மிழ் ம‌க்க‌ளின் ம‌ன‌ம் செய‌ல்ப‌டும் வித‌த்தை அறிந்து கொள்ளும் க‌ட‌மை ஓர் எழுத்தாள‌னாக‌ என‌க்கு உண்டு என‌ ந‌ம்புகிறேன். தீவிர‌மாக‌ச் சிந்திக்கும் போக்கு உள்ள‌ ஓர் ச‌முதாய‌த்தை உருவாக்க‌த் த‌மிழ்ப்ப‌ள்ளி என‌க்கு ஓர் க‌ள‌மாக‌ உள்ள‌து. ஏற‌க்குறைய‌ நான் செய‌ல்ப‌டும் இல‌க்கிய‌ம், இத‌ழ், அக‌ப்ப‌க்க‌ம் என‌ அனைத்துமே இந்த‌ச் சிந்த‌னையை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌தே. Continue reading